Thursday, May 3, 2007

வெறுமை


ஒரு தொலைபேசி உரையாடலின் முடிவில்
நாம் இருவரும்
சண்டையிட்டுக் கொண்டோம்

இருபத்து நான்கு யுகங்களாய்
இருவரும் பேசிக்கொள்ளவில்லை

மறுநாள் நான் வரும் வழியில்
ஒரு சாலை சந்திப்பில்
எனக்காக காத்திருந்தாய்!

உன்னை மறைத்துக் கடந்து செல்லும்
வாகனங்களுக்கிடையே
உன் புன்னகை மட்டும்
என்னிடம் வந்து சமாதானம் பேசியது...

அதன் பின்னாக...
அந்தச் சாலையைக் கடக்கும் போதெல்லாம்
நீ நின்றிருந்த இடத்தைக்
கண்கள் அன்னிச்சையாய் நோக்குகின்றன..

எப்போதும் போல
அது வெறுமையாய் இருக்கிறது
நீ இல்லாத என் வாழ்க்கையைப் போன்றே.

3 comments:

Ken said...

வாத்தியாரம்மா நிஜம் சொல்லனும்னா பிரிவுல இருக்கிற எனக்கு நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்தீட்டீங்க வாழ்த்துக்கள்

Ken said...

Nice One

MSK / Saravana said...

மனசுக்கு ரொம்ப கஷ்டமாதான் இருக்கு..