Thursday, May 3, 2007

எப்போது வருவாய்?

நானிருக்கிறேன் என்று
கைப்பிடித்து அழைத்து வந்து
நடுவழியில் எங்கோ
விட்டு விட்டுப் போய்விட்டாய்..

திருவிழாக் கூட்டத்தில்
தொலைந்துவிட்ட குழந்தையாய்
அடையாளங்களை மறந்து
அழுது கொண்டிருக்கிறேன்..

எனினும்..
நீ வருவாய் என்ற
நம்பிக்கை மட்டும்
இன்னும் மிச்சமிருக்கிறது.

No comments: