Tuesday, September 2, 2008

குழந்தையின் சுவர்க்கிறுக்கல்களைப்
போலிருந்தது உன் கோபம்....
எரிநட்சத்திரங்களென்றும்...
ஈரம் பொசிந்த
மழைக்காளான்களென்றும்...
காற்றசைத்த அதிர்வில்
கிளைகள் தவறவிட்ட
மலர்களென்றும் கூட
முன்னொரு முறை
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீ கோபிக்கிறாய்..
நீளத்துவங்குகிறது என்
ஆச்சரியங்களின் பட்டியல்!

43 comments:

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

Thamiz Priyan said...

இன்னும் பட்டியல்களில் நீண்டு கொண்டே தான் செல்லும்... மகிழ்வுகளுடன்... வாழ்த்துக்கள்!

நிலா said...

ஆமா கேக்க மறந்த கேள்வி ஒண்ணு. இனியும் அழுவாச்சிகவுஜல்லாம் எழுத மாட்டீங்கதானே?

Bee'morgan said...

நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டு வந்திருக்கீங்க.. :) தங்களை வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறோம்..
குழந்தையின் சுவர்க்கிறுக்கல் அழகான உவமை..

Thamiz Priyan said...

கவுஜ எழுதினா தலைப்பு வைங்க அக்கா! இப்படியா தமிழ் மணத்தில் இருந்து எப்படி வருவாங்க?.... ;)

காயத்ரி சித்தார்த் said...

யப்பா! சாமிகளா.. கும்மறதுக்குன்னே காத்துகிட்டிருப்பீங்களா.. :(

நன்றி தமிழ்ப்பிரியன்..

காயத்ரி சித்தார்த் said...

//இனியும் அழுவாச்சிகவுஜல்லாம் எழுத மாட்டீங்கதானே?//

:)

காயத்ரி சித்தார்த் said...

//தங்களை வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறோம்..
குழந்தையின் சுவர்க்கிறுக்கல் அழகான உவமை..//

நன்றி Bee'morgan! :)

MyFriend said...

//Untitled//

யக்கா.. பெயர் வைக்க டைம் இல்லையா?

ஹீஹீ

MyFriend said...

சரி சரி.. தலைப்புல என்ன இருக்கு கவிதைதான் முக்கியம்ங்குறீங்களா? அதுசரி!

ஆனா எனக்கு புரிஞ்சிடுச்சுன்னு சொன்னேனா நீங்க என்னை ஓட ஓட துரத்துவீங்க. அதனால எப்போதும் போல புரியல புரியல புரியல..

:-))))))

MyFriend said...

//நிலா said...

ஆமா கேக்க மறந்த கேள்வி ஒண்ணு. இனியும் அழுவாச்சிகவுஜல்லாம் எழுத மாட்டீங்கதானே?//

அவங்களே மறந்து இருக்காங்க.. நீ ஏன்ம்மா ஞாபகப்படுத்துற.. பாரு.. இப்பவே கையில பேனா எடுத்துக்கிட்டு ஒரு அழுகாச்சி காவியம் எழுதுறேன்னு நிக்குறாங்க. :-(

MyFriend said...

//தமிழ் பிரியன் said...

கவுஜ எழுதினா தலைப்பு வைங்க அக்கா! இப்படியா தமிழ் மணத்தில் இருந்து எப்படி வருவாங்க?.... ;)//

ரிப்பீட்டேய்... ;-)

MyFriend said...

//காயத்ரி said...

யப்பா! சாமிகளா.. கும்மறதுக்குன்னே காத்துகிட்டிருப்பீங்களா.. :( //

நாங்க கும்முறதுக்குதானே நீங்க எழுதுறீங்க? இல்லையா? :-))

Sundar சுந்தர் said...

//குழந்தையின் சுவர்க்கிறுக்கல்களைப்
போலிருந்தது உன் கோபம்....//
ரொம்ப அருமையான உவமை! நச்சுன்னு இருக்கு.

ஆயில்யன் said...

யக்கோவ்!

பேரு வைக்கிறத்துக்கு டைம் இல்லியா??????

ஆயில்யன் said...

//நீளத்துவங்குகிறது என்ஆச்சரியங்களின் பட்டியல்!//


பட்டியல் வாசியுங்கள் :)

வால்பையன் said...

//என்
ஆச்சரியங்களின் பட்டியல்!//

அவ்வளவு தானா பட்டியல்!
சிறுசா போச்சே!

அப்புறம், அந்த படத்துக்கு இந்த கவிதையா, இல்ல கவிதைக்கப்புறம் இந்த படம் கிடைச்சதா

MSK / Saravana said...

இதுதாங்க.. இதைப் போன்ற கவிதையை தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்தேன்..

அருமையான கவிதை..

உங்களுடைய பாதி பதிவுகளை படித்து விட்டேன்.. இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது..

Unknown said...

good to see ur post....welcome back..hope everything is fine..

Anonymous said...

Wow really superb... After a long break...I've read all your post!

குப்பன்.யாஹூ said...

நல்ல கவிதை, ஏன் பாதியோடு முடித்து விட்டீர்கள்.
ஆச்சரியங்களின் பட்டியலில், கும்மிகள் இல்லாத பதிவும் உண்டா.

வாழ்த்துக்களுடன்
குப்பன்_யாஹூ

குப்பன்.யாஹூ said...

இனனிக்கு தினகரன் செய்தி தாளில் (02.09.08) ஒரு கல்லூரி பேராசிரியை டாக்டோரடே (அண்ணாமலை பல்கலை கழாகம் , மாணவிக்கு (GAYATHRI) சரியான ஒத்து உழைப்பு தரவில்லை, தற்காலிக பதவி நீக்கம் என்று செய்தி வந்ததே.

அந்த பேராசிரியை உங்கள் கய்டா.(UNGAL GUIDAA).

i POSTED FOR JOLLY PLEASE, NOT WITH THE INTENTION TO HURT ANY PERSON PLS.

குப்பன்_யாஹூ

Nilofer Anbarasu said...

நல்ல கவிதை, ஒரு தலைப்பு வைத்திருக்கலாமே......Google readerல் title unknown என்று வருகிறது.

King... said...

எழுதியதில் மகிழ்ச்சி...:)

priyamudanprabu said...

நீ கோபிக்கிறாய்..
நீளத்துவங்குகிறது என்
ஆச்சரியங்களின் பட்டியல்!


..............
ஆச்சரிய பட்டுக்கிட்டே இருந்தா
நல்லா வாங்கி கட்டிக்க போறீங்க

காயத்ரி சித்தார்த் said...

//ஆனா எனக்கு புரிஞ்சிடுச்சுன்னு சொன்னேனா நீங்க என்னை ஓட ஓட துரத்துவீங்க. அதனால எப்போதும் போல புரியல புரியல புரியல..//

:)) சமத்துப் பொண்ணு..

காயத்ரி சித்தார்த் said...

சுந்தர், ஆயில்யன் நன்றி!

ராம் இந்த புன்னகைக்கு பொருள் என்னவோ?

வால்பையன்...
//அப்புறம், அந்த படத்துக்கு இந்த கவிதையா, இல்ல கவிதைக்கப்புறம் இந்த படம் கிடைச்சதா//

கவிதைக்கு தேடின படம் தான். கூகுளாண்டவர் அருள்!

காயத்ரி சித்தார்த் said...

தாரணிப்பிரியா, சரவணன், இனியவள்புனிதா (பேர் அழகா இருக்குங்க) நன்றி அன்பிற்கும் பாராட்டுதலுக்கும். :)

குப்பன்..

//இனனிக்கு தினகரன் செய்தி தாளில் (02.09.08) ஒரு கல்லூரி பேராசிரியை டாக்டோரடே (அண்ணாமலை பல்கலை கழாகம் , மாணவிக்கு (GAYATHRI) சரியான ஒத்து உழைப்பு தரவில்லை, தற்காலிக பதவி நீக்கம் என்று செய்தி வந்ததே.

அந்த பேராசிரியை உங்கள் கய்டா.(UNGAL GUIDAA).//

நான் அவளில்லை.. என் கைட் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். என் மாணவியைக் காணவில்லைன்னு செய்தித்தாள்ல அறிவிப்பு கொடுக்க இருக்கறதா கேள்விப்பட்டேன். ஒத்துழைப்பு குடுக்கலன்னு எனக்கு தான் கல்தா குடுக்கப் போறார். :(

காயத்ரி சித்தார்த் said...

Kannan Seetharamn said...

good to see ur post....welcome back..hope everything is fine..

நன்றிங்க. ரொம்பவே நல்லாருக்கேன்.

நன்றி ராஜா மற்றும் கிங்! (நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரே தானா??)

பிரபு...

//ஆச்சரிய பட்டுக்கிட்டே இருந்தா
நல்லா வாங்கி கட்டிக்க போறீங்க//

உங்களுக்கு இப்படி ஒரு ஆசையா? நல்லாருங்கப்பா. :)

குசும்பன் said...

ஹேப்பி மதர்ஸ் டே:))))

உங்களுக்குதான் கவிதாயினி அவர்களே!!!

குசும்பன் said...

நிலா said...
ஆமா கேக்க மறந்த கேள்வி ஒண்ணு. இனியும் அழுவாச்சிகவுஜல்லாம் எழுத மாட்டீங்கதானே?//

அதை இனி வேறு ஒருவர் எழுதுவார்:)
டீயும் விசம் ஆகுமோ என்று ஒரு தலைப்பு, ரசமும் நஞ்சாகுமோ என்று வெவ்வேறு தலைப்புகளில் பதிவு போடுவார் பாருங்க ஒருவர்:)))

குசும்பன் said...

சமீபகாலமாக ஏன் புது படம் ஏதும் பார்க்கவில்லையா?மொக்கை படங்களை மட்டும் தேடி தேடி பார்ப்பேன் என்று மாரியம்மனுக்கு நீங்க வேண்டிக்கிட்ட வேண்டுதல் என்ன ஆச்சு?

போய் குசேலன் பாருங்க, சத்யம் பாருங்க. இல்லை உம்மாச்சு மண்டையில் குட்டும்.

MyFriend said...

//குசும்பன் said...

அதை இனி வேறு ஒருவர் எழுதுவார்:)
டீயும் விசம் ஆகுமோ என்று ஒரு தலைப்பு, ரசமும் நஞ்சாகுமோ என்று வெவ்வேறு தலைப்புகளில் பதிவு போடுவார் பாருங்க ஒருவர்:)))//

ரிப்பீட்டேய். ;-)

குசும்பன் said...

திரும்ப படத்தில் நடிக்க வந்த சிம்ரனுக்கு கூட இம்புட்டு வரவேற்பு இல்லை பாலிமர் டீவி நியுஸ் வாசிப்பவருக்கு எம்புட்டு வரவேற்ப்பு.

குசும்பன் said...

மை ஃபிரண்ட் ::. said...
சரி சரி.. தலைப்புல என்ன இருக்கு கவிதைதான் முக்கியம்ங்குறீங்களா? அதுசரி!//

என்ன கொடுமைங்க இது தலைப்புதான் உள்ளே இருக்கு, கவிதைய காணும்?

Thamiz Priyan said...

///குசும்பன் said...

நிலா said...
ஆமா கேக்க மறந்த கேள்வி ஒண்ணு. இனியும் அழுவாச்சிகவுஜல்லாம் எழுத மாட்டீங்கதானே?//
அதை இனி வேறு ஒருவர் எழுதுவார்:)
டீயும் விசம் ஆகுமோ என்று ஒரு தலைப்பு, ரசமும் நஞ்சாகுமோ என்று வெவ்வேறு தலைப்புகளில் பதிவு போடுவார் பாருங்க ஒருவர்:)))///
'அங்கும், இங்கும்' பராக்கு பார்க்காமல் குசும்பனே திருமதி குசும்பனிடம் இதை எழுதச் சொல்லலாம்... அங்க திருவாளர் தானே சீப் குக்.. ;)))))

Anonymous said...

அது எப்படிங்க கோபம் ஆச்சரியக் குறியானது... ஆனாலும் வித்தியாசமான கற்பனைதான்...நம் அன்புக்குரியவர்கள் கோபப்பட்டால் ஆச்சரியம் தோன்றுமோ? அல்லது கோபமே வந்ததில்லையோ!

G3 said...

Marubadi unnoda kavithaigal and comments reply paaka [padikkavum dhaan ;) ] sandhoshama irukku da chellam.. :))))

chandru / RVC said...

sory,dis post s not up to ur standrds.
:( eamathitinga :(

நாமக்கல் சிபி said...

//உங்களுடைய பாதி பதிவுகளை படித்து விட்டேன்.. இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது..
//

விதி வலியதுன்னு வாத்தியாரய்யா சொன்னப்போ நான் நம்பவே இல்லை!

இப்பத்தான் நம்புறேன்!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அழகான கவிதை. ரசித்தேன்.

-ப்ரியமுடன்
சேரல்

J S Gnanasekar said...

கவிதையில் 'காலம்' சரியாகப் பதியப்படவில்லை என நினைக்கிறேன்.

"முன்னொரு முறை நினைத்திருக்கிறேன்" என்று இருந்திருக்க வேண்டும்.

-ஞானசேகர்

Gowripriya said...

குழந்தைகளின் செயல்கள் யாவும் அழகு.. அதை கோபத்துடன் நீங்கள் ஒப்பிட்டது பேரழகு.. படிச்சதும் சந்தோஷமா இருந்தது.. வாழ்த்துகள்