Thursday, May 3, 2007

நாவினால் சுட்ட வடு..


சொல்ல நினைத்து
சொல்லாமல் விட்ட வார்த்தைகளில்...

கேட்க நினைத்து
கேளாமல் விட்ட கேள்விகளில்..

அருகிலிருந்தும் மெளனமாய்க் கடத்திய
நிமிடங்களில்...

தவறான புரிதல்களால்-அன்பைத்
தவற விட்ட தருணங்களில்...

இன்னும் உள்ளாறாமல் இருக்கின்றன
நம் நட்பின் காயங்கள்!

1 comment:

தென்றல் said...

அருமை! நல்லா இருக்குங்க!