Saturday, June 9, 2007

தொலையாத தொலைவுகள்..

பேசிப் பேசித் தீர்த்தபின்பும்
பேச நினைத்த வார்த்தை ஒன்று
தொக்கி நிற்கிறது உதட்டில்
எப்போதும்...

உனக்கான என் கடிதங்களில்
முற்றுப்புள்ளிகளின் அருகே
தேங்கி நிற்கும் மெளனத்தை
படித்ததுண்டா நீ?

வட்டத்தின் முடிவைத்
தேடுவதையொத்து
உன்நினைவைப்
பற்றியலைகிறது என் இருப்பு..

பேச்சிலும்...
மடல்களிலும்...
நியாபகக் குப்பிகளிலும்...
இட்டு நிறைத்த பின்னும்
இன்னும் மிச்சமிருக்கிறது
காதல்!

சொல்லேன் எனக்கு?

இந்த தூரங்களை
எதனை இட்டு நிரப்ப?

13 comments:

அபி அப்பா said...

இதுவும் நல்லாத்தான் இருக்கு!

G3 said...

venaam.. naan appuram nakkala edhaavadhu solven.. nee vandhu irukkara konjoondu vaalaiyum cut panniduvennu merattuva... so naanum mathavangala pola kavidhai nalla irukkunnu solli appeate aayikkaren :)

ALIF AHAMED said...

பேசிப் பேசித் தீர்த்தபின்பும்
பேச நினைத்த வார்த்தை ஒன்று
தொக்கி நிற்கிறது உதட்டில்
எப்போதும்...
///

ஆமா இருக்காதா பின்ன...??

ALIF AHAMED said...

கவிதை எனக்கு பொருந்துகிறது..!!!!

என் வாழ்க்கையும் இப்ப இப்படிதான் இருக்கு..:)

குசும்பன் said...

"சொல்லேன் எனக்கு?

இந்த தூரங்களை
எதனை இட்டு நிரப்ப?"

நன்றாக இருக்கிறது..

குமரன் said...

//வார்த்தை ஒன்று
தொக்கி நிற்கிறது உதட்டில்
எப்போதும்...//

karthick told in Gokulathil seethai

" I love you " -

Ok. I find out.

Next question?

குமரன் said...

//உனக்கான என் கடிதங்களில்//

antha kalathu aala neenga?

you are saying letters?

MyFriend said...

//G3 said...
venaam.. naan appuram nakkala edhaavadhu solven.. nee vandhu irukkara konjoondu vaalaiyum cut panniduvennu merattuva...
//

ஏன் வம்பு.. கவிதை சூப்பரா இருக்கு. :-P

குமரன் said...

//இன்னும் மிச்சமிருக்கிறது
காதல்!//

கல்யாணம் முடிஞ்சா, அப்புறம் பத்தாது.

காயத்ரி சித்தார்த் said...

அட அதுங்காட்டியும் இத்தன கும்மியா? :(

//so naanum mathavangala pola kavidhai nalla irukkunnu solli appeate aayikkaren :) //

அம்மா தாயே! இதயே ஃபாலோ பண்ணு கண்ணு.. உனக்கு புண்ணியமா போவும்!

//என் வாழ்க்கையும் இப்ப இப்படிதான் இருக்கு..:) //

மின்னல்! அப்டியா சேதி? எப்ப ட்ரீட்டு?


நொந்தகுமாரன் நீங்க எதோ சொல்றீங்கன்னு புரியுது. என்ன சொல்றீங்கன்னு தான் புரியல! :)
//you are saying letters? //

ம்ம்.. ஈ-மெயில் னு கவிதைல போட்டா நல்லா இருக்காதே!

//ஏன் வம்பு.. கவிதை சூப்பரா இருக்கு. //

தங்கச்சி.. அந்த பயம் இருக்கட்டும். அந்த வாலுப்பொண்ணு கூட சேராத நீ!

மஞ்சூர் ராசா said...

சொல்லாத சொல் எது?

மெளனம்.....

manasu said...

//காதல் பிடிக்கும்.. ஒரு முறை கூட காதலிச்சது இல்ல//

ஈரோட்ல எல்லாரும் எத்தனை முறை காதலிப்பாங்க???

தயவுசெய்து காதலிச்சிருங்களேன்!!!

கவுத்திட்டீங்களே G3!!!

Anonymous said...

//உனக்கான என் கடிதங்களில்
முற்றுப்புள்ளிகளின் அருகே
தேங்கி நிற்கும் மெளனத்தை
படித்ததுண்டா நீ?//

These lines are excellent.

i enjoyed much - ranjith