Thursday, May 3, 2007

எங்கே நான்?

என் ஆற்றலை
ஆளுமையை
கர்வத்தை
என்னைப் பற்றிய
என் மதிப்பீடுகள் அனைத்தையும்
உலக வரைபடமாய் சுருட்டி
உன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாய்..

எனக்குள் நானே
தேடிக் கொண்டிருக்கிறேன்..
என்றோ நானாக இருந்த
என்னை!

1 comment:

AKV said...

நட்போ, காதலோ - எதன் காரணமாகவும் தன்னை இன்னொருவரின் ஆளுகைக்கு உட்கொண்டவராக தாமே கருதிக் கொள்வதும் தன்னைத் தானே தேடுவதும் வேடிக்கையே !!!..

சிந்திக்கும் ஆற்றலும், காதல் / நட்பு ணர்வும் ஒரு போதும் சேர்ந்து காணப்படுவதில்லை... :-(