Thursday, May 3, 2007

இதை படிக்காதீங்க ப்ளீஸ்!

தெரியுமே! எத செய்யாதே னு சொல்றாங்களோ அத மொதல்ல செய்றது தானே நம்ம பாரம்பரிய வழக்கம்!! சரி வந்தது வந்துட்டிங்க... படிங்க பரவால்ல.

இதுவரை.. "என்னடா இது? சரியான அழுமூஞ்சிப் பொண்ணா இருக்கே? இப்டி புலம்பிட்டே இருந்தா பொழப்ப எப்ப பாக்கறது" னு யாராச்சும் எனக்காக கவலைப்பட்டிருந்தா... (டேங்க்ஸ்!) அவங்களுக்காக இத எழுதறேன்.
இழவு வீட்ல என்ன தான் மாஞ்சு மாஞ்சு கட்டிப் பிடிச்சு ஒப்பாரி வெச்சாலும்... மூக்கு சிந்தற gap ல 'என்னக்கா சேல புதுசா? இத நீ கட்டி நான் பாத்ததே இல்லையே?' னு பரஸ்பரம் விசாரிச்சுக்குவாங்க பாத்திருக்கிங்களா? அந்த மாதிரி.. மூலைல உக்காந்து அழுதிட்டிருந்தா உடைஞ்சது ஒட்டவா போகுது.. கிடைக்கிற gap ல நாமும் கொஞ்சம் கலாய்ச்சுக்கலாம் னு முடிவு பண்ணியிருக்கேன்.

நான் கூட மொதல்ல யோசிச்சேன்.. சோகமா பாலைத்திணை-னு தொடங்கிட்டமே.. சந்தோசத்த சொல்ல இன்னொன்ணு ஆரம்பிக்கலாமானு.
உடனே.."காயத்ரி அடக்கி வாசி" னு ஒரு அசரீரி கேட்டுச்சு.(எனக்கு அப்பப்ப இப்டி கேக்கும்!) சரீனு இதுலயே சொல்ல முடிவு பண்ணிட்டேன். "குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிஞ்சது" தானே பாலை? அதனால திணை அப்டியே தான் இருக்கும். இங்க பருவங்கள் வேணா மாறலாம்.

ஆனா, எத சொல்றது.. எப்ப சொல்றது.. எப்டி சொல்றதுனு இன்னும் முடிவு பண்ணல. அதனால நீங்க எல்லாரும் எதுக்கும் கொஞ்சம் அலர்ட்டாவே இருங்க!!

மறுபடி வருவேன்..(கொஞ்சம் ஒவரா போய்டுச்சோ?)

3 comments:

Anonymous said...

பின்னூட்டம் போட்டா ரிலீஸ் பண்னுவீங்களா ???

Unknown said...

Mokka too mucha irukke

MSK / Saravana said...

ROMBA OOOOOOVEERR..

:)