Tuesday, March 25, 2008



யார் யாரிடமோ
உன் சாயல்களைப் பார்த்தபடி
வீடு வந்து சேர்ந்தேன்..
வீட்டிலிருந்த நீ
யாரோவாகியிருந்தாய்.

48 comments:

சுகுணாதிவாகர் said...

நல்லாயிருக்கு.

மலைவாசி said...

Wow ... superb ...

சென்ஷி said...

//யார் யாரிடமோஉன் சாயல்களைப் பார்த்தபடி வீடு வந்து சேர்ந்தேன்..வீட்டிலிருந்த நீயாரோவாகியிருந்தாய்.//

நல்லாயிருக்கு...

:))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

எத்தனை பேரை பார்த்து கடந்து வந்தாலும் நாம் நேசிப்பவரின் முகம் மறந்தா போகும்..?
:)

மறந்து போகும் அளவிற்கு இதில் காதல் தீவிரம் தெரிகின்றது... நன்றாக வந்திருக்கின்றது
- ரசிகவ் ஞானியார்

Unknown said...

9:30, 9:47 & 9:52 மூன்றும் நன்றாக இருந்தன. கவிதைத்திறன் தெரிகிறது, காயத்ரி. படைப்புகளுக்கு நன்றி.

MyFriend said...

//யார் யாரிடமோ
உன் சாயல்களைப் பார்த்தபடி
வீடு வந்து சேர்ந்தேன்..
வீட்டிலிருந்த நீ
யாரோவாகியிருந்தாய்.//

நல்லா இருக்கு. எப்போதும் உங்க கவிதை எனக்கு புரியாதே! இது புரியிற மாதிரி இருக்க்கே? ஏதாவது தப்பா புரிஞ்சிக்கீட்டேனோ? அதனால நீங்களே விளக்கம் கொடுத்துடுங்க. :-)

காயத்ரி சித்தார்த் said...

மலைவாசி.... ஆச்சரியமா இருக்கே? இன்னுமா பாலைத்திணையை ரெஃப்ரெஷ் பண்ணி பாக்கறீங்க? ஒரு வேளை எதிர்பாராமல் நடந்தா விபத்தோ?! :)

பாராட்டிற்கு நன்றி!

காயத்ரி சித்தார்த் said...

என்னது எல்லாரும் பேசி வெச்சிகிட்டு கமெண்ட் போடறீங்களா? சென்ஷி.. 'நல்லாயிருக்கு'க்கு ரிப்பிட்டேய்ய்ய் போடாம நீங்களே டைப்பினதுக்கு ஸ்பெஷல் நன்றி!

காயத்ரி சித்தார்த் said...

நிலவு நண்பன்...

//எத்தனை பேரை பார்த்து கடந்து வந்தாலும் நாம் நேசிப்பவரின் முகம் மறந்தா போகும்..?//

அச்சோ தப்பா புரிஞ்சுகிட்டீங்களே. :(
நான் இது வரை பார்த்தே இராத யாரோக்களில் எல்லாம் உன் முகம் தெரிகிறது.. நான் தினமும் பார்க்கும் உன் முகத்தில் யாரோ போன்ற அந்நியம் தெரிகிறது ன்னு அர்த்தம். 5 வரி கவிதைக்கு இம்புட்டு விளக்கம் தேவையா? அவ்வ்வ்

காயத்ரி சித்தார்த் said...

விஜய்.. சமீபமாய் அடிக்கடி வந்து போகிறீர்கள் போல! இந்த கவிதைகளுக்கு தலைப்பு வைக்க விருப்பமில்லை. அதனால் தான் பதிவிட்ட நேரம் மட்டுமே இருக்கிறது! நன்றி! வருகைக்கும்.. பாராட்டிற்கும்.

காயத்ரி சித்தார்த் said...

மைஃப்ரண்ட்..

//நல்லா இருக்கு. எப்போதும் உங்க கவிதை எனக்கு புரியாதே! இது புரியிற மாதிரி இருக்க்கே? //

செல்லம்.. எப்பவும் போல நீ புரிலன்னே சொல்லிருடா. நீ புரியுதுன்னு சொன்னாலே பீதி கிளம்புது எனக்கு. :)

நம்ம நிலவு நண்பனுக்கு சொல்லிருக்கேன்.. நீயும் இதைத்தான் புரிஞ்சிகிட்டியான்னு செக் பண்ணிக்கோ.

தமிழன்-கறுப்பி... said...

மைஃப்ரண்ட்..

//நல்லா இருக்கு. எப்போதும் உங்க கவிதை எனக்கு புரியாதே! இது புரியிற மாதிரி இருக்க்கே? //

செல்லம்.. எப்பவும் போல நீ புரிலன்னே சொல்லிருடா. நீ புரியுதுன்னு சொன்னாலே பீதி கிளம்புது எனக்கு. :)


இது நல்லாருக்கு...

MyFriend said...

அவ்வ்... எப்போதும் போல தப்பாதான் புரிஞ்சிருக்கேன். :-(

Unknown said...

Good to see ur post after a long time..

நிஜமா நல்லவன் said...

நானும் நல்ல இருக்குன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.
:)

நிஜமா நல்லவன் said...

கவிதையும் எழுதி பின்னூட்டத்தில் விளக்கமும் கொடுக்குறீங்களே நீங்க ரொம்ப நல்லவங்களா?

KARTHIK said...

நல்லாருக்கு.

LakshmanaRaja said...

நல்ல கவிதை.

சிங். செயகுமார். said...

:-)

நாடோடி இலக்கியன் said...

கவிதை நல்லாயிருக்கு...!

தமிழ் said...

கவிதையும், விளக்கமும் அருமை

கண்மணி/kanmani said...

காயூ சூப்பர்
ஆனா இது கல்யாணம் ஆனவங்க எழுத வேண்டியது....எதிர்பார்ப்பு பொய்த்த பிறகு....

கண்மணி/kanmani said...

காயூ சூப்பர்
ஆனா இது கல்யாணம் ஆனவங்க எழுத வேண்டியது....எதிர்பார்ப்பு பொய்த்த பிறகு....

கண்மணி/kanmani said...

காயூ சூப்பர்
ஆனா இது கல்யாணம் ஆனவங்க எழுத வேண்டியது....எதிர்பார்ப்பு பொய்த்த பிறகு....

காயத்ரி சித்தார்த் said...

மைஃப்ரண்ட்..
//அவ்வ்... எப்போதும் போல தப்பாதான் புரிஞ்சிருக்கேன். :-(//

:)) அதான் எனக்கு அப்பவே தெரியுமே!


கண்ணன் சீதாராமன்...

நானே ரொம்ப நாள் கழிச்சி தான் என் ப்ளாக்கு வர்றேன்.. நீங்க லேட்டா வந்தா தப்பில்லங்க. :)

காயத்ரி சித்தார்த் said...

நிஜமா நல்லவன்.. என்னங்க பேர் இது?! :) நன்றி வருகைக்கு.

லக்ஷ்மண், நாடோடி இலக்கியன், கார்த்திக்.. நன்றி.

சிங் ஜெயக்குமார்.. எதுக்கு இந்த புன்னகை?

காயத்ரி சித்தார்த் said...

திகழ்மிளிர் நன்றி. உங்க பேர் ரொம்ப பிடிச்சுது எனக்கு! (ஏற்கனவே சொல்லிருக்கேனோ?)

ஆஹா.... கண்மணீக்கா.. ரொம்ப நாளாச்சே இந்த பக்கம் வந்து?

கல்யாணம் ஆனபிறகு தான் எழுதனுமா? :(
சரி.. கல்யாணம் ஆனவங்களுக்காக எழுதினேன்னு வெச்சிக்கோங்க.. எதிர்பார்ப்பு பொய்த்தவர்களுக்கு மட்டும்.

(ஹப்பா! எப்டியோ சமாளிச்சிட்டேன்!!)

MyFriend said...

@காயத்ரி:
//
மைஃப்ரண்ட்..
//அவ்வ்... எப்போதும் போல தப்பாதான் புரிஞ்சிருக்கேன். :-(//

:)) அதான் எனக்கு அப்பவே தெரியுமே! //

நான் தப்பா நினைக்கிறதுல அவ்வளோ சந்தோஷமா? அப்போ இனி எப்போதும் தப்பாவே புரிஞ்சிக்கிறேன். :-))) ஈசியா போச்சு வேலை! :-P

சரி, இந்த கவிதைக்கு தலைப்பு வைக்க தெரியலையா இல்ல டைம் இல்லையா? :-P

MyFriend said...

ரொம்ப நாள் ஆச்சு இங்கே வந்து இப்படி கும்மியடிச்சு.. ஒரு ஆட்டம் போடலாம்ன்னு பார்த்தா அக்கா எப்போதும் போல கோழி கால் தூக்கிட்டு துரத்துவாங்களோன்னு பயமா இருக்கு! :-P

MyFriend said...

புதுசா ஒரு போஸ்ட் போட்டுட்டு சொல்லுங்க.. இங்கே கண்டிப்பா கும்மியடிக்கணும்ன்னு ஒரு மூட்ல இருக்கேன். என்ன சரியா? :-))

பாச மலர் / Paasa Malar said...

வாழ்க்கையில் ஒரு நிலையில் எதிர்பார்ப்புகள் பொய்க்கிற மாதிரி ஒரு மாயை..அப்போது தோன்றும் வரிகள்..அருமையான நச் வரிகள் காயத்ரி..

நிஜமா நல்லவன் said...

///காயத்ரி said...
நிஜமா நல்லவன்.. என்னங்க பேர் இது?! :) நன்றி வருகைக்கு.///

ஆளாளுக்கு படுத்தி எடுக்குறாங்க என்ன பேரு இதுன்னு. எதோ தெரியாத்தனமா வச்சிட்டேன்:)

நிஜமா நல்லவன் said...

///.:: மை ஃபிரண்ட் ::. said...
சரி, இந்த கவிதைக்கு தலைப்பு வைக்க தெரியலையா இல்ல டைம் இல்லையா? :-P///



நானும் இதே கேள்விய கேட்கிறேனுங்க.

துரியோதனன் said...

//யார் யாரிடமோஉன் சாயல்களைப் பார்த்தபடி வீடு வந்து சேர்ந்தேன்..வீட்டிலிருந்த நீயாரோவாகியிருந்தாய்.//


:-)

King... said...

//காயூ சூப்பர்
ஆனா இது கல்யாணம் ஆனவங்க எழுத வேண்டியது....எதிர்பார்ப்பு பொய்த்த பிறகு....//

??????

King... said...

//அச்சோ தப்பா புரிஞ்சுகிட்டீங்களே. :(
நான் இது வரை பார்த்தே இராத யாரோக்களில் எல்லாம் உன் முகம் தெரிகிறது.. நான் தினமும் பார்க்கும் உன் முகத்தில் யாரோ போன்ற அந்நியம் தெரிகிறது ன்னு அர்த்தம். 5 வரி கவிதைக்கு இம்புட்டு விளக்கம் தேவையா? அவ்வ்வ்//

இதுல இவ்வளோ இருக்கா...


(நல்ல வேளை நாம முதல்ல கேள்விய கேக்கல...)

King... said...

நன்றி காயத்ரி...

Unknown said...

"கண்ணன் சீதாராமன்...

நானே ரொம்ப நாள் கழிச்சி தான் என் ப்ளாக்கு வர்றேன்.. நீங்க லேட்டா வந்தா தப்பில்லங்க. :)"

Nan enna sonnenna "nenga romba nal kaluchi eluthiiriga", I used to see ur blog daily for updates from, I just see the blog not the comments...;)

niriya eluthugan..;)

புகழன் said...

கவிதையை விடவும் சூப்பர் அதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த படம்.

எங்கிருந்து எடுத்தது இந்தப் படம்
எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

இப்படிக்கு உங்கள் புகழன்

Nizam Khan said...

//அச்சோ தப்பா புரிஞ்சுகிட்டீங்களே. :(
நான் இது வரை பார்த்தே இராத யாரோக்களில் எல்லாம் உன் முகம் தெரிகிறது.. நான் தினமும் பார்க்கும் உன் முகத்தில் யாரோ போன்ற அந்நியம் தெரிகிறது ன்னு அர்த்தம். 5 வரி கவிதைக்கு இம்புட்டு விளக்கம் //

சத்தியமா நீங்க விளக்கம் சொல்லாட்டிம் எனக்கு புரிஞ்சிருக்காது!!! நன்றி ரொம்ப நாளுக்கப்பரம் உங்க blog வந்தாலும் எப்பொழுதும் நல்ல பசுமையாவே இருக்கு வாழ்த்துக்கள்...

நல்ல கவிதை

ரசிகன் said...

நான் உன்னை ,மனதால் நெருங்கிக்கொண்டே இருக்கும்போதே ,
நீ என்னைவிட்டு விலகிக்கொண்டே இருந்தாய் ..

ஹிஹி.. இந்த கவிதையைப் படிக்கும்போது கவிதை மாத்ரி எனக்கு தோணியது இது. என்ன கவிதையோட மீனிங்க சரியா புரிஞ்சுக்கிட்டேனா???
:P

ரசிகன் said...

நல்லாயிருக்கு காயத்ரி, நாளு வரி ”நச்”

N A V ! N said...

அருமை

மனுஷம் said...

எதிர் வரும்
எல்லா எதிர்பாலினத்திடமும்
எடை போட்டு பார்க்கிறேன் உன்னை…

ithu eppadi..?

Its mine. Comments pls

மழைக்காதலன் said...

நல்லாயிருக்குங்க..... குறுந்தொகைப் பற்றி கூகுளில் தேடும் போது உங்க வலைப்பக்கம் வந்துச்சு.... பார்த்தேன் அருமை.... தொடருங்கள்....

priyamudanprabu said...

இன்றுதான் முதல் முறையாக வந்தேன்
உண்மையை சொல்லிவிடுகிறேன் மைபிரண்ட் சொன்னதுபோல உங்கள் கவிதைகள் பல எனக்கு புரியவில்லை,ஆனாலும் அழகாய் இருக்கிறது.கடைசிவரை எதோ ஒன்று புசியததை போல உணர்வு,ஆனாலும் கடைசி வரை படித்து விடுகிறேன்.இந்த கவிதையும் உங்கள் விளக்கமும் அழகோ அழகு

Anonymous said...

கவிதையை புரியவில்லை, புரியவில்லை என்று சொல்லுவது, கவிஞருக்கு பெறுமை என்று நினைத்தனரோ!

அழகாய் ‍விளங்குபடி இருக்கின்றது உங்கள் கவிதைகள்.

http://adiraijamal.blogspot.com

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அழகு!

-ப்ரியமுடன்
சேரல்