tag:blogger.com,1999:blog-329045042024-03-13T22:15:51.246+05:30பாலைத் திணைபிரிவும் பிரிவின் நிமித்தமும்...காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger147125tag:blogger.com,1999:blog-32904504.post-79299284781163176002013-04-14T16:40:00.001+05:302013-04-14T17:56:20.491+05:30”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: blue;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: blue;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: blue;">”பாணர் தாமரை மலையவும் புலவர்</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: blue;">பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் </span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: blue;">அறனோ மற்றிது விறன்மாண் குடுமி!</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: blue;">இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: blue;">இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?”</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
என்ற புறநானூற்றுப் பாடலோடு தொடங்கும் இந்தப் பத்தி நியாயமாக ஒரு சங்க இலக்கியக் கட்டுரையாக பரிணமித்திருக்க வேண்டியது. ஆனால் இக்கட்டுரை பேசவிருப்பது அதைப் பற்றியல்ல. மனித மனத்தின் செயல்பாடுகள் பெரும்பாலும் விநோதமானவை.... நினைவின் எந்தப் பிரி எந்தச் சரடினுடையது என்பது எளிதில் தீர்மானிக்கக் கூடியதாய் இருப்பதில்லை. முகப்பு விளக்குகள் ஒளிர வேகமாக வரும் லாரியை, அறிவுற்றுத் தீவிழித்து வாய் பிளந்து ’ஈஈஈ’ யென்று பல்லிளித்தபடி பாய்ந்து வரும் அரக்கனாக கற்பிதம் செய்வதும், எப்போதும் துடைப்பத்தை வைத்து வீட்டைப் பெருக்கிக் கொண்டேயிருக்கும் பக்கத்து வீட்டுப் பெண்மணியைப் பார்க்கையில், கூண்டில் வைத்த நெல்லையும் பழங்களையும் நாளெல்லாம் காலால் எத்தி எத்தி ஒரு மூலைக்கு நகர்த்திக் கொண்டே இருந்துவிட்டு ஒன்றும் சாப்பிடாமலேயே இறந்து போன பச்சைக் கிளியைப் பற்றிய சாயம் போன நினைவுகளை மேலெழுப்புவதும் மனதின் கிறுக்குத்தனங்களேயன்றி வேறென்ன? இதோ இப்போதும் கூட “உன்னைப் புகழ்ந்து பாடும் பாணர்களுக்கு பொன்னாலான தாமரைப் பூவை சூடிக் கொள்ளக் கொடுப்பதற்காக, உன்னைப் போற்றி எழுதும் புலவர்களுக்கு யானைகளையும் தேரையும் பரிசளிப்பதற்காக பிறரை வருத்தி அவர்களுடைய மண்ணைக் கவர்ந்து கொள்கிறாயே.. இது நியாயமா அரசே?” என்ற திகைப்பூட்டும் கேள்வியைச் சுமந்திருக்கும் பாடலைத் தான் கட்டுரையின் கருப்பொருளாகத் தேர்ந்து கொள்ளத் தீர்மானித்திருந்தேன். யாசகக் குரல்களால் நிரம்பியிருக்கும் புறநானூற்றில் தனித்து ஒலிக்கும் அடக்குமுறைக்கான முதல் எதிர்ப்புக் குரல் இது. ஆனால்.. “இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு” என்னும் வரியை வாசிக்கையில் மனது அவ்வரியோடு, சம்பந்தப்பட்ட மன்னனோடு, அது எழுதப்பட்ட காலத்தோடு நின்று விடாமல்,எங்கெங்கோ குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து இறுதியில் சினுவா ஆச்சிபியின் “சிதைவுகள்’ நாவலில் முட்டி நிற்கிறது. </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<a href="http://1.bp.blogspot.com/-xnL6jDVtaZI/UWqf9Bpc9kI/AAAAAAAAF6w/3Frx2Iy51Qg/s1600/images.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-xnL6jDVtaZI/UWqf9Bpc9kI/AAAAAAAAF6w/3Frx2Iy51Qg/s320/images.jpg" width="217" /></a><a href="http://en.wikipedia.org/wiki/Chinua_Achebe" style="color: #1155cc;" target="_blank">சினுவா ஆச்சிபி</a> - நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியர், கவிஞர், சிறுகதையாசிரியர் மற்றும் திறனாய்வாளர். 1930 ல் நைஜீரியாவில் ஈபோ இனத்தில் பிறந்த ஆச்சிபி தனது 28 வது வயதில் தனது முதல் படைப்பான “Things Fall Apart" (சிதைவுகள்) நாவலை வெளியிட்டார். 1999 வரை உலகம் முழுவதும் ஒரு கோடிப் பிரதிகள் விற்பனையாகி, 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அவருக்கு உலகப்புகழை வாரிக் கொடுத்த இந்நாவலை, சென்ற மாதத்தில் தான் எனக்கு வாசிக்க வாய்த்தது. வாசித்து முடித்த அடுத்த ஓரிரு நாட்களுக்கு ஊனுறக்கம் கொள்ள முடியாத அளவிற்கு அவஸ்தை என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் உள்ளூர இனம் புரியாத சஞ்சலத்தைக் கொடுத்துக் கொண்டேயிருந்தது. </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
ஆச்சிபி இந்நாவலைத் தொடர்ந்து No Longer at Ease, Arrow of God, A Man of the People, Anthills of the Savannah முதலிய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும், கவிதைகளையும், குழந்தை இலக்கியங்களையும், கட்டுரைத் தொகுதிகளையும், திறனாய்வு விமர்சனங்களையும் எழுதியிருக்கிறார். அவரது கவிதைகளில் சிலவற்றை<a href="http://www.randomhouse.com/acmart/catalog/display.pperl?isbn=9781400076581&view=excerpt" style="color: #1155cc;" target="_blank">இங்கே</a> வாசிக்கலாம். <b style="font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin: 0px; padding: 0px;">A Mother in a Refugee Camp </b><span style="line-height: 18px; margin: 0px; padding: 0px;"><span style="font-family: arial, helvetica, sans-serif;">கவிதை மனதைப் பிசைகிறது. நைஜீரிய அரசியலில் பெரும் பங்கு வகித்திருந்த சினுவா ஆச்சிபி தன் வாழ்வின் இறுதிப் பகுதியை அமெரிக்காவில் கழித்தார்.</span></span><span style="line-height: 18px; margin: 0px; padding: 0px;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"> ஒரு கார் விபத்தில் முதுகெலும்பில் அடிபட்டு இடுப்பிற்குக் கீழ் செயலிழந்த நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கல்லூரிப் பேராசிரியராக தன் பணியைத் தொடர்ந்த இவர் கடந்த 21.03.2013 ம் நாள் மரணமடைந்தார். அவர் மரணமும் என் வாசிப்பும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்தது அபாரமான யதேச்சையே. இவரது படைப்புகள் அனைத்திலும் பார்க்க நாவல்களே அதிகம் புகழ் வாய்ந்தவையாய் இருக்கின்றன. உலகெங்கும் கல்வித் துறைகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. </span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="line-height: 18px; margin: 0px; padding: 0px;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><br /></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="line-height: 18px; margin: 0px; padding: 0px;"><span style="font-family: arial, helvetica, sans-serif;">“Things Fall Apart" ஐ கூகுளைப் போலவோ ஏனைய மொழி’பெயர்ப்பாளர்களைப்’ போன்றோ </span></span><span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;">“விஷயங்களைத் தவிர வீழ்ச்சி” என்று பெயர்த்தெடுக்காமல் “சிதைவுகள்” என்று அழகாய் மொழிபெயர்த்த திரு.என்.கே.மகாலிங்கம் அவர்களை இத்தருணத்தில் நிச்சயம் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். ”பூரணி” என்னும் சிற்றிதழின் ஆசிரியராகப் பணியாற்றி இலக்கிய உலகில் பூரணி மகாலிங்கம் என்றே அறியப்படும் இவர் ஒரு இலங்கைத் தமிழர். நைஜீரியாவில் பல்லாண்டுகள் ஆசிரியராய்ப் பணியாற்றியவர். உச்சரிக்கச் சிரமப்படுத்தும் ஆப்பிரிக்கப் பெயர்களையும், அவர்களின் ஆச்சரியமூட்டும் விநோதமான சடங்குகள், சம்பிரதாயங்களையும் கொஞ்சமும் அந்நியமாக உணராத வகையில் தமிழையும் வாசகர்களையும் படுத்தாமல் வெகு அழகாய்த் தமிழ்ப்படுத்தியிருக்கிறார். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் சுந்தரராமசாமி</span><span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;"><b><span style="color: black;"> “சிதைவுகள் தமிழுக்கு வரும்போது அதன் கதாபாத்திரங்கள் தம் வாழ்க்கையில் தழுவி நின்ற பண்டைய வாழ்க்கை முறை போல மற்றொரு பண்டைய வாழ்க்கை முறை சார்ந்த வாசகர்களிடம் வந்து சேர்கிறார்கள். மொழிபெயர்ப்பாளரின் திறனால் இந்த உறவு அக்கதாபாத்திரங்களுக்கு வெகு இதமாகக் கூடியிருக்கிறது. தமிழ் அலட்டிக் கொள்ளாமல் அம்மக்களுக்குரிய வாழ்வை வாங்கிக் கொள்வதையும் இம்மொழிபெயர்ப்பு மூலம் நாம் உணர முடியும்.”</span></b></span><span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;"> என்று பாராட்டுகிறார். </span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;">”சிதைவுகள்” நாவலின் கதைச் சுருக்கம் வெகு எளிமையானது. ஒக்கொங்வோ என்ற தனி மனிதனின் இளமைப் பருவம் முதல் அவன் மரணம் வரையிலான வாழ்க்கையைச் சொல்வது. ஆனால் ஒரு மனிதனின் வாழ்வு என்பது எத்தனை முயன்றபோதும் சமூகத்திலிருந்து முற்றிலும் வேறாய் பிரித்து எடுத்து விடக் கூடியதாய் இருப்பதில்லை தானே? ஒக்கொங்வோவின் வாழ்க்கை என்னும் சிறு மொட்டு அவன் சுற்றம், சமூகம், கிராமங்கள், அவர்களின் நம்பிக்கைகள், சடங்குகள், கடவுள்கள், கலாச்சாரம், குற்றங்கள், தண்டனைகள் மற்றும் இவையனைத்திலும் ஏற்படும் சிதைவுகள் ஆகியவற்றை படிப்படியாய் காட்சிப்படுத்தியபடி பல்லடுக்குத் தாமரையாய் விரிவதே நாவல். ஒற்றைப் பார்வையில் மிக எளிமையான கதையாகத் தெரிந்தபோதிலும் ஆதி மனிதர்களின் வாழ்விலிருந்து இன்று வரை தொடர்ந்து வரும் சக மனிதர்கள் / இனக் குழுக்கள் மீதான அடக்குமுறையையும், ஒரு மொழியோ, இனமோ, பண்பாடோ பென்சில் சீவப்படுவது போல அதிகார வர்க்கத்தால் சிறிது சிறிதாய் செதுக்கிச் சிதைக்கப்படுகையில் உருவாகும் வலியையும் அதிர்வையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்வதாலேயே இது மிக முக்கியமான நாவலாகியிருக்கிறது. Gods must be crazy திரைப்படம் மற்றும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் வாயிலாக மட்டுமே நான் பெற்றிருந்த ஆப்பிரிக்க கலாச்சாரம் குறித்த சித்தரிப்புகளை இந்நூல் பெருமளவில் விசாலமாக்கியிருக்கிறது. </span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;">ஒக்கொங்வோ ஒரு இளைஞன். சோம்பேறியும் செலவாளியும், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காதவனும், நோயுற்று உடல் வீக்கமுற்று, தானே தன் புல்லாங்குழலோடு தனித்து இடுகாடு சென்று மரணித்து பிறரால் அடக்கம் செய்யப்படும் பெருமையைக் கூட இழந்தவனுமான உனோக்கா என்பவனின் மகன். தன் தந்தையைப் போல தானும் ஆகிவிடக் கூடாது என்ற பயம் அவனை வாழ்நாள் முழுவதும் ஆட்டிப் படைக்கிறது. அந்த பயமே அவனை பெரிய மல்யுத்த வீரனாகவும், கோபக்காரனாகவும், அன்பை வெளிக்காட்ட மறுப்பவனாகவும் ஆக்குகிறது. அந்த பயம் தான் அவனை கடும் உழைப்பாளியாகவும், மூன்று மனைவிகளையும் அவர்கள் குழந்தைகளையும் சொந்த வீட்டில் பராமரிப்பவனாகவும், வருடம் முழுவதற்கும் குடும்பத்திற்குத் தேவையான வள்ளிக் கிழங்குகளை களஞ்சியத்தில் சேமித்திருக்கும் செல்வந்தனாகவும், சமூகத்தில் மதிப்பிற்குரிய பட்டங்களைப் பெற்றவனாகவும் வைத்திருக்கிறது. மேலும் பல பட்டங்கள் பெற்று சமூகத்தின் பிரபுக்களுள் ஒருவனாக வாழ விரும்பியவனின் கனவு எதிர்பாராதவிதமாக திடீரென ஒரே நாளில் சிதைகிறது. ஒரு மரணவீட்டில் சாவுப்பறை முழக்கி எல்லோரும் நடனமாடுகையில் தவறுதலாக இவனது துப்பாக்கி வெடித்து 16 வயதுப் பையன் ஒருவன் இறந்து போகிறான்.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;"> தன் குலத்தைச் சேர்ந்தவனை தானே கொல்லுதல் பெருங்குற்றம். குற்றங்களில் இரண்டு வகை உண்டு. ஆண் குற்றம், பெண் குற்றம். அறியாமல் செய்வது பெண் குற்றம். இவன் செய்தது பெண் குற்றமாகையால் 7 ஆண்டுகள் குலத்தை விட்டு விலக்கி வைத்து தண்டனை கொடுக்கிறார்கள். இரவோடு இரவாக வீட்டையும் கிழங்கு களஞ்சியத்தையும், வளர்ப்புப் பிராணிகளையும் விட்டுவிட்டு குடும்பத்தோடு தன் தாயின் சொந்தங்கள் இருக்கும் கிராமத்தில் தஞ்சமடைகிறான். ஒவ்வொரு தாயும் அவள் இறந்த பின்பாக அவளுடைய பிறந்த மண்ணிலேயே புதைக்கப்படுவாள். தந்தை அடித்ததும் தாயிடம் சென்று அழும் குழந்தை போல குற்றமிழைத்த ஆண் தன் குலத்தை விட்டு விலகி தாய் புதைக்கப்பட்ட மண்ணில் அவளின் பிறந்தகத்தாரிடம் தஞ்சம் புக வேண்டும் என்பது அவர்கள் நியதி. தந்தைவழிச் சமூகமாய் வாழ்ந்த போதிலும் தாயை “நேகா ” (தாயே தன்னிகரில்லாதவள்) என்று மதிக்கிறார்கள்.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;">7 வருடங்கள். காலம் கரையானைப் போல ஒக்கொங்வோவின் கனவுகளையும் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாய் அரித்து விடுகிறது.</span><span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;"><span style="color: black;"><b> “ஒருவனுடைய இடம் அவனுக்காக காத்துக் கொண்டிருப்பதில்லை. ஒருவன் அவ்விடத்தை விட்டுப் போனவுடன் உடனடியாக வேறொருவன் அவ்விடத்தை நிரப்பி விடுவான். குலம் ஒரு பல்லியைப் போல. தன் வாலை இழந்தவுடன் அதற்குப் புதிய வால் விரைவிலே முளைத்து விடும்”</b></span><span style="color: blue;"> </span></span><span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;">என்கிறார் ஆச்சிபி. 3 பகுதிகளாகப் பிரியும் நாவல் ஒக்கொங்வோ குற்றமிழைத்து குலம் விட்டு வெளியேறும் வரை முதல் பிரிவாகவும், அவன் தனது தாயின் பிறந்தகத்தில் வாழும் நாட்களை இரண்டாம் ,பிரிவாகவும் அவன் மீண்டும் குலத்திற்கே திரும்பிய பின்னான வாழ்க்கையை மூன்றாம் பிரிவாகவும் விவரிக்கிறது. நாவலின் இரண்டாம் பகுதியில் அவர்கள் கிராமத்திற்குள் மெல்ல கிறித்துவ சமயம் நுழைகிறது. அவனது மூத்த மகன் அவனை வெறுத்துப் பிரிந்து கிறித்துவ சமயத்தில் இணையும் துயர சம்பவம் நடைபெறுகிறது. அவன் குலத்திற்குத் திரும்பும் போது சமயத்தோடு சேர்ந்து வெள்ளையர்களின் அரசாங்கமும் நுழைந்திருக்கிறது. வெள்ளையர்களின் அடக்குமுறையையும் சமயத்தையும் வெறுத்து அவர்களை வெளியேறும்படி போராடத் தொடங்குகின்றனர். அவர்களில் ஒக்கொங்வோ உட்பட 6 தலைவர்களை சமாதான பேச்சு வார்த்தைக்காக அழைக்கும் ஆங்கிலேயர்கள், எதிர்பாராத விதமாக அவர்களைக் கைது செய்து, தலை மயிரை மழித்து, சிறையில் அடைத்து 3 நாட்களுக்குப் பட்டினி போட்டு சித்திரவதை செய்து பின்னர் விடுவிக்கின்றனர்....</span><span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;"><span style="color: blue;"> “தொழுத கையுள்ளும் படையொடுங்கும்”</span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;">ஒக்கொங்வோவை அந்த துரோகமும் அவமதிப்பும் அலைக்கழிக்கிறது. தான் கிராமமே நடுங்கும் மல்யுத்த வீரனாய் இருந்த நாட்களை எண்ணிப் பார்த்து அந்த கவுரவத்தை மீட்டெடுக்க விரும்புகிறான். அதன் தொடக்கமாக ஆங்கிலேய ஏவலாளி ஒருவனை ஊர்ப் பொதுவில் வாளால் வெட்டிக் கொல்கிறான். ஆனால் அவன் எதிர்பார்த்த எழுச்சி மக்களிடம் வரும் முன்பாகவே அவன் வீட்டருகே இருக்கும் மரத்தில் தூக்கில் பிணமாகத் தொங்குகிறான். அவன் தற்கொலை செய்து கொண்டு இறந்தானா அல்லது கொல்லப்பட்டானா என்பதை சினுவா புதிராகவே விட்டு வைக்கிறார். அவன் இறந்தது குறித்து விசாரிக்க வந்த ஆங்கிலேய மாவட்ட ஆணையாளன், தான் எழுதப்போகும் நூலில் ஒக்கொங்வோவைப் பற்றியும் எழுத உத்தேசிக்கிறான். “ஏவலாளன் ஒருவனைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இந்த மனிதனின் கதை படிப்பவருக்குச் சுவாரஸ்யமாக இருக்கும். எத்தனையோ விஷயங்களை உள்ளடக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் பல விபரங்களை வெட்டி விடுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.” என்று எண்ணிக் கொள்ளும் அவன் தன் நூலுக்கான பெயரையும் முடிவு செய்கிறான். <b>“கீழ் நைஜரின் ஆதி இனக் குல மரபுகளைச் சமாதானமயப்படுத்தல்”</b> என்பதே அந்நூலின் பெயர். </span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;">முதல் பகுதியில் அறியாமல் செய்த தவறால் ஒக்கொங்வோவின் கனவுகளும், இரண்டாம் பகுதியில் அவன் சேமித்து வைத்திருந்த பிம்பமும் நம்பிக்கைகளும், மூன்றாம் பகுதியில் அவனது ஒட்டுமொத்த வாழ்வும் படிப்படியாகச் சிதைகின்றன. எவராலும் அணை போட்டுத் தடுத்துவிட முடியாத பெரும் பிரவாகமாக வாழ்க்கை அடித்து இழுத்துப் போகையில் நீர்வழிப்படுவதைத் தவிர்த்து வேறு வழியறியாத சிறு துரும்பெனவே மனிதர்கள் அலைக்கழிய நேர்கிறது. நாவல் முழுவதிலும் எவர் சார்பிலும் நின்று பேசாமல், உள்ளதை உள்ளபடியே காட்டிப் போகும் கதாசிரியனாக பாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு வழிவிட்டு ஒதுங்கியே நிற்கிறார் சினுவா ஆச்சிபி. வேற்று மதம் உள்ளே நுழைகையில் அதை ஏற்க முடியாமல் பதறித் தவிக்கும் மக்களிடையே அப்புது மதத்தை தங்களின் பற்றுக்கோடாக, நம்பிக்கை ஒளிக் கீற்றாக உணர்ந்து வழி மாறும் மனிதர்களின் ஆசுவாசத்தினையும் அவர் பதிவு செய்யத் தவறவில்லை. </span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;">நாவலில் எனக்கு மிகுந்த உணர்வெழுச்சியைக் கொடுத்த இடம் ஒன்றுண்டு. ஒக்கொங்வோவின் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை அயல் குலத்தார் கொலை செய்ததற்கு பரிகாரமாக அக்குலத்திலிருந்து கன்னிப் பெண் ஒருத்தியையும், சிறுவன் ஒருவனையும் தானமாக அனுப்பி வைப்பார்கள். கன்னிப்பெண்ணை இறந்தவளுக்கு மாற்றாக அவள் கணவனுக்கு அனுப்பி விட்டு சிறுவனை என்ன செய்வது என்று முடிவு செய்யும் வரை ஒக்கொங்வோவின் பராமரிப்பில் வைத்திருக்க முடிவு எடுக்கப்படும். ஆரம்ப நாட்களில் தாயையும் தங்கையையும் நினைத்து அழும் சிறுவன் நாளடைவில் அவர்கள் வீட்டில் ஒருவனாகி ஒக்கொங்வோவின் மூத்த மகனுக்கு நெருங்கிய நண்பனாகி விடுவதோடு ஒக்கொங்வோவையும் ‘அப்பா’ என்றே அழைப்பான். திடீரென ஒரு நாள் குலத்தெய்வம் அச்சிறுவனை கொன்று விடச் சொல்லி விட்டது என்று கூறி அவனைக் கொல்வதற்கு ஒக்கொங்வோவையும் அழைப்பார்கள். சிறுவனின் தலையில் கள்ளுப் பானையை வைத்து முன்னால் நடக்கவிட்டு ஊர் எல்லையைத் தாண்டிய பின் அவனை வெட்டிக் கொல்வதாக ஏற்பாடு. சிறுவன் முதலில் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி பயந்தாலும் ஒக்கொங்வோவும் உடன்வருவதால் ‘அப்பா தான் இருக்கிறாரே’ என்ற தைரியத்துடனேயே நடப்பான். </span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><br /></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><b>“இகெமெஃபுனாவுக்கு பின்னால் வந்த ஒருவன் தொண்டையைச் சரி பண்ணினான். இகெமெஃபுனா திரும்பிப் பார்த்தான். நின்று திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருக்கும்படி அவன் உறுமினான். அவன் சொல்லிய முறை இகெமெஃபுனாவின் முதுகுத் தண்டை விறைக்கச் செய்தது. அவன் தூக்கிச் சென்ற கறுத்த பானையில் அவன் கை லேசாக நடுங்கியது. ஒக்கொங்வோ ஏன் பின்புறம் போய்விட்டான்? தன் கால்கள் உருகின மாதிரி அவன் உணர்ந்தான். திரும்பிப் பார்க்க பயமாக இருந்தது.தொண்டையைக் கனைத்த மனிதன் தன் வாளை உருவி உயர்த்தினான். ஒக்கொங்வோ வேறு பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டான். வெட்டு அவனுக்குக் கேட்டது. பானை மண்ணில் விழுந்து உடைந்தது. “என் அப்பா.. என்னைக் கொன்று போட்டாங்க” என்று இகெமெஃபுனா அழுது கொண்டு அவனிடம் ஓடி வந்தது கேட்டது. பயத்தால் அலமந்து ஒக்கொங்வோவும் தன் வாளை உருவி அவனை வெட்டி விழுத்தினான். தான் பலவீனமானவன் என்று அவர்கள் நினைத்து விடுவார்களோ என்று பயந்தான்.”</b></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><br /></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;">என்று அந்த சம்பவத்தை விவரித்து முடிக்கிறார் ஆசிரியர். எனக்கு மனம் சிலிர்த்துச் சிலும்பி நின்றது. அடுத்த வந்த நாட்களில் உள்ளே தங்கி ஓயாமல் அறுத்துக் கொண்டிருந்த சம்பவங்களில் இதுவே முக்கியமானதாக இருந்தது. இகெமெஃபுனா இறந்த நாளிலிருந்து தன் தந்தையை உள்ளூர வெறுக்கும் மூத்த மகன் நாவோயெ, புதிய சமயத்தின் பாசுரங்களால் ஈர்க்கப்படுகிறான். <b>“இருட்டிலும் பயத்திலும் இருந்த சகோதரர்களைப் பற்றிய இறைவன் புகழ்பாடிய பாசுரங்கள் அவன் இளம் ஆன்மாவைக் கவர்ந்தன. அவை தெளிவின்றியும் தொடர்ந்தும் அவனைப் பிடித்து அமுக்கிய பல கேள்விகளுக்கு விடை கூறுவன போல இருந்தன. அவனுடைய வாடிப் போன ஆன்மாவுக்குள் அப்பாசுரங்கள் நீரை வார்த்தது போன்ற ஆறுதலை அவன் உணர்ந்தான்” </b> என்று அவனது விட்டு விடுதலையாகும் உணர்வு புலப்படுத்தப்படுகிறது.</span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><br /></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"> மேலும் முதன் முறையாக ஒரு பெண்ணும் மதம் மாறுகிறாள். அவள் பெயர் நேகா. அவள் நிறை மாத கர்ப்பிணி.<b> “நேகா முன்பு நாலு முறை கர்ப்பிணியாக இருந்து பிள்ளை பெற்றவள். ஒவ்வொரு முறையும் இரட்டைப் பிள்ளைகளையே பெற்றாள். உடனடியாக அப்பிள்ளைகளை வீசிவிட்டார்கள். அவளுடைய கணவனும் குடும்பமும் அப்படிப்பட்ட பெண்ணைக் குறை கூறுபவர்களாகவே இருந்தனர். அதனால் அவள் கிறித்தவர்களுடன் சேர ஓடிப் போனபோது அவர்கள் தேவைக்கதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. அவள் போனது நல்லது என்றே அவர்கள் நினைத்தனர்.” </b></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><br /></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;">ஆப்பிரிக்க தேசத்தை எங்கோ தொலைதூரத்திலிருக்கும் அந்நிய பிரதேசமாகக் கருத விடாமல் நாம் இது வரை அறிந்திராத நம் தேசத்துப் பழங்குடி மக்கள் என்றே உணருமளவிற்கு அத்தனை இணக்கமான சித்தரிப்புகள் இந்நாவலில் கூடி வந்திருக்கின்றன. இதனை <b> “அந்த வாழ்க்கை முறையை அறியாத மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் ஆங்கிலம் அறிந்த உலக வாசகர்களின் தேவையை முன்னிட்டு நிகழ்த்தும் காரியம்”</b> என்கிறார் சுந்தரராமசாமி. என்றாலும் இதில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது. அறிமுகப்படுத்தும் பாணி தான் என்ற போதும் நாவலில் எந்த இடத்திலும் தோய்வோ சலிப்போ தென்படுவதேயில்லை. </span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;"><b>“மனிதன் வயிற்றிலோ வேறு அங்கங்களிலோ வீக்கம் ஏற்பட்டுத் துன்பப்பட்டால் அவனை வீட்டில் சாக விட மாட்டார்கள். அவனை தீய காட்டில் கொண்டுபோய் விட்டு அங்கே சாக விடுவார்கள். அந்த நோய் நிலத்துக்குச் சாபக்கேடாகையால் அவன் இறந்தால் நிலத்துள் புதைப்பதில்லை.”</b></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;"><b><br /></b></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><b>”அந்தக் குழந்தை ஒரு ஒக்பான்ஜி. அதாவது கெட்டப்பிள்ளைகளில் ஒன்று. அது இறந்தவுடன் திரும்பவும் தாயின் கருப்பையில் பிறப்பதற்காக புகுந்து விடும் என்றும் அவன் சொன்னான். ... இறந்த பிள்ளைக்கு இனி துக்கங் கொண்டாடக் கூடாது என்று மந்திரவாதி கட்டளையிட்டான். ஒரு கூரிய கத்தியை எடுத்து பிள்ளையை கண்ட துண்டமாக வெட்டினான். பின் அதை கணுக்காலில் பிடித்து தனக்குப் பின்னால் நிலத்தில் போட்டு இழுத்துக் கொண்டு தீய காட்டுக்கு புதைப்பதற்கு எடுத்துச் சென்றான். அப்படிச் செய்த பிறகு அது திரும்பவும் வருவதாக இருந்தால் ஒன்றுக்கு இரண்டு தரம் யோசிக்கும். “</b></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><b><br /></b></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><b>“சில வேளைகளில் மூதாதையரின் ஆவிகள் - எக்வுக்வு - சில கீழ் லோகத்திலிருந்து உடம்பு முழுவதும் நாரினால் செய்யப்பட்ட உருவத்தில் தோன்றி நடுங்கிய வேறோர் உலகக் குரலில் பேசும். அவற்றுள் சில மிக ஊறு செய்யக் கூடியவை. எல்லாவற்றிலும் பார்க்க பீதி அடையச் செய்வது இன்னும் வரவில்லை. அது எப்போதும் தனியத்தான் வரும். சவப்பெட்டி போன்றது அதன் உருவம். அது போகிற இடமெல்லாம் அழுகிய நாற்றம் வரும். ஈக்களும் அதனைத் தொடரும். உயிர் வாழ்பவர்களின் உலகம் மூதாதையர்களின் உலகத்துக்கு அதிக தூரத்தில் இல்லை. அங்கிருந்து இங்கு வருவதும் போவதும் சர்வ சாதாரணம்.”</b></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><br /></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;">என்பதாக அம்மக்களின் நம்பிக்கைகள் உள்ளபடியே விவரிக்கப்பட்டுள்ளன. நாவலை வாசித்து முடிக்கையில் அவர்களது உணவு, வாழ்முறை, பழக்க வழக்கங்கள், திருமணங்கள், ஊர் விழாக்கள், போட்டிகள், போர்கள், கடவுள்கள், வழிபாடுகள், நீதிபரிபாலனம், சமூகத்தில் பெண்களின் இடம் ஆகியவை குறித்த பொதுவான மற்றும் தெளிவான சித்திரம் ஒன்று வாசிப்பவரின் மனதில் உருவாக்கப்படுகிறது. இவற்றை அறியாமை, மூடநம்பிக்கைகள் என்றெல்லாம் வாசகரின் அறிவு பகுத்துப் பார்ப்பதாயிருந்தாலும் ஒரு வகையில் அவை அம்மக்களின் தனித்துவம் மிக்க கலாச்சாரமாக விளங்குவதையும், தங்கள் கலாச்சாரத்தின் வேர்கள் ஒவ்வொன்றாய் துண்டிக்கப்படும் போது அம்மக்கள் </span></span><span style="font-family: arial, helvetica, sans-serif; line-height: 18px;">சுவாசத்திற்கு ஏங்கும் மூச்சுக் குழல்களாகத் தவிப்பதையும் உணர முடிகிறது. </span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><br /></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;">முதன் முதலாய் ஆங்கிலேயர்கள் உமோஃபியாவிற்குள் கிறித்துவ தேவாலயம் அமைக்க இடம் கேட்கும் போது அவர்களுக்கு ஒரு துண்டு நிலம் வழங்க அம்மக்கள் முடிவு செய்கிறார்கள். அந்நிலம் அவர்கள் தீய காடு என்று ஒதுக்கி வைத்திருக்கும் பகுதியில் இருக்கிறது. தீய ஆவிகள் அலையும் அப்பகுதியில் இடம் கொடுத்தால் புதிய சமயத்தார் தானாகவே அழிந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை உடைத்து தேவாலயம் அவ்விடத்தில் நிமிர்ந்து நிற்கிறது. அவர்கள் அறியும் முன்னரே அவர்தம் காலடிகளுக்குக் கீழாவே வேகமாக வேர் விட்டுப் பரவுகிறது. கிராமத்து மக்களில் பலர் கிறித்துவத்தைத் தழுவிய பின்பாக அவ்வூரில் நடக்கும் கூட்டமொன்றில்..</span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><br /></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><b>“இன்று காலையில் இங்கு இருக்கும் நாம் மட்டுந்தான் எங்கள் தந்தையர்களுக்கு உண்மையானவர்கள். எங்கள் சகோதரர்கள் எங்களைக் கைவிட்டு விட்டார்கள். அவர்களின் தந்தையர் நாட்டை மாசுபடுத்தும் அந்நியர்களுடன் சேர்ந்து விட்டார்கள். நாங்கள் அந்நியர்களுடன் சண்டை செய்தால் எங்கள் சகோதரர்களையும் நாங்கள் அடிக்க வேண்டும். சிலவேளை எங்கள் குலத்தவர்களின் இரத்தத்தையும் சிந்த வேண்டி வரும். ஆனால் நாங்கள் அதைச் செய்யத்தான் வேண்டும். எங்கள் தந்தையர் அப்படியான காரியத்தைக் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு காலமுமே அவர்களுடைய சகோதரர்களைக் கொல்லவில்லை. ஆனால் ஒரு வெள்ளையனும் அவர்களிடம் வரவே இல்லை. எனேக்கா பறவையைப் பார்த்து நீ ஏன் எந்த நேரமும் பறந்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டபோது அது சொன்னது: மனிதர்கள் குறி தவறாது சுடப் பழகி விட்டார்கள். அதனால் நான் ஒரு கிளையிலும் தங்காமல் இருக்கப் பழகிவிட்டேன் என்று. நாங்கள் இந்தத் தீமையை வேருடன் களைய வேண்டும். தீமையுடன் எங்கள் சகோதரர்கள் வந்தால் அவர்களையும் நாம் வேருடன் அழிக்க வேண்டும். அதை நாம் இப்போதே செய்ய வேண்டும். கணுக்கால் அளவு மட்டும் தண்ணீர் இருக்கும் போதே இத்தண்ணீரை இறைத்துச் சுத்தம் செய்திட வேண்டும்”</b></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><br /></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;">என்று பேசுகிறார்கள். குலத்தைச் சேர்ந்தவனை அறியாமல் கொன்ற குற்றத்திற்காக ஒருவனை 7 வருடங்கள் ஊரை விட்டு விலக்கி வைக்கும் மக்கள், இறுதியில் பேசும் இச்சொற்கள் அவர்கள் மனதிலிருக்கும் வலியையும் கசப்பையும் வாசிப்பவருக்குக் கடத்துகின்றன. </span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><br /></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;">இந்நாவலில் நான் மிகவும் ரசித்த மற்றொரு விஷயம் நாவல் முழுவதும் விரவியிருக்கும் சின்னச் சின்ன நாடோடிக் கதைகள். கதை சொல்லல் ஆப்பிரிக்க மக்களின் பாரம்பரியத்தோடு இணைந்தது. ஆப்பிரிக்க இலக்கியம் ஏராளமான வாய்மொழி இலக்கியங்களைக் கொண்டதாக இருக்கிறது. இந்நாவலிலும் கதையோட்டத்தின் போக்கை கொஞ்சமும் குலைக்காமல் அலாதியான நாடோடிக் கதைகள் இடம் பெறுகின்றன. ஆமையின் ஓடு ஏன் வழுவழுப்பாக இல்லை?, வானத்திற்கும் பூமிக்கும் சண்டை வந்து பஞ்சம் வந்தபோது மக்கள் யாரைத் தூது அனுப்பினார்கள்? கொசு ஏன் காதருகே வந்து ரீங்கரித்தபடியே இருக்கிறது? ஓணான் ஏன் தன் தாயைக் கொன்றது? இடியையும் மழையும் மக்கள் என்னவாகப் புரிந்து கொள்கின்றனர்.. என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் எளிமையும் சுவாரஸியமும் கலந்த குட்டிக் கதைகள் பதில்களாய் அமைந்திருக்கின்றன. எனக்கும் கூட, சிறு வயதில் இடி இடிக்கும் போது காதைப் பொத்திக் கொண்டு “அர்ஜுனா அர்ஜுனா” என்று கத்தியதையும், வீட்டிற்குள் குளவி நுழைந்து சுற்றிச் சுற்றிப் பறந்த போது “உம்பிள்ள கல்யாணத்துக்கு வந்துடறேன்.. போ..” என்று சொல்லிக் கொண்டே இருந்ததையும் இனிமையாக நினைவூட்டிய கதைகள். </span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><br /></span></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;">அணிந்துரையில்,<b> ”சிதைவுகளைப் படிக்கும் தமிழ் வாசகன் தமிழ் வாழ்வுடனும் இந்திய வாழ்வுடனும் அது கொண்டிருக்கும் ஒற்றுமையை உணராமல் இருக்க முடியாது. அவர்களுடைய நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் நம் வாழ்வோடு நெருங்கி வருகின்றன. மேற்கத்திய வாழ்வின் அந்நியத் தன்மையை மொழிபெயர்ப்புகளில் கண்டு சலித்தவர்களுக்கு இத்தமிழாக்கம் நெருக்கமான அனுபவத்தைத் தரக் கூடியதாக இருக்கும்” </b>என்கிறார் சுந்தர ராமசாமி. இந்நூலை வாசித்த தமிழ் வாசகி என்ற முறையில் இக்கருத்தை அழுத்தமாக வழிமொழிகிறேன். ஆச்சிபிக்கு நன்றி கலந்த அஞ்சலிகள்.</span></span><br />
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"><br /></span></span>
<span style="color: black; font-family: arial, helvetica, sans-serif;"><span style="line-height: 18px;"> - இம்மாத<b> ‘பண்புடன்’</b> இணைய இதழில் வெளியான கட்டுரை</span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-32904504.post-60540784864261724972013-02-28T17:57:00.002+05:302013-04-14T17:58:05.815+05:30லெபனான் பயணம் - பெய்ரூட் - 4<br />
<div class="ci gv" style="font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; margin: 0px; padding: 3px 16px 0px; text-overflow: ellipsis;">
<div class="gE Gp" style="padding-bottom: 12px;">
<div class="wm VC" style="min-height: 0px; overflow: hidden; padding: 0px;">
<br />
லெபனான் போவதென்று முடிவான போதே எதைப் பார்க்கிறோமோ இல்லையோ கலீல் ஜிப்ரான் பிறந்த ஊரையும் அவர் வீடு மற்றும் மியூசியத்தையும் பார்த்து விட வேண்டும் என்று ஆசை பிறந்தது. அதை நிறைவேற்றாமல் திரும்பி வந்தது ஏமாற்றம் தான் என்றாலும் இன்னொரு முறை லெபனான் செல்வதற்கான காரணம் ஒன்றையும் திருப்பிக் கையோடு கொண்டு வந்திருக்கிறோம் என்று ஆறுதல் பட்டுக் கொண்டோம். ஜிப்ரான் பிறந்த ஊரின் பெயர் Bsharri. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து வடக்கில் 130 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தது. ஹோட்டலின் டிராவல் டெஸ்க்கில், மலைக்கிராமம் என்பதால் அந்த ஊரையடைய 3 மணி நேரமாகும் என்றும் குளிர் 4 டிகிரிக்குக் குறைவாக இருக்குமென்றும் சொன்னார்கள். ஏற்கனவே எனக்கு சைனஸ் தொந்தரவும் சித்துவுக்கு தொடர் இருமலும் இருந்ததால் ரிஸ்க் எடுக்க பயமாக இருந்தது. ஜிப்ரானை பார்ப்பதற்கு எந்தளவிற்கு ஆசைப்பட்டோமோ அதே அளவிற்கு வாழ்நாளில் முதன் முறையாக பனி படர்ந்த சிகரங்களை நேரில் பார்க்கவும் ஆசைப்பட்டோம். இரண்டுமே இப்பயணத்தில் வாய்க்கப் போவதில்லை என்பது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. வாடியிருந்த என் முகத்தைப் பார்த்துவிட்டு இலுப்பைப் பூ ஆப்ஷனாக ”அதற்கு பதிலாக நீங்கள் Barouk Cedars போகலாம்.. ஒரு மணி நேரம் தான் ஆகும்.. அங்கும் பனி மலைகள் இருக்கின்றன..அத்தனை குளிர் இருக்காது” என்றார்கள்.<br />
<br />
சித்துவின் பிறந்தநாளன்று பரூக் செடார்ஸ் கிளம்பினோம். கிளம்பி 10 நிமிடத்திற்குள்ளாகவே நான் ஆர்வக் கோளாறு காரணமாக “பனி இருக்குமில்ல? ஐஸை தொடற அளவுக்கு கிட்ட போக முடியுமா..? ரொம்ம்ம்ம்ப குளிருமோ? பாப்பாக்கு கைக்கு க்ளவுஸ் வாங்காம வந்துட்டமே? என்னோட க்ளவுஸை போட்டு விட்டுரட்டுமா? உங்களுக்கு இருமல் ஜாஸ்தியாய்ட்டா என்ன செய்யறது? மறக்காம குல்லா போட்டுக்கோங்க.. ஐய்யோ ரெண்டு பேரும் சாக்ஸ் எடுக்காம வந்துட்டமே.. எப்டி பனில கால் வைக்கறது?” என்றெல்லாம் பினாத்திக் கொண்டே வந்தேன். என் தொணதொணப்பு தாங்காமல் சித்து “அங்க பனி இருக்குமில்லையா?” என்று டிரைவரிடம் விசாரித்தார். அந்த இளைஞன் ரொம்பவும் சிரத்தையாக “பனி இருக்காது.. விண்டர் முடிஞ்சி ஸ்ப்ரிங் வந்துடுச்சே?” என்றான். நான் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் வாயடைத்து அடுத்த நிமிடம் சித்துவை முறைத்து, அதற்கடுத்த நிமிடம் “பனியில்லாம அங்க போய் என்ன பண்றதாம்?” என்று தொடங்கி அடுத்த பினாத்தலை ஆரம்பித்தேன். நான் புலம்பிய புலம்பலில் அவனுக்கே தமிழ் புரிந்ததோ என்னவோ யார் யாருக்கோ அலைபேசி “அங்கே பனி இருக்கிறதா” என்று விசாரித்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து “பனி இருக்கிறதாம்” என்று அவன் சொன்ன பிறகே என் நெற்றிச் சுருக்கம் சீரானது. :)</div>
<div class="wm VC" style="min-height: 0px; overflow: hidden; padding: 0px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-un7p6jkGSow/US9MZiPGGqI/AAAAAAAAFtk/pYmo1a8WjxU/s1600/_DSC3965.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="262" src="http://4.bp.blogspot.com/-un7p6jkGSow/US9MZiPGGqI/AAAAAAAAFtk/pYmo1a8WjxU/s400/_DSC3965.JPG" width="400" /></a></div>
<div class="wm VC" style="min-height: 0px; overflow: hidden; padding: 0px;">
<br />
<br />
பாதி மலை ஏறும் போது பனி படர்ந்த சிகரங்கள் தென்படத் துவங்கின. “அதோ.. ஸ்நோ இருக்குப்பா.. ஹைய்யோ எவ்ளோ அழகா இருக்கு..” என்று ஆரம்பித்த வேகத்திலேயே “அவ்வ்வ்வ்வ்வ்ளோ தூரத்துல இருக்கே? அங்க எப்டி நாம போக முடியும்? கீழ நின்னு இதான் பனி மலைன்னு காட்டப் போறான் போலிருக்கு” என்று திரும்பவும் சுருதி குறைந்து விட்டது. அத்தனை உயரம் ஏறவே முடியாதென்று சர்வ நிச்சயமாய் நான் நம்பிக் கொண்டிருக்கையில் திடீரென்று பாதையின் ஒரு ஓரம் முழுவதிலும் மலையின் பக்கவாட்டுப் பகுதிகளில் பனி கொட்டிக் கிடந்தது! குழந்தை தூங்கிக் கொண்டிருந்தாள்.. “கண்ணு இங்க பாருடா.. எவ்ளோ ஐஸ் பாரு..” எனது உற்சாகக் கூச்சலில் கண் விழித்தவள் நொடியில் பந்து போல துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிட்டாள். எங்கள் மூவரைத் தவிர்த்து வேற்று மனிதன் ஒருவன் இருக்கிறான் என்ற நினைப்பே வரவில்லை.. கீழே இறங்கி நானும் அம்முவும் குதித்துக் குதித்து பனியை அள்ளி வீசி ஆனந்தமாக விளையாடினோம். பதிவில் எழுதியது போலவே பனியில் கால் புதைய நின்று கைகளிரண்டையும் அகல விரித்து “சித்தூஊஊஊ நான் உன்னைக் காதலிக்கிறேஏஏஏன்” என்று உரக்கக் கத்தி காலடியில் பனி உருகியதில் சறுக்கிக் கீழே விழ இருந்தேன்.. :)))))) எத்தனை விளையாடியும் அம்முவிற்கு சலிக்கவேயில்லை.. கிளம்பும் போது வர மாட்டேனென்று கை கால்களை உதைத்துக் கொண்டு கத்தியவளை குண்டுக்கட்டாய் தூக்கிக் கொண்டு வந்தோம். </div>
<div class="wm VC" style="min-height: 0px; overflow: hidden; padding: 0px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-5zUg8wYpRqM/US9MpKE6DDI/AAAAAAAAFts/3pnUVnSZFis/s1600/_DSC4064.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="263" src="http://3.bp.blogspot.com/-5zUg8wYpRqM/US9MpKE6DDI/AAAAAAAAFts/3pnUVnSZFis/s400/_DSC4064.JPG" width="400" /></a></div>
<div class="wm VC" style="min-height: 0px; overflow: hidden; padding: 0px;">
<br />
<br />
அங்கிருந்து மேலும் 15 நிமிடங்கள் கார் மேலே ஏறியது.. இன்னும் மேலே.. இன்னும் மேலே என்று வானத்தையே தொட்டு விடுவோமோ என்றிருந்தது. இத்தனை உயரத்திற்குப் பாதை இருக்கும் என்று நான் நினைத்திருக்கவே இல்லை. அதற்கு மேலும் கூட பாதையும் பனியில் காலடித் தடங்களும் இருந்தன. நாங்கள் கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 6000 அடி உயரத்திலிருந்தோம். மீண்டும் கார் நின்ற இடத்தில் செடார் மரங்கள் அடங்கிய வனம் ஒன்று இருந்தது. செடார் மரம் லெபனானின் தேசியச் சின்னம்.. அவர்களின் தேசியக் கொடியிலும் இதுவே இடம் பெற்றிருக்கிறது. 130 அடி உயரம் 8 அடி அகலம் வரையிலும் வளரக் கூடிய ஊசியிலைத் தாவரம். 600 வருட பழமையான செடார் மரங்களை இங்கே பாதுகாத்து வருகின்றனர். குளிரும் வெயிலும் இதமாய்ப் பரவி சூழலை சொர்க்கமாக்கிக் கொண்டிருந்தன. </div>
<div class="wm VC" style="min-height: 0px; overflow: hidden; padding: 0px;">
<br /></div>
<div class="wm VC" style="min-height: 0px; overflow: hidden; padding: 0px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-WBC8Eh6gRjw/US9M-OIDBYI/AAAAAAAAFuE/t4ywSNlF2Qo/s1600/cedars-of-lebanon-snow.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-WBC8Eh6gRjw/US9M-OIDBYI/AAAAAAAAFuE/t4ywSNlF2Qo/s400/cedars-of-lebanon-snow.jpg" width="400" /></a></div>
<div class="wm VC" style="min-height: 0px; overflow: hidden; padding: 0px;">
<br /></div>
<div class="wm VC" style="min-height: 0px; overflow: hidden; padding: 0px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-HUEAT2W5jf4/US9My-98jvI/AAAAAAAAFt0/ExnF4lkGqOM/s1600/flag_of_Lebanon.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="262" src="http://2.bp.blogspot.com/-HUEAT2W5jf4/US9My-98jvI/AAAAAAAAFt0/ExnF4lkGqOM/s400/flag_of_Lebanon.jpg" width="400" /></a></div>
<div class="wm VC" style="min-height: 0px; overflow: hidden; padding: 0px;">
<br />
<br />
மலை உச்சியிலிருந்து கீழே பள்ளத்தாக்கைப் பார்க்கும் போதும் நிமிர்ந்து இன்னமும் எட்டாத் தொலைவிலிருக்கும் ஆகாயத்தைப் பார்க்கும் போதும் அடிவயிற்றிலிருந்து எழும்பிய வெப்ப உணர்வை எப்படி மொழிபெயர்ப்பதென்று தெரியவில்லை ”மலைத்தொடருக்கு முன்னால் நின்று முணுமுணுத்துக் கொண்டேன் நான் நான் என்று” - என்ற ஜெமோவின் வாசகம் நினைவிற்கு வந்தது. இத்தனை நாட்களாய் அந்த “நான் நான்” ல் சிறுமையை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். மலைத்தொடருக்கு முன்னால் நிற்காமல் அதன் உச்சியில் நின்று இதே வாசகத்தை முணுமுணுத்தால் அந்த “நான் நான்” ல் சிறுமைக்கு பதிலாய் கர்வம் ஒலிக்கிறது. ”தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை சங்கரா யார்கொலோ சதுரர்?” என்ற மணிவாசகரின் கர்வம். :)</div>
<div class="wm VC" style="min-height: 0px; overflow: hidden; padding: 0px;">
<br />
”என் 34 வது வயதில் முதன் முறையாகப் பனி மலையைப் பார்க்கிறேன்” என்றார் சித்து. கேக்கை இங்கே கொண்டு வந்து வெட்டியிருக்கலாமே என்று சின்னதாய் ஒரு ஆதங்கம் எழுந்தது. இல்லாவிட்டாலும் கூட சித்து இதுவரை சந்தித்திராத அதியற்புதமான பிறந்தநாளாகவே அந்நாள் அமைந்தது. வீட்டிற்கு வந்ததிலிருந்து அம்மு ஃப்ரீசரில் பனிக்கட்டிகள் செய்து தரச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். அறை முழுக்க கொட்டி வைத்து விளையாடப் போகிறாளாம். :)</div>
</div>
</div>
காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-32904504.post-78115703808113919942013-02-27T23:16:00.003+05:302013-03-20T20:53:43.895+05:30லெபனான் பயணம் - பெய்ரூட் - 3<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-SaC2mJckVYA/US5F0KllI1I/AAAAAAAAFqg/Wigi_RCwFbQ/s1600/7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="321" src="http://4.bp.blogspot.com/-SaC2mJckVYA/US5F0KllI1I/AAAAAAAAFqg/Wigi_RCwFbQ/s400/7.jpg" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-wd6BnP9RJYQ/US5F0VSjD6I/AAAAAAAAFqk/pw24v3wgsWI/s1600/DSCN7587.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-wd6BnP9RJYQ/US5F0VSjD6I/AAAAAAAAFqk/pw24v3wgsWI/s400/DSCN7587.jpg" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-5zE4YQDVBfo/US5F5YEO23I/AAAAAAAAFqw/AI-8QLpHkqk/s1600/DSC00585.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="http://1.bp.blogspot.com/-5zE4YQDVBfo/US5F5YEO23I/AAAAAAAAFqw/AI-8QLpHkqk/s400/DSC00585.jpg" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-QdYpYi7G3Ns/US5GLNGOgHI/AAAAAAAAFq4/hk2ydwdsYLQ/s1600/_DSC3779.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="263" src="http://1.bp.blogspot.com/-QdYpYi7G3Ns/US5GLNGOgHI/AAAAAAAAFq4/hk2ydwdsYLQ/s400/_DSC3779.JPG" width="400" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<div style="background-color: white; font-family: Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">
இது Harissa. பெய்ரூட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் என்று நாங்கள் வைத்திருந்த லிஸ்ட்டில் இந்த இடம் இல்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகள் பிரைவேட் டாக்ஸி அல்லது தங்கியிருக்கும் ஹோட்டலின் கார் மூலம் பயணிப்பதாயிருந்தால் jeita Grotto - Harissa - Byblos ஆகிய மூன்றையும் ஒரே நாளில் பார்க்க வேண்டியிருக்கும். இதை ஒருநாள் பேக்கேஜாக வைத்து 100 டாலர்கள் வசூலிக்கிறார்கள். (ஹோட்டல் காருக்கு 120) பிரைவேட் டாக்ஸி டிரைவர்களில் ஒருவருக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. பெரும்பாலும் ஆதிகாலத்து சைகை மொழியிலேயே கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. </div>
<div style="background-color: white; font-family: Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">
Harissa ஒரு மலைக்கிராமம். கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றும் 15 டன் எடை கொண்ட அன்னை மேரியின் 27 அடி உயர வெண்கலச் சிலையும் இருக்கின்றன. 1908 ல் அமைக்கப்பட்ட சிலையாம். நிறைய ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வெகு சிரமப்பட்டு படியேறி சிலையை அடைந்து அங்கிருந்து கீழே ஊரையும் மேலே அன்னையையும் இடையில் தங்களையும் புகைப்படம் எடுக்கிறார்கள். நான் கீழே நின்றபடி மேரியின் விரிந்த கரங்களில் தெரிவது கருணையா கையறு நிலையா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பசி நேரமாகிவிட்டதால் அம்மு நசநசக்க ஆரம்பிக்கவும் சர்ச்சிற்குள் போகாமலேயே திரும்பி விட்டோம். மாதாவின் உருவம் பொறித்த கோப்பை ஒன்றை வாங்கி வந்தேன்.</div>
<div style="background-color: white; font-family: Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: left;">
கடற்கரை அருகிலிருந்து புறப்படும் ரோப் கார் மலை உச்சியை அடைகையில் திரும்பி கீழே பார்த்தால் ஒரே நேரத்தில் திகைப்பாகவும் திகிலாகவும் இருக்கிறது. சித்துவுக்கு ஆழத்தைப் பார்ப்பதென்றால் பயம்.. “என்னைப் பார்த்து சிரிக்கக் கூடாது” என்ற நிபந்தனையோடு வேர்க்க வியர்க்க கண்களை இறுக்கி மூடிக் கொண்டார். அம்மு சீட்டிலிருந்து கீழே இறங்கி மொத்தப் பெட்டியும் அதிருமளவுக்கு குதிப்பதும், கதவைக் கையால் உந்தித் தள்ளுவதுமாக திகிலூட்டிக் கொண்டிருந்தாள். பின்னாளில் பார்த்துச் சிரிக்கவும், அவ்வப்போது அவரை ப்ளாக்மெயில் செய்யவும் உதவும் என்று சித்துவின் பயந்த முகத்தைப் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டேன். :) “திரும்பி இதுல தான் கீழ போகனுமா? நான் மாட்டேன்.. பேசாம ஒரு டாக்ஸி புடிச்சி ரோடு வழியா கீழ போய்டலாம்” என்று புலம்பிக் கொண்டேயிருந்தார். நானோ ஜான்சிராணி போன்ற முகபாவத்தோடு.. “டாக்சில போனா சாயந்திரம் ஆய்டும் கீழ போக....அதெல்லாம் வேணாம். இதுல என்ன பயம்? தைரியமா இருங்கப்பா” என்று அட்வைசினேன். உண்மையில் திரும்பி கீழிறங்கும் போது எனக்குத் தான் பயத்தில் உயிரே போய்விட்டது. வேகமாக கீழிறங்கிக் கொண்டிருக்கையில் பாதி வழியில் திடீரென எங்கள் பெட்டி நின்று விட்டது. லேசான மிரட்சியோடு “ஏன் நின்னுடுச்சி? ஏன் நின்னுடுச்சி?” என்று இருவரும் மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருக்கையில் சித்து திடீரென “ஐய்யோ பின்னாடி ஒரு பெட்டி வேகமா வந்துட்டிருக்கு” என்றார். திரும்பிப் பார்த்தால் உண்மையாகவே பின்னால் ஒரு பெட்டி வேகமாக இறங்கி வந்து கொண்டிருக்க எங்கள் பெட்டி நின்ற இடத்திலேயே முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்தது. நல்லவேளையாக அப்போது என் முகத்தை யாரும் புகைப்படம் எடுக்கவில்லை. எங்கள் பெட்டிக்கு சற்று அருகில் வந்து அதுவும் நின்று விட்ட பின்னரே கொஞ்சம் மூச்சு விட முடிந்தது. பின் சீராக அனைத்தும் கீழிறங்கின. கீழே இறங்க இறங்க கயிறு எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்றே புரியவில்லை. சர்ர்ரென்று இறங்கி நேராக கடலில் போய் விழப்போவது போல ஒரு பிரமை தட்டியது. சித்துவுக்கு பயம் தெளிந்து விட்டது போல... வழியில் விதவிதமான அமைப்புகளில் கட்டபட்டிருந்த வீடுகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் முதல் 2 தளங்கள் பள்ளத்திலிருக்க இரண்டாவது தளத்தோடு சாலை இணைந்திருந்தது. :) </div>
<div style="background-color: white; font-family: Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">
இப்போது யோசித்தால் ஹரிஸ்ஸாவில் மிகப் பிடித்தது தேவாலயமோ, அன்னை மேரியின் சிலையோ.. அங்கே தத்தித் திரிந்த குழந்தைகளோ அல்ல.. ரோப் கார் நின்று கிளம்பியதற்கு இடைப்பட்ட திகில் நிமிடங்களே என்று தோன்றுகிறது.</div>
காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-32904504.post-14382892533664522142013-02-27T19:45:00.005+05:302013-03-20T20:52:10.985+05:30லெபனான் பயணம் - பெய்ரூட் - 2<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-CgOBjW4m-X4/US4U4P_dw7I/AAAAAAAAFP4/QLLT7mALar8/s1600/800px-ByblosSouk.jpg" imageanchor="1" style="background-color: white; margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-CgOBjW4m-X4/US4U4P_dw7I/AAAAAAAAFP4/QLLT7mALar8/s400/800px-ByblosSouk.jpg" width="400" /></a></div>
<span style="background-color: white;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-wJQNyzGxUi8/US4U5V0veXI/AAAAAAAAFQA/MntTFd7RKeU/s1600/lebanonbyblos.jpg" imageanchor="1" style="background-color: white; margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://4.bp.blogspot.com/-wJQNyzGxUi8/US4U5V0veXI/AAAAAAAAFQA/MntTFd7RKeU/s400/lebanonbyblos.jpg" width="400" /></a></div>
<span style="background-color: white;"><br /></span>
<span style="background-color: white;"><br /></span>
<span style="background-color: white;"><br /></span>
<span style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">பெரிய சங்கினை காதருகே வைத்துக் கேட்டிருக்கிறீர்களா? ஓயாத இரைச்சல் ஒன்று கேட்கும். கொஞ்சம் விலக்கியதும் சட்டென்று அமைதி சூழும். விளையாட்டுப் போல வேக வேகமாய் வைத்து எடுத்தால் இரைச்சலும் மெளனமும் மாற்றி மாற்றிக் கேட்கும். பெய்ரூட்டின் மைய நகரமும் இந்த பிப்லோஸ் நகரமும் இந்த சங்கு விளையாட்டினைத் தான் நினைவூட்டின. பெரிய இரைச்சலிலிருந்து சட்டென்று மிகப் பெரிய அமைதிக்குள் நுழைந்தாற் போலிருந்தது. Byblos.. கெளதம் மேனன் சொல்வது போல அவ்ளோ அழகு! </span><br />
<span style="background-color: white;"><br style="font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /></span>
<span style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">8000 வருடங்களாய் இதே பெயரோடு தொடர்ந்து மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் உலகின் மிகப் பழமையான நகரம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் லெபனான் வாசிகள். இரண்டாவது படத்திலிருக்கும் சாலையில் நின்று சற்றே அண்ணாந்து பார்த்தால் திகைப்பிலும் மகிழ்ச்சியிலும் ‘ஹா’ வென்று ஒரு உணர்வு வருகிறது. ஒரு புறம் முழுவதும் திகட்டத் திகட்ட கடல்! மறுபுறத்தில் திகைக்க வைக்கும் மலைகள்!! மொத்த லெபனானுமே இவற்றுக்கு நடுவில் தான் வசிக்கிறது போல. சர்க்கஸ் மாஸ்டரின் சாட்டைச் சொடுக்கலுக்குப் பணிந்து ஸ்டூல் மீதேறி நின்று வாய் பிளந்து கர்ஜிக்கும் சிங்கத்தைப் போலிருக்கிறது கடல். சொன்ன இடத்திலெல்லாம் வளைந்து கொடுத்து நின்று கொஞ்சமாய் அலை வீசிக் கொள்கிறது. கிள்ளி முத்தமிடலாம் போல அழகு! </span><br />
<span style="background-color: white;"><br style="font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /></span>
<span style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">இந்நகரத்தில் வானுயர்ந்த சிமெண்ட் கட்டிடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அனைத்தும் கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட நம்மை விட சற்றே உயரமான இணக்கமான குடியிருப்புகளாகவே காட்சியளிக்கின்றன. தெருவோரங்களில் ஆரஞ்சுப் பழ மரங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. சுற்றுச்சுவர் மட்டுமல்லாது வீட்டின் சுவர் முழுக்க பூங்கொடிகளைப் படர விட்டிருக்கிறார்கள். ஒரு வீட்டின் சுவரில் படர்ந்திருந்த கொடியைப் பார்த்து “இது திராட்சை இலை மாதிரியே இருக்கில்லப்பா?” என்றேன் சித்துவிடம். “திராட்சைக் கொடியாவே கூட இருக்கலாம்.. யார் கண்டா?” என்றார். அம்மு குறுக்கிட்டு “இது திராட்சைக் கொடி இல்ல.. இது மேங்கோ கொடி” என்றாள். நாங்கள் சிரித்து “மேங்கோ கொடியா? மேங்கோவெல்லாம் எங்க காணோம்?” என்றோம். கொஞ்சம் போல யோசித்தவள், “மேங்கோல்லாம் கொண்டு வந்து மாட்டுவாங்க... நாளைக்குக் கொண்டு வந்து மேங்கோ கொடில மாட்டுவாங்க” என்றாள். :))))</span>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-32904504.post-31061849801203555772013-02-27T15:51:00.000+05:302013-03-20T20:55:05.808+05:30லெபனான் பயணம் - பெய்ரூட் - 1<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-kT8zkFFXWvA/US3azCrCOcI/AAAAAAAAFOw/bOzDmlgrOg0/s1600/Statue-Outside-Jeita-Grotto.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/-kT8zkFFXWvA/US3azCrCOcI/AAAAAAAAFOw/bOzDmlgrOg0/s400/Statue-Outside-Jeita-Grotto.JPG" width="287" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-ospin13-dqI/US3azisKWnI/AAAAAAAAFO4/SB8-k6s4Sag/s1600/33340256.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://1.bp.blogspot.com/-ospin13-dqI/US3azisKWnI/AAAAAAAAFO4/SB8-k6s4Sag/s400/33340256.jpg" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-ndz_Gwy3vGY/US3az0MSaLI/AAAAAAAAFPE/0hXy0V1ds3I/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="299" src="http://4.bp.blogspot.com/-ndz_Gwy3vGY/US3az0MSaLI/AAAAAAAAFPE/0hXy0V1ds3I/s400/images.jpg" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-WmncnLmnc1Y/US3az7BgJxI/AAAAAAAAFPA/JGsi3TuO2Ck/s1600/29233777.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://4.bp.blogspot.com/-WmncnLmnc1Y/US3az7BgJxI/AAAAAAAAFPA/JGsi3TuO2Ck/s400/29233777.jpg" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-xMWHtRBXm28/US3a04ofqdI/AAAAAAAAFPQ/XOEwXw3131w/s1600/jeita-grotto-lebanon-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="260" src="http://4.bp.blogspot.com/-xMWHtRBXm28/US3a04ofqdI/AAAAAAAAFPQ/XOEwXw3131w/s400/jeita-grotto-lebanon-2.jpg" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-R3WwzDW9IO4/US3a1M_pRZI/AAAAAAAAFPY/9g1kqc2zeuM/s1600/n610165408_1758325_8763_thumb%5B1%5D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://4.bp.blogspot.com/-R3WwzDW9IO4/US3a1M_pRZI/AAAAAAAAFPY/9g1kqc2zeuM/s400/n610165408_1758325_8763_thumb%5B1%5D.jpg" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-f20hSj3D92Q/US3a1TIorUI/AAAAAAAAFPc/Oul7gOB5yCY/s1600/p134416-Beirut-Jeita_Grotto.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/-f20hSj3D92Q/US3a1TIorUI/AAAAAAAAFPc/Oul7gOB5yCY/s400/p134416-Beirut-Jeita_Grotto.jpg" width="300" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<span style="background-color: white;"><br /></span>
<span style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">இது Jeita Grotto. பெய்ரூட் சுற்றுலாவின் அதிமுக்கிய அம்சம். ஆழத்தில் செம்மண் கொழித்துக் கொண்டோடும் நதியின் மேல் ரோப் காரில் 5 நிமிடம் பயணித்தால் ஒரு அற்புத குகை வாயிலில் இறக்கி விடுகிறார்கள். உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. (இவையனைத்தும் இணையத்தில் சுட்டவை) அதனால் குகையின் அழகை பேராசையோடு கண்களால் அள்ளி மனதின் கொள்ளளவு முழுக்க நிறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளே பாறைகள் உருகி வழிந்தாற் போன்றும், மெல்லிய துணி மடிப்புகள் போன்றும், அழகிய சிற்பக் காடு போன்றும் தோற்றமளிக்கின்றன. கற்கள் மேலிருந்து உருகி வழிகின்றனவா அல்லது கீழிருந்து மேல்நோக்கி வளர்கின்றனவா என்று கணிக்க முடியாத தோற்றம். 'தொடாதே' என்று பலவிடங்களில் எழுதியிருந்தாலும் கற்களின் பளபளப்பும், வழவழப்பும் ரகசியமாய்த் தொட்டுப் பார்க்கத் தூண்டுகின்றன. இங்கிருந்து படகில் வேறொரு குகைக்கு கூட்டிப் போவார்களாம். அங்கே ஆக்ஸிஜன் மிகக் குறைவாக இருக்கும் என்று கேள்விப்பட்டதால் நாங்கள் போகவில்லை. குகையினுள்ளே மாயமாய் இயங்கிக் கொண்டிருப்பது மேலிருந்து செதுக்கும் சிற்பியின் கரங்களா, கீழிருந்து வளர்த்தெடுக்கும் குயவனின் கரங்களா என்பது இயற்கைக்கே வெளிச்சம். சென்ற ஓரிரு பயணங்கள் போலில்லாமல் குழந்தை இப்பயணத்தை மகிழ்ந்து கொண்டாடுகிறாள். குகையினுள் நுழைந்து நடந்து கொண்டிருக்கையில், "அம்மா நாம எங்க இருக்கோம்? மலைப்பாம்பு வயித்துக்குள்ள நடக்கறோமா?" என்றாள்! :)</span>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-32904504.post-32184453196194251932013-02-14T05:36:00.000+05:302013-02-14T05:48:20.632+05:30சமர் - வி(மர்)சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-hLICsFOVj7s/URwqOl3c8QI/AAAAAAAAFKk/iUgvHp0sKcE/s1600/black-baby-crying.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-hLICsFOVj7s/URwqOl3c8QI/AAAAAAAAFKk/iUgvHp0sKcE/s320/black-baby-crying.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<br />
<span style="font-family: arial;">நீ தானே என் பொன் வசந்தம், கடல், விஸ்வரூபம் ந்னு வரிசையா காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சி “நமக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லலாமா கூடாதா? சொன்னா யாராச்சும் மூக்கு மேலயே குத்துவாங்களோ?” ந்னு என்னைய மிரள வெச்சீங்களே மக்கா.. ஒருத்தராச்சும் இந்த வீணாப்போன ‘சமர்’ பத்தி முன்னாடியே சொன்னீங்களா? போன வருஷம் “ராஜபாட்டை” ந்னு ஒரு படத்துக்குப் போய்ட்டு அப்டியே நேரா ஹாஸ்பிடல்ல போய் படுத்து 2 பாட்டில் டிரிப்ஸ் இறக்கிகிட்டு தான் வீட்டுக்கே போனோம். அதுக்கப்புறம் இந்த வருஷத்துல ஊரே ஒன்னு கூடி ‘வேணாம்.. பாக்காதீங்க’ ந்னு கத்தியும் கேக்காம கார்த்தியாச்சே.. அனுஷ்காவாச்சே ந்னு சபலப்பட்டு அலெக்ஸ் பாண்டியன் பார்த்தேன்... அதுவும் தன்னந்தனியா. பாதிப்படம் பாக்கும் போதே “எனக்கு எதாவது ஆய்டுச்சுன்னா அதுக்கு இன்னின்னார் தான் காரணம்”னு முன்னெச்சரிக்கையா சித்துவுக்கு ஒரு லெட்டர் எழுதி வெச்சிடலாமான்னு தோணுச்சு. ஆனா அதுக்கும் கூட தெம்பில்லாம போய் பழைய படங்கள்ல செத்தவங்க / மயங்கிக் கிடக்கறவங்க பக்கத்துல விஷம்னு எழுதின பாட்டில் ஒன்னு உருண்டு கிடக்குமே.. அதே மாதிரி லேப்டாப் பக்கத்துலயே குத்துயிரும் கொலையுயிருமா நான் உருண்டு கிடந்தேன். அதுக்கப்புறம் அதே மாதிரி நேத்து ஒரு விபத்து. :(</span><br />
<div style="font-family: arial;">
<br /></div>
<div style="font-family: arial;">
<div>
சம்பவம் நடக்கறதுக்கு மொத நாள் நைட் சித்து தனியா என்னவோ லேப்டாப்ல பார்த்துட்டு இருந்தார். கொஞ்சமே கொஞ்சம் பார்த்துட்டு ரொம்ப உஷாரா ஆஃப் பண்ணிட்டார். சுகமோ துக்கமோ 2 பேரும் சேர்ந்து தான் அனுபவிக்கனும்ன்ற நினைப்பு கூட காரணமா இருக்கலாம். போதாக்குறைக்கு என்கிட்ட ”படம் நல்லா இருக்கும் போலிருக்கு.. நாளைக்கு நாம சேர்ந்து பாக்கலாம்”ன்னு சொல்லிட்டுத் தூங்கினார். இன்னிக்கு பாக்க ஆரம்பிச்சோம்.. ஆரம்பத்துல என்னவோ நல்லாத்தான் போய்ட்டிருந்துது..போகப் போகத் தான் சகிக்கல. இருங்க.. கதை என்னன்னு சுருக்கமா சொல்ல முடியுதான்னு பாக்கறேன். இதை சுருக்கமா சொன்னாலே உ.த அண்ணாச்சி ’என்னையவா நக்கல் பண்ற?’ ந்னு சண்டைக்கு வர வாய்ப்பிருக்கு. :)</div>
<div>
<br /></div>
<div>
விஷால் பேரு ஷக்தி. ஊட்டில இருக்கார். அவரோட காதலி சுனைனா ”நீ நான் எதிர்பார்க்கற மாதிரியெல்லாம் இல்ல.. என் பர்த் டேவ கூட மறந்துட்ட.. நாம பிரிஞ்சிடலாம்” நு சண்டை போட்டுகிட்டு பாங்காக் போய்டறாங்க. 3 மாசம் கழிச்சு “உன்னை மறக்க முடியல.. ரொம்ப மிஸ் பண்றேன். பாங்காக் கிளம்பி வா” ந்னு ஃப்ளைட் டிக்கெட்டோட சுனைனாகிட்டருந்து ஒரு லெட்டர் வருது.. இவரும் கிளம்பிப் போய் சென்னை ஏர்போர்ட்ல பேந்த பேந்த முழிச்சிட்டு நின்னு த்ரிஷாவும் பாங்காக் தான் போறாங்கன்னு அவங்களை ஃப்ரண்ட் புடிச்சிகிட்டு பாங்காக் போய்ச் சேர்றார். அங்க சுனைனா வெய்ட் பண்ண சொன்ன இடத்துல நாள் முழுக்கக் காத்திருந்தும் அம்மணி வரல. நைட் போலீஸ்கார் சம்பத் வந்து என்னா ஏதுன்னு விசாரிச்சுட்டு என் வீட்ல தங்குன்னு கூட்டிட்டு போறார். ரெண்டாவது நாளும் சுனைனா வராததால இவரு வெறுத்துப் போய் நான் ஊருக்கே போறேன்னு ரிடர்ன் டிக்கெட் வாங்கி வெச்சிருக்கும் போது திடீர்னு ஒரு டிவிஸ்ட்டு. ஒரு கும்பல் கார்ல வந்து பொட்டுப் பட்டாசு வெடிக்கறாப்ல விஷாலை கண்டமேனிக்கு சுடுது. (இத்தனை வருஷம் படம் பார்த்த அனுபவத்தை வெச்சி ஒரு குண்டு கூட விஷால் மேல பட்டிருக்காதுன்னு உமக்குத் தெரிஞ்சுதுன்னா நீரும் தமிழரே!) அப்போ இன்னொரு கும்பல் வந்து பதிலுக்கு பட்டாசு வெடிச்சு விஷாலை காப்பாத்தி கார்ல ஏத்தி கூட்டிட்டு போகுது. கூட்டிட்டு போற ஆள் “ஷக்தி சார்..நான் உங்க பி.ஏ சார்.. மனோகர். என்னைத் தெரிலயா? என்னாச்சு சார் உங்களுக்கு?” அப்டின்றார். கார்ல இருக்கற எல்லா மேகசின்லயும் விஷால் படமும் பேரும் போட்டு பெரிய பிசினஸ் மேக்னட்னு எழுதியிருக்குது. விஷாலை நேரா ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போய் தங்க வைக்கறாங்க. இவரும் ‘நான் அவனில்லை’ ந்னு கத்திகிட்டே என் பாஸ்போர்ட்டைப் பாருங்கன்னு எடுத்துக் குடுக்கறார். ஊட்டிய விட்டு மொத தடவையா பாங்காக் வந்திருக்கற விஷால் பாஸ்போர்ட்ல எல்லா நாட்டு விசாவும் இருக்குது. விஷால் கன்னாபின்னான்னு குழம்பி நம்மளையும் குழப்பி த்ரிஷாகிட்ட போய் புலம்பறார். அவங்க போலீஸ்கிட்ட கூட்டிட்டு போறாங்க. போலீஸ் விஷாலுக்கு சல்யூட் அடிக்குது.. பேங்க்குக்கு போய் ”நான் வேற ஆளு என் கையெழுத்தை செக் பண்ணுங்க”ன்னு கையெழுத்து போட்டுக் குடுத்தா அது மேட்ச் ஆகி அக்கவுண்ட்ல கோடிக்கணக்குல பேலன்ஸ் காமிக்குது. த்ரிஷாவே மிரண்டு போய் “யார் நீ உண்மையை சொல்லு..” ந்னு மிரட்டறாங்க. ஊடால ஹோட்டல் லிப்ட்ல ஒரு பொண்ணு “நீ மாட்டிகிட்டிருக்க.. உடனே ஓடிப் போயிரு” ந்னு ஒரு துண்டு சீட்டுல எழுதி ரகசியமா கைல குடுக்குது. அது டைரக்டர் ரகசியமா நமக்குக் குடுக்கற மெசேஜ்ன்னு அப்பவே உங்களுக்குப் புரிஞ்சிடுச்சின்னா உங்க ஐ க்யூ லெவல் 200 க்கு மேல இருக்குன்னு அர்த்தம். நீங்க எங்கயோஓஓ போய்டுவீங்க.. :))</div>
<div>
<br /></div>
<div>
இப்ப அடுத்த டிவிஸ்ட்டு. மறுநாள் ஹோட்டலுக்குப் போனா விஷாலோட செக்யூரிட்டீஸ், பி.ஏ ந்னு யாரையும் காணோம். இங்க ஷக்தின்னு யாருமே தங்கலன்னு சொல்லி ஆள் வெச்சு துரத்தறாங்க. அப்ப தான் ஹீரோ ஒரு விஷயத்தை கவனிக்கறார்.. அவர் மொத நாள் லிப்ட் ஏறப் போகும் போது டென்ஷன்ல லிப்ட் பக்கத்துல இருந்த 5 குருவி பொம்மைகள்ல ஒன்னை வேற டைரக்ஷன்ல திருப்பி வைப்பார். அது இன்னும் அதே திசைல தான் இருக்கும்.. அவர் தங்கியிருந்த ஹோட்டல் ரூம்லயும் அதே மாதிரி 2 குருவி பொம்மை இருக்கும். ஒரு போலீஸ்கார் வீட்ல 2 நாள் தங்கியிருந்தாரே அந்த வீட்லயும் அதே மாதிரி 2 குருவி பொம்மை இருக்கும். எல்லாம் ஒவ்வொன்னா பளிச் பளிச் நு மின்னல் மாதிரி அவருக்கு நியாபகம் வந்ததும் எதோ பெரிய உண்மையை கண்டுபிடிக்கப் போறார்னு எதிர்பார்த்தேன்.. அதான் இல்ல. ”எல்லாப் பக்கமும் குருவி பொம்மையைக் காட்டறாங்க.. அப்டின்னா என்ன அர்த்தம்? குருவி படத்துல ஹீரோயின் யாரு? த்ரிஷா! அப்ப த்ரிஷா தான் இதுக்கெல்லாம் காரணமா இருக்கனும்” அப்டின்னு சி ஐ டி ஜெய்சங்கர் ரேஞ்சுக்கு நானே உண்மையைக் கண்டுபிடிக்க டிரை பண்ணிட்டிருக்கேன்... இந்த மக்கு விஷால் என்னடான்னா அமிர்தாஞ்சன் விளம்பரம் மாதிரி தலையைப் பிடிச்சிகிட்டு “குழப்பமா இருக்கே” ந்னு கத்தறார். </div>
<div>
<br /></div>
<div>
அப்றம் மறுக்கா ஒரு டிவிஸ்ட்டு.. எதேச்சையா சுனைனாவே நேர்ல வந்து ”நான் உனக்கு லெட்டர் எதுவும் போடவே இல்ல.. உன்னை காதலிக்கவும் இல்ல” ந்றாங்க. அதுக்கு பதிலா த்ரிஷா “நான் உன்னை காதலிக்கறேன்”ன்றாங்க. விஷால் முடியாதுன்றார். நியாயமா இந்த இடத்துல “காதல்ன்றது... “ அப்டின்னு தொடங்கி சோகமா 7 பக்கத்துக்கு வசனம் வெச்சிருக்கனும். ஹ்ம்ம்.. டைரக்டருக்கு சாமர்த்தியம் போதல. அப்றம் விஷால் ”நான் ஊருக்கே போறேன்”னு கிளம்பும் போது ஏர்போர்ட் வாசல்ல த்ரிஷாவை யாரோ துரத்தறாங்க. இவரு திரும்பி வந்து சண்டை போட்டு காப்பாத்திட்டு இனிமே உன் கூடவே இருக்கேன்றார். அப்றம் தனக்கு பிஏ ந்னு சொல்லிட்டிருந்த ஆளை எங்கயோ ரோட்ல பார்த்து அரை மணி நேரமா துரத்தி ஒரு மணி நேரம் அடிச்சு “நீ யாரு.. என்ன ஏது” ந்னு கேள்வியா கேக்கறார் ஹீரோ. அந்தாள் ”நான் உண்மையை சொல்லலன்னா நீ என்னை கொன்னுடுவ.. நான் உண்மையை சொல்லனும்னு நினைச்சாலே அவங்க என்னை கொன்னுடுவாங்க. அவங்களை நீ நெருங்கவே முடியாது.. அவங்க கடவுள் டா..” ந்னு அவங்க அப்டி அவங்க இப்டின்னெல்லாம் சொல்லிட்டு லூசு மாதிரி “அது என்ன உண்மைன்னா” ந்னு சொல்ல ஆரம்பிக்கறார். உடனே யாரோ சுட்டு கொன்னுடறாங்க. அந்தாளே குப்புறடிக்க சாக்கடைல விழுந்துடறார். காலைல போலீஸ் வந்து பிணத்தை எடுத்தா அது வேற யாரோட பிணமோவாம். அது ஒரு கஞ்சா வியாபாரி. ”உனக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? யூ ஆர் அண்டர் அரஸ்ட்” னு விஷாலை ஜெயில்ல போட்டுடறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்.. அய்யோ.. அம்மா.. அய்யோ.. அம்மா.. </div>
<div>
<br /></div>
<div>
அப்றம் த்ரிஷாவோட அங்கிள்னு சொல்லிகிட்டு ஜெயப்பிரகாஷ் வந்து விஷாலை வெளில கொண்டு வர்றார். மறுநாள் திரும்ப விஷால் இந்தியா கிளம்பினா திரும்ப த்ரிஷாவை யாரோ கடத்திட்டு போய்டறாங்க. கடத்திட்டு போற வேனை வேகமா ஃபாலோ பண்ணுங்கன்னு ஜெயப்பிரகாஷ்கிட்ட சொன்னா அவர் வண்டிய ஓரமா நிறுத்தி வெச்சிட்டு ஒரு படகுல விஷாலை எங்கயோ கூட்டிட்டு போறார். அங்க ஸ்ரீமன் உக்காந்துகிட்டு “அந்தப் பொண்ணை மாலி தான் கடத்தியிருப்பான்.. அவனை நெருங்கவே முடியாது. அவளை மறந்துடுங்க” ந்னு சொல்றார். விஷால் அங்க போய் மாலிய அடிச்சிப் போட்டுட்டு த்ரிஷாவை காப்பாத்தறார். த்ரிஷாவை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்ற முடிவுக்கு வரும்போது த்ரிஷாவோட காதலன்னு சொல்லிகிட்டு ஒரு ஆள் வர்றார். ஊடால ஊடால 2 வில்லனுங்க நைட்ரஸ் ஆக்ஸைடை மோந்த மாதிரி சும்மனாச்சுக்கும் சிரிச்சிகிட்டே இருக்காங்க. அப்றம் த்ரிஷா செத்துப் போறாங்க... ஆனா சாகல. அப்றம் 2 வில்லனுங்களும் செத்துப் போறாங்க.. ஆனா பாருங்க அவங்களும் சாகல. கடைசியா வில்லன்ஸோட ஆளுங்களே அவங்களைக் கொல்றாங்க. அப்பவும் அந்த லூசுங்க பக பக ந்னு சிரிச்சிகிட்டே இருக்குதுங்க. இதுங்களுக்கு ஒரு பைசாப் பொறாத ஃப்ளாஷ்பேக் வேற. முக்கால்வாசிப் படம் பார்க்கும்போது விஸ்வரூபத்துக்கு வருதோ இல்லையோ சமருக்கு பார்ட் 2 கண்டிப்பா வந்தே தீரும்.. இது இப்போதைக்கு முடியாது போலயே ந்னுசெம டயர்டாய்டுச்சி. :((</div>
<div>
<br /></div>
<div>
கட்டங்கடைசியா வில்லனுங்களும் செத்தப்புறம் யாருக்குன்னே தெரியாம விஷால் ஒரு பஞ்ச் டயலாக் பேசறாரு.. “வாழ்க்கை சிலருக்கு வரமா இருக்கும்.. சிலருக்கு சாபமா இருக்கும்.. ஆனா எனக்கு அது யுத்தம்டா” ந்னு. சொக்கத்தங்கம் படத்துல தன் தங்கச்சிய கிண்டல் பண்ணினவனை ஓங்கி அறைஞ்சிட்டு ”இன்னும் 10 நிமிஷத்துக்குள்ள இவனை ஹாஸ்பிடல் கொண்டு போங்க.. இல்லன்னா செத்த்த்த்துடுவான்” அப்டின்னு கேப்டன் சிரிக்காம சொல்வார். அதை பாக்கறப்பல்லாம் நான் சிரி சிரின்னு சிரிப்பேன். அதுக்கப்புறம் இந்த டயலாக்குக்கு தான் விழுந்து விழுந்து சிரிச்சேன். படம் முடிஞ்சி எழுந்து ரூமுக்குள்ள போகும் போது காலண்டர்ல பார்த்தா 16 - 02 - 2013 ந்னு இருந்துச்சு.. அப்டியே ஷாக்காகி “ ஏம்ப்பா 2 நாளாவா படம் பார்த்துகிட்டு இருக்கோம்?” ந்னு சித்துகிட்ட கேட்டேன். “இல்லம்மா 12 மணி ஆய்டுச்சேன்னு நான் தான் தேதி கிழிச்சேன்.. கூடவே 2 ஷீட் சேர்ந்து கிழிஞ்சிடுச்சி” ந்னார். :)</div>
</div>
காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-32904504.post-78939765932148756492012-11-05T12:20:00.002+05:302012-11-05T12:20:31.815+05:30கனாக் காணும் காலங்கள்<span style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">என் உறக்கம் எப்போதும் கனவுகள் நிறைந்தது. நல்லதோ அல்லதோ.. கனவுகள் இல்லாமல் தூங்கிய நாட்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் அம்மா தான் சிக்கிக் கொள்வார்கள். கனவு மறக்கும் முன்பாக சொல்லியே ஆக வேண்டுமென்று அடம்பிடித்து உட்கார வைத்து விலாவரியாய் மொத்தக் கனவையும் விவரிப்பேன். இடையில் எப்போதாவது அவர்கள் வேகமாக கண் சிமிட்டினாலோ பார்வை வேறு பக்கம் சென்றாலோ கவனம் குறைகிறது என்று கண்டுபிடித்து விடுவேன். "இப்ப வேற என்னமோ யோசிச்சீங்க தான? பொய் சொல்லாதீங்க.. அப்டின்னா நான் கடைசியா என்ன சொன்னேன்? சொல்லுங்க.. " என்று வம்படியாய் டார்ச்சர் செய்வேன். திருமணத்திற்கு பிறகு அந்த இடத்தில் சித்து. பொறுமையாய் கேட்டு முடித்து விட்டு (வேற வழி?) "எப்டி இவ்ளோ நியாபகம் வெச்சிருந்து சொல்ற? எனக்கெல்லாம் கனவே வர மாட்டிங்குதே" என்று ஆச்சரியப்படுவார். பெரும்பாலும் காட்சிச் சிதறல்களாய் குழப்பங்கள் நிறைந்த கனவுகள் தான் வரும். எப்போதாவது, கனவு காண்கிறோம் என்ற பிரக்ஞையோடேயே விழித்துக் கொள்ள விரும்பாத இனிமையான கனவுகள் வாய்க்கும். எனினும்.. மனதில் அதிகம் பதிந்திருப்பவை துர்கனவுகளே. பாம்புகள், நெருங்கிய உறவினர் மரணம், அறையில் தீ, அமானுஷ்ய துரத்தல்கள், உயரத்திலிருந்து விழுதல், போன்ற வழக்கமான துர்கனவுகளுக்கு அடிக்கடி மிரண்டு எழுந்து இருக்கிறேன்.. அழுதுமிருக்கிறேன். நாள் முழுக்க அசதியையும் மனச்சோர்வையும் கொடுத்த கனவுகளும் உண்டு.</span><br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">நேற்றும் ஏதோவொரு கெட்ட கனவுடனேயே விடிந்தது. சிவந்த ஈறுகள் தெரிய, வாயில் எச்சில் ஒழுகும் வெறிநாய்கள் சூழ்ந்து கொண்டது போலவும், கருப்பு நாயொன்று பாய்ந்து கையில் கடித்ததுமில்லாமல் கோபமாய் எந்த மொழியிலோ திட்டியது போலவும் கனவு வந்தது. கடிபட்ட இடத்தில் இரத்தத்திற்கு பதிலாய் வெண்நுரை பொங்கி வழிந்து கொண்டேயிருந்தது. கண் விழித்தபோது பயம் திரண்டு கனத்த துக்கமாக மாறி அழுத்தமாய் தொண்டைக் குழியை அடைத்துக் கொண்டு நின்றது. வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது. அழுதால் நிச்சயம் இது கரைந்து விடும் என்று நினைத்துக் கொண்டே அமைதியாய் கண்ணீர் விட்டபடி படுத்திருந்தேன். திடீரென்று அம்மு சத்தமாய் அழுது கொண்டே எழுந்து நின்றாள். என் துக்கம் போன இடம் தெரியவில்லை. கண்ணீரை அவசரமாய் துடைத்துக் கொண்டு.. "என்னடா? என்ன செல்லம் ஆச்சு? எதுக்கு அழறே?" என்று சமாதானப்படுத்த முயற்சித்தேன். "அம்மா நானா பாப்பாவை விட்டுட்டே போய்ட்டாங்க.. அம்மாவும் நானாவும் பாப்பாவை விட்டுட்டே பைக்ல போய்ட்டாங்க" என்று ஓயாமல் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டும் விம்மி விம்மி அழுது கொண்டுமிருந்தாள். "எங்கயும் போகலடா.. இங்க பாரு ரெண்டு பேரும் உன் பக்கத்துல தான் இருக்கோம்.. அழக் கூடாது.. இது வெறும் கனவு. கனவுக்கு போய் யாராச்சும் அழுவாங்களா? அழாத செல்லம்.. அம்மா இருக்கேன்.. உன் கூடவே தான் இருப்பேன்.. தூங்குடா தங்கம்..தூங்கும்மா" என்று அவளை தட்டிக் கொடுத்தபோது அதுவரை சிறுமியாய் அழுது கொண்டிருந்த காயத்ரி திகைத்து என்னைப் பார்த்துத் திருதிருவென விழித்தாள். லேசாய் புன்னகைத்து "உனக்கும் சேர்த்து தான் சொன்னேன்.. நான் இருக்கேன்..படுத்துக்கோ.. தூங்கு" என்று அவளையும் தட்டிக் கொடுத்து தூங்க வைத்து விட்டு தைரியமான அம்மாவாய் நானும் தூங்க ஆரம்பித்தேன். </span><br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">இந்த மாதம் தான் கவனிக்கிறேன்.. அமுதினிக்கும் அடிக்கடி கனவுகள் வருகிறது. என்னைப் போலவே எழுந்ததும் அதை சொல்லவும் ஆரம்பித்திருக்கிறாள். என்னைப் போலவே பெரும்பாலும் மிரண்டு அழுது கொண்டு தான் எழுகிறாள். முதல் முறை தூக்கத்திலிருந்து எழுந்து தேம்பிக் கொண்டே "அம்மா.. அழுதாங்க.. அம்மா அழுதாங்க..அம்மா பாத்து பாப்பாவும் அழறா" என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். "இல்லடா.. செல்லம்.. அம்மா அழவே இல்ல. இங்க பாரு.. எப்டி சிரிக்கறேன் பாரு" என்று சிரித்து சிரித்து சமாதானப்படுத்தினேன். என்னைப் போல் கனவை காலையில் சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் நியாபகம் வைத்திருந்து நாள் முழுக்க அடிக்கடி மறுஒலிபரப்பு செய்வதை இவள் வழக்கமாகக் கொண்டிருப்பதால் அன்று நாள் முழுவதும் நான் அடிக்கடி அவளுக்கு சிரித்துக் காட்ட வேண்டியிருந்தது. :) மற்றொரு முறை பெரிய பூச்சியொன்று தன்னைப் பிடிக்க வந்ததாக சொல்லி அழுதாள். அன்று அந்த பயத்தைப் போக்குவதற்காக யூடியூபில் விதவிதமான பூச்சி வகையறாக்களைப் பார்க்க வைத்தேன். தற்செயலாய் வீட்டில் தென்பட்ட குட்டி கரப்பான்பூச்சியொன்றை கண்ணாடி கிண்ணத்தால் மூடி சிறைபிடித்து நாள் முழுக்க வெளியிலிருந்து தைரியமாய் வேடிக்கை பார்த்தோம். இப்போதெல்லாம் பூச்சியென்றால் அம்முவிற்கு பயமே இல்லை. கனவிலோ நேரிலோ பூச்சியை சந்திக்க நேர்ந்தால் "போ பூச்சி" என்று கோபமாக திட்டி விரட்டப் போவதாக சொல்லியிருக்கிறாள். குளியலறை மூலையில் ஒட்டியிருக்கும் சிறிய குப்பையை பூச்சியென்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழையும் போதெல்லாம் "போ பூச்சி.. பாப்பா சொல்றேனில்ல?" என்று 2 நாட்களாய் மிரட்டிக் கொண்டிருக்கிறாள். :) </span><br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">முதல்நாள் பள்ளிக்கு சென்று வந்த பிறகு, மூன்றாவது நாள் காலை திடீரென வீறிட்டு அலறி எழுந்தாள்.. தொடர்ந்து நிற்காத அழுகை. வெகு நேரம் விசாரித்தும் பதில் சொல்லாமல் அழுது கொண்டேயிருந்தாள். கொஞ்சம் கழித்து சமாதானமானது போல் இருக்கிறாளே என்று "என்னடா குட்டி? கனவு கண்டியா? ஏன் அழுத?" என்று கேட்டதும் திரும்பவும் அழ ஆரம்பித்தாள். பின் திக்கித் திக்கி தழுதழுத்தபடியே.. "அண்ணால்லாம்.. அட்ச்சி.. பாப்பா அழுதா" என்று ஆரம்பித்து முடிப்பதற்குள்ளாகவே 'ஓ' ந்னு கத்தி அழ ஆரம்பித்தாள். நான் கலங்கிப் போனேன். பள்ளி குறித்த பயத்தில் தான் அழுகிறாளோ.. அங்கிருந்த பையன்கள் அவளை அடிப்பது போல கனவு கண்டிருப்பாளோ.. இந்த அளவிற்கா அவளின் பிஞ்சு மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது?.. அவளுக்கு இந்த பள்ளி பிடிக்கவில்லையா?.. சுத்தமாய் பிடிக்காமலேயே போய்விட்டால் என்ன செய்வது?.. இல்லாவிட்டால் இப்போதே வேறு பள்ளிக்கு மாற்றி விடலாமா? என்றெல்லாம் கன்னாபின்னாவென்று சிந்தித்தபடியே குரலில் பரிவு பொங்கி வழிய "அண்ணால்லாம் பாப்பாவை அடிச்சிட்டாங்களா கண்ணு?" என்றேன். அவள் அழுகையை சற்று நிறுத்தி "இல்ல.. பாப்பா தான் அண்ணாவையெல்லாம் அடிச்சா.." என்று சொல்லிவிட்டு திரும்ப அழுகையைத் தொடர்ந்தாள். ஙே!! என்றாகிவிட்டது எனக்கு. எதற்கும் இன்னொரு முறை தெளிவுபடுத்திக் கொள்ளலாமென்று "அண்ணாவையெல்லாம் நீயே அடிச்சிட்டு நீயே அழுதியா கண்ணு?" என்று கேட்டதற்கு.. "ம்ம்ம்ம்ம்ம்" என்று ராகமிழுத்துவிட்டு கர்மசிரத்தையாய் மீண்டும் அழ ஆரம்பித்தாள். :)))</span><br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">இன்று காலையிலும், "பாப்பா மேல இருந்து கீழ விழப் போய்ட்டா" என்று அழுது கொண்டே எழுந்தாள். "எது மேல இருந்து விழுந்த? எதைப் பார்த்தாலும் மேல ஏறி ஏறி நிக்காத.. டமால்னு விழுந்துடுவ.. அடிபட்டுடும்ன்னு சொன்னா கேட்டா தான?" என்று பொய்யாக அதட்டினேன். உடனே உதடுகள் பிதுங்க, கன்னங்கள் அழுகையில் உப்பிக் கொண்டன. "சரி.. சரி அழாதடா... எது மேல ஏறி விழுந்த? சொல்லு" என்றதும் "அதா அந்த சூரியன் இருக்கில்ல? அங்க இருந்து தான்" என்று ஜன்னலைக் காட்டி பதில் சொன்னாள்! </span>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-32904504.post-37947627223517520322012-10-23T20:23:00.001+05:302012-11-05T12:20:53.435+05:30நசை பெரிதுடைமை<div class="ci gv" style="font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; margin: 0px; padding: 3px 16px 0px; text-overflow: ellipsis;">
<div class="gE Gp" style="padding-bottom: 12px;">
<div class="wm VC" style="min-height: 0px; overflow: hidden; padding: 0px;">
<br />
சித்துவிற்கு உயரம் என்றால் பயம். இப்படி நான் சொல்லும் போதெல்லாம் சித்து அருகிருந்தால் உடனே ஆட்சேபிப்பார். "எனக்கு உயரமென்றால் பயமில்லை. ஆழமென்றால் தான் பயம்" என்பார். அந்த பதில் ஒவ்வொரு முறையும் என்னை ரசனையாய் புன்னகைக்க வைக்கும். உணர்வுகளிலும் கூட இப்படித் தான். அவருக்கு உயர, ஆழங்கள் மிக அரிது. நானோ இவ்விரண்டு புள்ளிகளுக்கிடையில் பயணிப்பதையே தன்னியல்பாய்க் கொண்டவள். சமதளங்கள், புது முகங்கள், பொது இடங்கள், உயர் ஆளுமைகள், ஆரவாரமிக்க சபைகள், சவ்வூடு பரவும் பார்வைகள், பேச்சினை கலையாக அல்லது தொழிலாகக் கருதும் உதடுகள், கணக்குகள், புதிர்கள், அலர், அறிவினா, அரட்டை ஆகியவற்றிலிருந்தெல்லாம் எப்போதும் ஒதுங்கியிருக்கவே விழைவேன். 3 வயதில் முதன் முதலாக பள்ளிக்கு அனுப்பிய போது என்னை விடவும் அம்மா தான் மிகவும் சோர்ந்து போனார்கள். ஓயாத அழுகையில் தொடங்கி, வயிறு வலி, காது வலி, பல் வலி என்றெல்லாம் பொய் சொல்லி அழுது அம்மாவை வரவழைப்பது, இடைவேளை நேரத்தில் தப்பித்து பக்கத்தில் எதாவது கடையில் உக்கார்ந்து கொண்டிருந்து விட்டு பள்ளி முடிந்ததும் போய் பையை எடுத்துக் கொண்டு நல்ல பிள்ளையாய் வீட்டுக்குப் போவது என்று வயது ஏற ஏற என் தப்பித்தலியலும் (எஸ்கேபிசம்?) வளர்ந்து கொண்டிருந்தது. கல்லூரியில் இரண்டாம் வருடம் முதல் நாளன்று அம்மா வகுப்பறை வரை வந்து உள்ளே அனுப்பி விட்டுப் போகுமளவிற்கு அது என்னுள் வேரூன்றியிருந்தது. புகுந்த வீட்டிலும் கூட இந்த குணத்தால் சில சிரமங்கள் இருக்கவே செய்தன. என் பலமென்று நானும் பலவீனமென்று சித்துவும் கருதும் இக்குணாம்சம் அமுதினியிடமும் பிரதிபலிப்பதில் இருவருக்குமே உடன்பாடில்லை தான்,என்றாலும் அவளும் இன்று வரையில் இப்படியான கவலைகளுக்கு இடமளித்ததில்லை. இன்று வரையில்.... :)<br />
<br />
அம்முவிற்கு இப்போது இரண்டரை வயதாகிறது. வீட்டைத் தூக்கி ஒரு டப்பாவில் போட்டு குலுக்கி தலைகீழாய் கொட்டுவதற்கு ஈடாய் குறும்புகள் செய்வாள். அவளை வைத்துக் கொண்டு எந்தவொரு வேலையையும் என்னால் செய்துவிட முடியாது. அவள் தூங்கும் நேரம் சமைத்தால் தான் உண்டு. இல்லாவிட்டால் ஹோம் டெலிவரிக்கு தொலைபேச வேண்டியிருக்கும். எப்போதும் என் அருகில் அல்லது மடியில் தான் இருப்பாள். தினமும் இரவு 12 மணிக்கோ 1 மணிக்கோ தூங்குவது. காலையில் 10 மணிக்கு விழிப்பது.. இடைப்பட்ட நேரம் முழுக்க குறும்புகள் செய்வது என்ற அவளது வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்த வேண்டி, கடந்த ஒரு மாத காலமாக அவளை பள்ளியில் சேர்ப்பது குறித்த தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தோம். அமெரிக்க, இங்கிலாந்து, இந்திய கல்வி முறைகளில் எந்த கல்வித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்படுப்பது என்று திசையறியாது நீண்ட எங்கள் குழப்பம், வெகு நாட்கள் நீடித்து 'மாண்டிசோரி கல்வி' என்ற முனையில் நின்று, 'ப' திருப்பமெடுத்து 'எந்த மாண்டிசோரி பள்ளி?' என்ற திசையில் மீண்டும் நீளத் தொடங்கியது. நல்ல பள்ளி எந்த திசையில், எத்தனை தூரத்திலிருந்தாலும் அங்கேயே வீட்டையும் மாற்றிக் கொள்வது என்ற முடிவோடு அலைந்து திரிந்தோம். பெரிய பள்ளிகள் அனைத்திலும் மாணவர் சேர்க்கை ஆகஸ்டிலேயே முடிந்து விட்டதாக கை விரித்தார்கள். தொடர்ந்து அலைந்ததில் ஒரு வழியாக வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவுக்குள் சின்னஞ்சிறிய மாண்டிசோரி பள்ளி ஒன்று வாய்த்தது. வெறும் இருபதே குழந்தைகள். அனைத்தும் சின்னஞ்சிறிய இந்திய முகங்கள். வரும் மார்ச் மாதம் வேறு பள்ளியில் இடம் கிடைக்கும் வரை தற்காலிகமாக இங்கே அனுப்பலாம் என்று முடிவெடுத்தோம். பணம் செலுத்தி, ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும் வரை அம்மு மெய்மறந்து விளையாடிக் கொண்டிருந்தாள். வலுக்கட்டாயமாகப் பிடித்து தூக்கி வந்து காரில் ஏறியதுமே "எவ்ளோ பொம்மை.. என்ன விடு, நான் ஸ்கூலுக்குப் போறேன்" என்று திமிறினாள். வெகு சந்தோஷமாய் இருந்தது. மிகப் பிடித்த பாடலைப் போல அந்த வார்த்தைகள் மனதிற்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தன.<br />
<br />
இன்று அவளை முதன்முதலாய் பள்ளிக்கு அனுப்பும் நாள். எத்தனை முயன்றும் நேற்று இரவு முழுவதும் ஆழ்ந்த உறக்கம் வாய்க்கவே இல்லை. கடந்த இரண்டரை வருடத்தில் முதன் முறையாக இரவு எட்டு மணிக்கெல்லாம் உறங்கப் போய் விட்டோம். திடுமென விழிப்பு வந்ததும்.. விடிஞ்சிடுச்சோ என்று பதறி எழுந்து மணி பார்த்தால் இரவு 10 மணி தான் ஆகியிருந்தது. :) எங்கோ யார் பொறுப்பிலோ குழந்தையைத் தனியாக விடப் போகிறோமே என்ற கவலையை விடவும் அவள் அருகில்லாத 4 நான்கு மணி நேரங்களை எப்படி தனியாக கழிக்கப் போகிறேன் என்ற கவலையே ஆட்டிப் படைத்தது. காலையில் 6 மணிக்கெல்லாம் குழந்தை விழித்து விட்டாள். பள்ளிக்குப் போவது குறித்த அதீத உற்சாகத்திலிருந்தாள். புதுப் பட்டுப் பாவாடையும், ஒற்றைச் சிண்டும், முல்லைச்சரமுமாக ஜொலித்தாள். சாமிப் படங்களின் முன்னால் சித்துவின் மடியில் அமர்ந்து அரிசியில் "அ" எழுதினாள். தொலைபேசியில் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என உறவினர்களிடமும் ஜெ.மோவிடமும் ஆசி பெற்றாள். எல்லாமும் வெகு சுலபமாக, சுபமாக நடக்கிறதே என்று நினைத்துக் கொண்டே சென்று அவளை பள்ளியில் சேர்ப்பித்து சிறிது நேரம் உடனிருந்து விட்டு அவளறியாமல் நகர்ந்தோம். முதலில் சித்து அலுவலகத்திற்கு கிளம்பினார். அடுத்த 10 நிமிடங்களில் நானும் வெளியில் வந்து நடக்கத் தொடங்கினேன். வீடு பயமுறுத்தியது. ஒற்றை படுக்கையறை கொண்ட சிறிய வீடு… நினைவில் எவருமற்ற மிகப் பரந்த மைதானமாக விரிந்து கொண்டே போனது. அந்த வெறுமையை சந்திக்காமல் எப்படி தப்பிக்க? 4 மணி நேரங்களை கண்ணீரில்லாமல் எப்படிக் கடக்க? அலுவலகம் சென்று கொண்டிருந்தவரிடம் தொலைபேசியில் தழுதழுத்தபடியே நடந்தவள், வழியில் தேவையே இல்லாமல் ஒரு கடைக்குள் நுழைந்து எதுவுமே வாங்காமல் சுற்றிச் சுற்றி வந்து விட்டு குழந்தைக்குப் பிடித்த சிலவற்றை மட்டும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தேன். வாசலருகே சித்து காரில் காத்துக் கொண்டிருந்தார்! மனதில் உறைந்திருந்த பாரம் முழுவதும் உருகி கண்ணீராய் வழியத் தொடங்கியது. முன்னெப்போதை விடவும் சித்துவின் மேல் பிரியம் அபரிதமிதமாய்ப் பொங்கிப் பிரவகித்தது. இலக்கில்லாமல் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்து விட்டு என்னை வீட்டில் இறக்கி விட்டு திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே கிளம்பிப் போனார். <br />
<br />
உள்ளே நுழைந்தால் கோபித்துக் கொண்டாற் போல வீடு மெளனம் சாதித்தது.. சமையலறைக்குள் நுழையும் போதே "அம்மா பாப்பாகிட்ட வந்துருங்கம்மா.. புவா செய்ய வேணாம்மா" என்றபடி ஓடி வரும் கொலுசொலிக்கு மனம் ஏங்கி நின்றது. திணறலாய் காலையுணவை கொறித்துக் கொண்டிருக்கையில் பள்ளியிலிருந்து தொலைபேசி.. "உங்கள் மகள் ஓயாமல் 'அம்மா, அம்மா' என்று அழுகிறாள்.. வந்து அழைத்துப் போக முடியுமா?" குழந்தை பள்ளிக்குப் போக மறுத்து அழுவதைக் கேட்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்த அன்னை உலகிலேயே நானாகத் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். :) அப்போதே கிளம்பி ஓட்டமாய் ஓடி பள்ளிக்குள் நுழைந்து, குழந்தையை அள்ளிக் கொண்டேன். அவள் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்து விட்டபடியே "எல்லாரும் அழாம விளையாடிட்டு இருக்காங்களேடா? நீ மட்டும் ஏன் அழறே?" என்றால் "அந்த பையன் அழறான் பாரு.. அவனை பாத்து தான் பாப்பாவும் அழறா" என்று ஒரு மூலையில் கத்திக் கொண்டிருந்த பையனைக் காண்பித்தாள். சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. முகமெல்லாம் மகிழ்ச்சியில் விகசிக்க அவளை அணைத்தபடி வெளியில் வந்தேன். காண்பவையெல்லாம் அந்தக் குழந்தைகளின் கலரிங் புக் போல வண்ணத் தீட்டல்களாகத் தோன்றின. ஓயாமல் முத்தமிட்டுக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் அழைத்து வந்தேன். அவள் நான் வேண்டுமென்று அழுதிருக்க மாட்டாள். எனக்கு அவள் வேண்டுமென்று புரிந்து தான் அழுதிருப்பாளாயிருக்கும்… என்ற அபத்த நினைப்பில் மனம் தித்தித்துத் திகட்டியது. வழியெல்லாம் புறாக்களையும் பூனைகளையும் துரத்தியபடி கொண்டாட்டமாய் வீடு வந்து சேர்ந்தோம். வீட்டிற்குள் நுழைந்ததும் வேண்டுமென்றே சமையலறைக்குள் சென்று நின்று கொண்டேன். "அம்மா பாப்பாகிட்ட வந்துருங்கம்மா.. வேலை செய்ய வேணாம்மா.. பாப்பா கூடயே இருங்கம்மா..ப்ளீஸ்மா.. :))</div>
</div>
</div>
காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-32904504.post-75721551437417890422012-07-10T12:18:00.000+05:302012-07-10T12:18:01.556+05:30காயத்ரி பிறந்தநாள் கொண்டாட்டம் 2012 - உருவான விதம் :))<span class="Apple-style-span" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;"><span class="Apple-style-span" style="line-height: 16px;"><b><br /></b></span></span><span class="Apple-style-span" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"><br /></span><span class="Apple-style-span" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;">சித்துவிற்கு லேசாக செலக்டிவ் அம்னீஷியா உண்டு. இஸ்ரேலின் ஆதியோடந்தமான வரலாறு, ஆண்டாளின் திருப்பாவை, குறுந்தொகைக் கவிதைகள், உலகப்படங்கள் மற்றும் அவற்றின் பிரத்தியேக காட்சிகள், Friends எபிசோட்ஸின் டயலாக்குகள், இயற்பியல் விதிகள், அண்டைநாடுகளின் அரசியல் மாற்றங்கள், விஷ்ணுபுரம்/ கொற்றவை/ பின் தொடரும் நிழலின் குரல் / காடு ஆகியவற்றில் எந்த வரி எத்தனையாவது பக்கத்தில் எதற்காக இடம்பெற்றுள்ளது, ஆப்பிள் நிறுவனத்தின் இது வரையிலான மற்றும் வரவிருக்கும் தயாரிப்புகள் பற்றிய தகவல்கள், மலையாளக் கவிதைகள் / இயக்குனர்கள், மகாத்மா காந்தி, அயன்ராண்ட், டெர்ரி ப்ராட்சட், அகிரா குரோசோவா, டால்ஸ்டாய், கம்பர், பாப் டிலன், இளையராஜா, ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், ஹயோ மியாசகி, கிரிக்கெட், ரூபி நிரலாக்க மொழி பற்றியெல்லாம் எந்த நேரம் என்ன கேள்வி கேட்டாலும் யோசிக்காமல் பதில் சொல்லக் கூடிய மனிதர்.. எலுமிச்சம்பழம் வாங்குவதற்காக என்றே வேகாத வெயிலில் நடந்து கடைக்குப் போய்விட்டு, இடையில் நான் போன் செய்து “புதினாவும் சேர்த்து வாங்கிட்டு வாங்கப்பா” என்றால் வெறும் புதினாவோடு மட்டும் வீட்டிற்குத் திரும்புவார். :))) இந்த விநோதமான மெமரி ஸ்டேட்டை புரிந்து கொள்ள முடியாமல் நான் இன்னமும் திணறிக் கொண்டிருக்கிறேன். இதுவே இப்படியென்றால் நெருங்கியவர்கள் / உறவினர்கள் பிறந்தநாள், திருமணநாள், அவர்களுக்கு என்னென்ன பிடிக்கும் போன்ற விஷயங்கள் பற்றியெல்லாம் சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளை அவர் மறக்காமல் இருப்பதே பெரிய சாதனையாக எண்ணி பெருமைப்பட்டுக் கொள்வேன். ஆனால் இந்த வருடம் எதிர்பாராத ஆச்சரிய அதிர்ச்சி.. :) </span><span class="Apple-style-span" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"><br /></span><span class="Apple-style-span" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"><br /></span><span class="Apple-style-span" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;">பிறந்தநாளுக்கு 2 நாட்கள் முன்பே மூணரைப் பவுனில் வளையல், மஸக்களி சுடிதார் என்று ’வல்லிய’ வசூலாகி விட்டதால் ஏழாம் தேதி இரவு 10.30 மணிக்கெல்லாம் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் நிம்மதியாக தூங்க ஆரம்பித்திருந்தேன். திடீரென்று தூக்கத்தினிடையில் இனிமையான இசை ஒலிக்கக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். எழுந்த போது அறை வெளிச்சமாக, அமைதியாக இருந்தது. அருகில் அம்மு மட்டுமே தூங்கிக் கொண்டிருந்தாள். ‘என்ன சத்தம் அது?.. சித்து எங்க?” என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்த போது “ஹாப்பி பர்த் டே டூ யூ” என்று பாடிக் கொண்டே உள்ளே நுழைந்தார். மணி 12 ஆகியிருந்தது. கையில் ஒரு பெரிய தட்டில்.. Mini dates croissants, Nachos, strawberry & white chocolate milk shake, green tea with lemon & mint can, Ferrero Raffaello almond coconut treat chocolates, Ice cream Cakes என்று எனக்குப் பிடித்த தீனி வகையறாக்களை அடுக்கிக் கொண்டு வந்து நீட்டினார். சந்தோஷத்தில் சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. இருந்தாலும் குழப்பம் முழுமையாய்த் தீராமல் "என்ன சத்தம் கேட்டுச்சு? நான் எப்டி எழுந்தேன்? நான் இப்ப எங்க இருக்கேன்?" என்று அடுக்கடுக்காய் நான் எழுப்பிய கடினமான கேள்விகளுக்கு "நான் உனக்கு மெசேஜ் அனுப்பிட்டு உள்ள வந்தேன்.. உன் போனோட மெசேஜ் டோன் தான்" என்று சுருக்கமாக பதிலிறுத்தார். பின்னர், கப் கேக் போலிருந்த குட்டி ஐஸ்க்ரீம் கேக்கை வெட்டி சாப்பிட்டதோடு அவர் மனம் சங்கடப்படக் கூடாதே என்ற ஒரே காரணத்திற்காக அவர் கொண்டு வந்திருந்த எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பார்த்து விட்டு 1 மணிக்கு தும்மிக் கொண்டே படுத்துத் தூங்கினேன். </span><span class="Apple-style-span" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"><br /></span><span class="Apple-style-span" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"><br /></span><span class="Apple-style-span" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;">விடிகாலையில் மூக்கிலிருந்து ஜலம் கொட்டத் தொடங்கி, தலை கனத்து எழுந்திரிக்கவே முடியாமல் போய்விட்டது. பிறந்தநாளன்று கணவரையும், மாமனாரையும் காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து ஆபீஸிற்கு பட்டினியாக அனுப்பினேன் என்ற குற்ற உணர்வு தாளாமல் சித்துவிற்கு பிடித்த மிளகுக் குழம்பு வைக்கலாம்.. மாலை வந்தாவது சாப்பிடட்டும் என்று மதியம் சமைக்கப் போனேன். மிளகை வறுத்து எடுத்து தட்டில் கொட்டலாம் என்று நினைத்துத் திரும்பிய வேளையில் திடீரென அமுதினி அழும் சப்தம் கேட்டு அடுப்பை அணைக்காமலேயே வெளியில் ஓடி, அவளைத் தூக்கி சமாதானப்படுத்திக் கொண்டே திரும்பி வருவதற்குள் ஏற்கனவே கருப்பாக இருந்த மிளகு வடிவேலுவைப் போல கருப்பாய் பயங்கரமாய் இருந்தது. “ஏன் எனக்கு மட்டும் இப்டியெல்லாம் நடக்குது” என்று துக்கம் தொண்டையை அடைக்க, மிளகுக் குழம்பு திட்டத்தைக் கை விட்டு மோர்க்குழம்பு வைக்கலாமென்று முடிவெடுத்தேன். சித்துவும், அப்பாவும் திரும்பி வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு இரும்பு வாணலியில் வெண்டைக்காய் வதக்கி, தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் அரைத்துக் கொட்டி கொதிப்பதற்குள் குழந்தையை குளிப்பாட்டி விடலாம் என்று சென்று திரும்புவதற்குள்... இல்லை.. இல்லை.. இது தீயவில்லை. ஆனாலும் குழம்பு கருப்பாயிருந்தது. எப்படி என்று தான் புரியவில்லை. சரி.. அப்புறமாய் செஃப் தாமோதரனுக்கோ, மல்லிகா பத்ரிநாத்திற்கோ சமையல் சந்தேகங்கள் பிரிவில் எழுதிக் கேட்டுக் கொள்ளலாம் என்று என்னை நானே தேற்றிக் கொண்டு, குழம்பு கருப்பாய் இருந்தால் என்ன மோர் வெள்ளையாய் தானே இருக்கிறது? ஒளி இருளை விரட்டும் போது வெண்ணிற மோர், கார்க்குழம்பை வெளுப்பாக்காதா என்ன? என்ற நம்பிக்கையில் மோரையும் அதில் ஊற்றினேன். எல்லாம் சேர்ந்து மொத்தமாய் திரிந்து போய் விட்டது. அவ்வ்வ்.. வெளியில் எட்டிப் பார்க்கவிருந்த கண்ணீரை “பெண் என்பவள் அழப் பிறந்தவள் அல்ல; ஆளப் பிறந்தவள்" என்ற தினத்தந்தி ராணி காலண்டர் பொன்மொழி நினைவிற்கு வந்து அடக்கியது. இப்படியாக பிறந்தநாள் அன்று குடும்பத்தார்க்கு வெறும் சோற்றையும் ரசத்தையும் மட்டுமே உணவாகப் படைத்த பாவியாக பழியேற்கவிருந்ததால்.. டின்னரையாவது உருப்படியாக செய்து முடிப்பது என்று நான் கட்டாய சபதமெடுக்க வேண்டியதாயிற்று. </span><span class="Apple-style-span" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"><br /></span><span class="Apple-style-span" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"><br /></span><span class="Apple-style-span" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;">சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கெளமாரம், செளரம் ஆகிய அறுசமயக் கடவுளர்களையும், பிற மதத்துத் தெய்வங்களையும், சீட்டில் எழுதி மரத்தில் கட்டினால் வேண்டுதலை அப்படியே நிறைவேற்றித் தரும் உள்ளூர் கடவுள் உட்பட அத்தனை சிறு தெய்வங்களையும், மதுரை ஆதீனம் தவிர்த்து பிற தமிழக ஆதீனங்கள் அனைவரையும் வேண்டி வணங்கி இரவு உணவிற்கு Tuna பிரியாணியும், சப்பாத்தி + கொங்குநாட்டுக் கோழிக் குழம்பும் சிறந்த முறையில் செய்து அசத்தினேன். (அசத்தினேன் என்றவிடத்தில் என 'அசந்தேன்' என்ற பதமும் பொருந்தக் கூடியதே) சித்துவின் நெருங்கிய நண்பரும் அவர் மனைவியும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்திருந்தனர். பிரியாணியும் குழம்பும் மிக அருமையாக இருப்பதாக வாய் கொள்ளாமல் பாராட்டி விட்டுச் சென்றனர். வீட்டிற்கு சென்றதுமே, எங்கோ மலேசியாவில் இன்னும் சில நாட்களில் கேன்சரில் சாகவிருக்கும் Zanzila binti Hashim என்ற முகம் தெரியாத புண்ணியவான் (புண்ணியவதி?) தன்னுடைய சொத்திலிருந்து 2 பில்லியன் பிரிட்டன் பவுண்டுகளை இவர்கள் பேரில் எழுதி வைப்பதாக மெயில் அனுப்பியிருந்தாராம். உடனேயே எனக்கு போன் செய்து "எல்லாம் உன் கை ராசி.. நீ செய்த பிரியாணியை வயிறாரச் சாப்பிட்டு வாயாரப் புகழ்ந்ததின் பலன் தான் இது.." என்று மேலும் அரை மணி நேரம் புகழ்ந்தார்கள். நான் அமைதியாக புன்னகை செய்து "என்னை ரொம்ப புகழாதீங்க. நான் என் கடமையைத் தான செஞ்சேன்?" என்று கூறியபடி சித்துவின் கண்ணாடியைக் கழற்றினேன். (நான் தான் கண்ணாடி போடலயே?) :)</span>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-32904504.post-52573591800058926292012-05-29T12:30:00.000+05:302012-07-10T12:18:29.747+05:30சீர் பெற்று வாழ்வதற்கே உன் போல் செல்வம் பிறிதுமுண்டோ...?<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-V1JrHlmb3r4/T8RznWc__HI/AAAAAAAADd8/inKuKL3Ul1g/s1600/IMG_0632.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-V1JrHlmb3r4/T8RznWc__HI/AAAAAAAADd8/inKuKL3Ul1g/s400/IMG_0632.JPG" width="400" /></a></div>
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}" style="font-weight: normal; text-align: justify;">
<span style="font-size: small;"><span class="messageBody" data-ft="{"type":3}">ஒரு
புலர்காலைப் பொழுதைப் போன்று மெல்ல விடிந்து கொண்டிருக்கிறேன். கனத்த
சாம்பல் நிறத்து இருட்திரைக்குள்ளிருந்து துலக்கம் பெற்று ஒளிரத்
துவங்கியிருக்கின்றன வாழ்வின் மறைபொருட்கள் ஒவ்வொன்றும். மகள் வளர்ந்து
கொண்டிருக்கிறாள். தொடுவானம் போல பார்க்கப் பார்க்க ஆச்சரியங்களை இறைத்துக்
கொண்டேயிருக்கிறாள். மழை நேரத்து வானவில் போல வண்ணம் மிகுத்துப்
பெய்கிறாள். முத்துக் குளித்து மேலெழுபவள் போல நிதமும் எங்கிருந்தோ
மகிழ்ச்சியை அள்ளி வருகிறாள். ஏன் இப்படியெல்லாம்? எதற்காக? எதன்
பொருட்டு? என்றெல்லாம் எப்போதோ மனதின் இருள் மூலைகளில் துடித்துக்
கொண்டிருந்த வலி மிகுந்த வினவல்கள் அத்தனைக்கும் ஒற்றைப் பதிலாய், ஒரேயொரு
ஆறுதலாய் நின்று புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள். <br /> <br /> அமுதினி... என் தவம். என் மோட்சம். என் செருக்கு. என் ஆழம். என் விடியல். என் மீட்சி. என்னாயுள் நீட்டிக்கும் அமுதம்....<br /> <br />
நேற்று அவளுக்கு இரண்டாவது பிறந்தநாள். அவளை வாழ்த்த வேண்டும்.. எப்போதை
விடவும் மிகச் சிறப்பாக, மிகப் பிரியமாக, மிகவுயர்ந்ததாக, இது வரையிலும்
இல்லாத வாழ்த்தாக அது அமைய வேண்டும். இப்படித்தான் எப்போதும் நினைக்கிறேன்.
ஆனால், இம்முயற்சி பலிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் மனம் பிரியத்தால்
கசிந்து கசிந்து, இயலாமையில் வதிந்து இறுதியில் சொல்லின்மைக்குள் ஓடி முகம்
புதைத்துக் கொள்கிறது. சொல்லவியலாத அன்பினைச் சொல்லிச் சொல்லி
நைவதற்காகவேனும் ஒரு முறை மாணிக்கவாசகராய் பிறக்கத் தோன்றுகிறது. <br /> <br />
அவள் பிறந்து 16 வது நாளில் அம்மா அவளுக்கென்று ஒரு பட்டுப் பாவாடை
தைத்தார்கள். அன்று அவளைத் தொட்டிலில் கிடத்துகையில் பாவாடையின் பட்டுக்
கரை கால்கொலுசு வரை நிறைத்துக் கொண்டு வெகு ரம்மியமாய் இருந்தது. இன்று
எடுத்துப் பார்க்கையில் வெறும் ஒன்னேகால் சாண் நீளமேயிருக்கிறது. என்ன இது!
இத்தனை சின்னவளாகவா இருந்தாள் என் குழந்தை? யப்பா! எப்படி வளர்ந்து
விட்டாள்! ஒரு நாளின் அத்தனை மணிநேரங்களும் அவளுடனேயே/ அவளுக்காக / அவளால்
இருக்கிறேன். எனக்குத் தெரியாமல் எப்போது வளர்கிறாள் இந்தப் பெண்? <br /> <br />
அமுதினி எட்டாம் மாதத்தின் இறுதியில் பேசத் தொடங்கினாள். அவள் பேசிய முதல்
சொல் "ம்மா". நான் அவளை விட்டு எங்கு நகர்ந்தாலும் "ம்மா.. ம்மா" என்றபடி
தவழ்ந்து வருவாள். தனக்குவமை இல்லாத வெகு அழகான செயல் அது. பத்தாம்
மாதத்திலிருந்து சொற்கள் ஒவ்வொன்றாய் உயிர் பெற்றெழத் தொடங்கின. இப்போது
கோர்வையாய் பேசுகிறாள்.. நிறைய பேசுகிறாள். கதைகள் சொல்கிறாள். ஸ்லோகங்கள்
சொல்கிறாள். ஓயாமல் பாடிக் கொண்டேயிருக்கிறாள். தமிழும், தெலுங்கும் கலந்து
அவள் வசதிக்கேற்றபடி சொற்றொடர்களை அமைத்துக் கொள்கிறாள். கொஞ்சமும்
மழலையின்றி குழந்தையின் குரலில், ஆனால் அட்சர சுத்தமாய் சொற்கள் வந்து
விழுகின்றன. என்றாலும் இலக்கணம் இவளிடம் சிக்கிக் கொண்டு அல்லாடுவதைப்
பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. :)) <br /> <br /> “இங்க வந்து நில்லு” என்றால்.. “வேணாம்.. இங்கயே <b>நில்லுக்கறேன்</b>” என்பாள்.<br /> <br />
“நீயே எடுத்து சாப்பிடறயா? அம்மா ஊட்டட்டுமா என்று கேட்டால் “<b>நீயே</b> எடுத்து
சாப்டுக்கறேன்” என்பாள். ("காதோடு தான் நான் பாடுவேன்" என்ற பாட்டைக் கூட
"காதோடு தான் நீ பாடுவேன்" என்று தான் பாடுகிறாள்) <br /> <br /> “ என்னடா
பண்ற? டோரா ஸ்டிக்கரை பிக்கக் கூடாதுன்னு சொல்லிருக்கேனில்ல? என்று
அதட்டினால் “டோரா பிக்கலம்மா.. டைனோசரத்தான் <b>பிக்குனேன்”</b> என்று பதில்
சொல்வாள்.<br /> <br /> “<b>தமிழ் என்னும் மாபெரும் மதயானை குழந்தைகளின் முன்பாக
மட்டும் மண்டியிட்டு மத்தகம் தாழ்த்தி அவர்களை முதுகில் ஏற்றிக் கொண்டது”</b>
என்று கொற்றவையில் ஒரு வாசகம் இடம்பெற்றிருக்கும். மொழியை இவள் தன்னுடைய
பொம்மைகளில் ஒன்றாக காதைப் பிடித்து தரையத் தரைய இழுத்துச் செல்லும்
போதெல்லாம் இப்படியொரு மாயப்பிம்பம் கண்ணில் மின்னி மறைகிறது! <br /> <br />
எதைப் பெறுகையிலும் "தேங்க்யூ" என்கிறாள். எது வேண்டுமென்றாலும் "இத
கொஞ்சம் பாப்பாக்கு குடுங்களேன்" என்று கெஞ்சலாய்க் கேட்கிறாள்.
திறந்திருக்கும் கதவை தானே இழுத்து சார்த்திக் கொண்டு தலையை மட்டும் உள்ளே
நீட்டி “மே ஐ கமின்?” என்கிறாள். வீட்டுக் கதவை யாரேனும் தட்டினால் "யாரு
அது? பூச்சாண்டியா?" என்று அதட்டுகிறாள். "ஒன்னுல்ல.. ஒன்னுல்ல..
வலிக்காது" என்றபடி பேனாவின் நுனியினால் ஊசி போடுகிறாள். ஸ்பூனை கையில்
வைத்துக் கொண்டு "குனிஞ்சிக்கோ.. மொட்டை அடிக்கிறேன்" என்கிறாள்.</span></span></h6>
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}" style="font-weight: normal; text-align: justify;">
<span style="font-size: small;"><span class="messageBody" data-ft="{"type":3}"> என்னை
அடித்து விட்டாலோ, இடித்து விட்டாலோ உடனே குற்ற உணர்வு கொண்டு என் கண்களில்
வராத கண்ணீரைத் துடைத்துத் துடைத்து "சாரி, சாரி.. அழாதம்மா" என்கிறாள்.
திடீரென்று நினைத்துக் கொண்டாற் போல "ஐ லவ் யூஊஊஊ அம்மா" என்று
ராகமிழுக்கிறாள். நான் பதில் ஒன்றும் சொல்லாவிட்டாலும் " மீ டூ லவ் யூஊஊஊ
அம்மா" என்கிறாள். கோபமாய் அதட்டும் போது முகத்தை கூம்பிக் கொண்டு
நிலைப்படியில் உட்கார்ந்து "மயில்க் குட்டியை திட்டிட்டாங்க" என்று
புலம்புகிறாள். தூக்கி நெஞ்சோடு அணைத்து "செல்லக்குட்டி தங்கக்குட்டி
பட்டுச் செல்லம் அம்முத் தங்கம்.." என்று லயம் மாறாமல் கொஞ்சிக்
கொண்டிருக்கையில் "தங்கச்செல்லம் சொல்லும்மா, மயில்க்குட்டி சொல்லு" என,
இடையில் விட்டுப் போன கொஞ்சல்களை நினைவூட்டுகிறாள். கொஞ்சம் சுணங்கிப்
படுத்தாலும் "அம்மா என்னாச்சி? இங்க ஜுரம் வந்துடுச்சா? இங்கயா?" என்றபடி
கை, கால், கன்னம், நெற்றி என தொட்டுத் தொட்டு பிஞ்சு விரல்களில் வாஞ்சை
ததும்பத் தடவிக் கொடுக்கிறாள். அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்த என்
கீழுதட்டை கலவரமாய் தொட்டுத் தொட்டுப் பார்த்து எதிர்பாராத நொடியில்
திடீரென காயத்தில் முத்தமிட்டு "அவ்ளோ தான்.. சரியாப் போச்சி" என்று கை
தட்டிச் சிரிக்கிறாள். இன்னும் வரும் நாட்களில் என்னை என்னவெல்லாம் செய்யத்
தீர்மானித்திருக்கிறாளோ தெரியவில்லை. <br /> <br /> என் நிலை இப்படியென்றால்..
சித்துவின் நிலமை சொல்லுந் தரமன்று. :) சும்மாவே மகள் நிகழ்த்திக்
காட்டும் அற்புதங்களில் சொக்கிக் கிடப்பவர்.. சென்ற வாரத்தில் யோகா
வகுப்பிலிருந்து களைத்துத் திரும்பி படுக்கையில் வீழ்ந்து "கொஞ்சம் தண்ணி
கொண்டு வாயேன்" என்றார். இவள் பின்னால் ஓடி ஓடி அவரை விடவும் நான்
களைத்திருந்த காரணத்தால் "நீங்களே போய் எடுத்துக்கோங்க" என்றேன். உடனே
அருகில் உட்கார்ந்திருந்தவள் துள்ளி எழுந்தாள். உலகளவு பரிவோடு தந்தையின்
முகவாயைப் பிடித்து "நைனா? தண்ணியா? தண்ணி வேணுமா?" என்று கேட்டவள்
அவசரமாய் படுக்கையை விட்டு கீழிறங்கி "தண்ணி எங்க? பாட்டில் எங்க?" என்று
கேட்டுக் கொண்டே ஓட ஆரம்பித்தாள். அவள் தந்தை பூரித்துப்
புளகாங்கிதமடைந்து, உள்ளம் விம்ம, மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து,
கண்ணில் நீர் மல்க அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்.
உண்மையில், தண்ணீர் எடுத்து வந்து கொடுத்ததென்னவோ நான் தான். ஆனால் அவர்
தன் மகளைப் பார்த்துத்தான் "இங்கிவளை யான் பெறவே என்ன தவம் செய்து
விட்டேன்" என்ற ரீதியில் உருகிக் கொண்டிருந்தார். :)<br /> <br /> அமுதினியை
மரபணு ஆராய்ச்சித் துறையில் மகத்தான சாதனைகள் படைக்கவிருக்கும் மாபெரும்
விஞ்ஞானியாக உருவாக்க வேண்டுமென்பது அவள் தந்தையின் ஆசை. <br /> <br /> அவளை
நல்லவளாக, வல்லவளாக, அச்சம் மடம் அறியாத துணிச்சல்காரியாக, எல்லா
உயிர்களிடத்தும் கருணை மிக்கவளாக, நேர்மையானவளாக, ஆரோக்கியமானவளாக,
திடமானவளாக, எக்கணத்திலும் உண்மையானவளாக, அவள் விரும்பும் கலைகள்
அனைத்திலும் சிறந்து விளங்குபவளாக, பிறர் துயர் கண்டு கலங்குபவளாக,
தன்னம்பிக்கை மிக்கவளாக, எடுத்த காரியம் திறம்பட முடிப்பவளாக, ஆழ்ந்து
சிந்திப்பவளாக, குழந்தைகளையும் இயற்கையையும் நேசிப்பவளாக, வயோதிகத்தைப்
புரிந்து கொள்பவளாக, என்றும் எப்போதும் நிலை குலையாதவளாக, பகைவனுக்கும்
அருள்பவளாக, எல்லாவற்றையும் தர்க்கத்தால் மட்டுமே அளக்காதவளாக, சினத்தால்
மதியிழக்காதவளாக, எச்சூழலிலும் நிதானமிழக்காதவளாக, பிரச்சினைகளை
பதட்டமின்றி அணுகுபவளாக, உழைக்கத் தயங்காதவளாக, பேராசையற்றவளாக, வாழ்நாள்
முழுவதும் நிபந்தனையற்ற அன்பினைப் பெறுபவளாக, தருபவளாக, நீள் ஆயுளும், உயர்
கல்வியும், குன்றாப் புகழும், செல்வமும் செல்வாக்கும், ஆல் போல் நட்பும்,
அருகு போல் உறவும், நல்ல துணையும், நன்மக்கட்பேறும், மகிழ்வான, நிறைவான
வாழ்வும் பெற்றவளாக அனைத்திலும் முக்கியமாக உலகை அதன் இயல்புடனே ரசிக்கக்
கற்ற ஆகப் பெரிய ரசிகையாக உருவாக்க வேண்டுமென்பது அவள் தாயின் ஆசை. :)<br /> <br />
இவ்விருவரும் ஆசைகளும் அப்படியே நிறைவேற வேண்டுமென தெய்வங்களும்,
தேவதைகளும், தேவர்களும், ரிஷிகளும், எம் பிதுர்களும், சுற்றமும், நட்பும்,
எம்மை அறிந்தோரும், அறியாதோரும், படிக்காமலேயே 'லைக்' போடுவோரும் என
அனைவரும் 'ததாஸ்து' சொல்லி வாழ்த்துவீராக. :)</span></span></h6>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-32904504.post-83681709682909788602012-01-20T18:51:00.004+05:302012-01-20T19:41:42.118+05:30அமுதினியும் இராமாயணமும்<div style="text-align: left;"><span style="background-color: rgb(255, 255, 255); line-height: 16px; font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;">அமுதினியின் வளர்ச்சியில் யூ டியூப் காணொளிகளின் பங்கு மிக முக்கியமானது. அவள் பிறந்ததிலிருந்து முதல் 6 மாதங்கள் ஈரோட்டில் இருந்தோம். சுற்றிலும் மரங்கள் அடர்ந்த வீடு. பனை மரங்களில் குடியிருக்கும் கிளிகள், காகங்கள், பொன்னரளிப் பூக்களில் தேனெடுக்க வரும் தேன் சிட்டுகள், சிட்டுக்குருவிகள், மைனாக்கள், அபூர்வமாக குயில்கள் மற்றும் குருவியை ஒத்த தோற்றம் கொண்ட மஞ்சள் அலகு கொண்ட சற்று பெரிய பறவைகள் என வீடு எப்போதும் இசைக்குறிப்புகளால் நிரம்பியிருக்கும். வீட்டின் புறச்சுவரிலிருந்து சற்று தூரத்தில் மாடுகள், கன்றுக்குட்டிகள் கட்டப்பட்டிருக்கும் கட்டுத்தரை இருக்கும். காவலுக்கு ஒரு நாய். அவ்வப்போது வந்து போகும் பூனைகள் மற்றும் அணில்கள். தினமும் காலை அல்லது மாலையில் முற்றத்திலிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஜீவராசியையும் ஒலியால் அவளுக்கு அடையாளப்படுத்திக் கொண்டிருப்பேன். அவளுக்குப் புரிகிறதா.. கவனிக்கிறாளா என்றெல்லாம் கவலைப்பட்டதில்லை. 5 மாதக் குழந்தையாக இருக்கும் போது பசுவின் 'ம்ம்ம்மாஆஆ' என்ற குரலுக்கு திடீரென கண் மலர்த்தி மகிழ்ச்சியாக என் முகம் பார்த்தாள். 'யார் கத்தறா ந்னு எனக்குத் தெரியுமே' என்ற பாவனை இருந்தது முகத்தில். சந்தோஷமாக இருந்தது.</span></div><div style="text-align: left;"><span><span style="line-height: 16px;"><br /></span></span></div><span style=" line-height: 16px; background-color: rgb(255, 255, 255); font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;"><div style="text-align: left;">6 ம் மாதம் குவைத் வந்தாயிற்று. நாள் முழுவதும் அவள் பார்க்க என் முகமன்றி வேறில்லை என்ற நிலைமை வந்த போது அவளுக்கு யூ டியூபை அறிமுகப்படுத்தினேன். அந்த வயதிலேயே 'தப்போ தப்போ தப்பாணி' என்ற மலையாளப் பாடல் அவளுக்கு மிக விருப்பப் பாடலாக இருந்தது. அதைத் தொடர்ந்து இன்று வரை தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி, அரபி ஆகிய மொழிகளில் குழந்தைப்பாடல்களைப் பார்த்து வருகிறாள். அவள் பார்க்கும் பாடல்களின் எண்ணிக்கை இப்போது 160 ஐத் தொட்டிருக்கிறது. இவற்றுக்குள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்கள், ஒரு தடவை பார்க்கலாம், இந்தப் பாடல் சலித்துப் போய்விட்டது என்பது போன்ற பாகுபாடுகளையும் அவளே உருவாக்கி வைத்திருக்கிறாள். 11 ம் மாதத்தில் பேசத் துவங்கியதிலிருந்து எல்லாப் பொருட்களையும் அவளறிந்த பாடல்களின் வழியாகவே சொல்லப் பழகி வருகிறாள். அவளின் பேச்சில் "குவா குவா வாத்து, மாம்பழமாம் மாம்பழம், வண்ண பலூன், மியா மியா பூனைக்குட்டி, பச்சைக்கிளியே வா வா" என்று அடைமொழியோடு கூடிய வார்த்தைகளே மிகுதி. </div></span><div style="text-align: left;"><span><span style="line-height: 16px;"><br /></span></span></div><span style=" line-height: 16px; background-color: rgb(255, 255, 255); font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;"><div style="text-align: left;">சமீபமாக பாடல்களைக் குறைத்து கதைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நேற்று முன் தினம் எதேச்சையாக கண்ணில் பட்டது இராமாயணம் காணொளி. ஒன்னரை மணி நேரம் அதை அவள் பொறுமையாகப் பார்த்தது எனக்கே தாள முடியாத ஆச்சரியத்தைக் கொடுத்தது. படம் முடிந்தபின் இராமாயணத்தை வெறும் பத்து வரிகளாகச் சுருக்கி அவளது மொழியில் சொல்லிக் கொடுத்தேன். </div></span><div style="text-align: left;"><span><span style="line-height: 16px;"><br /></span></span></div><span style=" line-height: 16px; background-color: rgb(255, 255, 255); font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;"><div style="text-align: left;">"1.இராமன் மாமா வில்லை எடுத்து 'டமார்னு' உடைச்சாரு.</div></span><div><div style="text-align: left;"><span><span style="line-height: 16px;"><br /></span></span></div><span style=" line-height: 16px; background-color: rgb(255, 255, 255); font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;"><div style="text-align: left;">2. இராமன் மாமாவும் சீதா அத்தையும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க.</div></span><span style="background-color: rgb(255, 255, 255); "><div style="text-align: left;line-height: 16px; "><br /></div></span></div><div><div style="text-align: left;"><span style="background-color: rgb(255, 255, 255); line-height: 16px; font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;">3.அப்றம் இராமன் மாமா, சீதா அத்தை, லட்சுமணன் மாமா 3 பேரும் காட்டுக்கு போனாங்க.</span></div><span style="background-color: rgb(255, 255, 255); "><div style="text-align: left;line-height: 16px; "><br /></div></span></div><div><div style="text-align: left;"><span style="background-color: rgb(255, 255, 255); line-height: 16px; font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;">4. அங்க ஒரு மானை பார்த்துட்டு சீதா அத்தை 'எனக்கு மானு வேணும் மானு வேணும்' நு அழுதா.</span></div><span style="background-color: rgb(255, 255, 255); "><div style="text-align: left;line-height: 16px; "><br /></div></span></div><div><div style="text-align: left;"><span style="background-color: rgb(255, 255, 255); line-height: 16px; font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;">5. உடனே 'நான் புடிச்சித் தர்றேன்'நு இராமன் மாமா மானைத் துரத்திகிட்டு ஓடிப் போனாரு.</span></div><span style="background-color: rgb(255, 255, 255); "><div style="text-align: left;line-height: 16px; "><br /></div></span></div><div><div style="text-align: left;"><span style="background-color: rgb(255, 255, 255); line-height: 16px; font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;">6. அப்போ இராவணன் பூச்சாண்டி அங்க வந்து 'வாஆஆ' ந்னு சீதா அத்தையை தூக்கிட்டு போய்ட்டாரு.</span></div><span style="background-color: rgb(255, 255, 255); "><div style="text-align: left;line-height: 16px; "><br /></div></span></div><div><div style="text-align: left;"><span style="background-color: rgb(255, 255, 255); line-height: 16px; font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;">7. ஹனுமான் சொய்ய்ய்ய்ங்னு வானத்துல பறந்து போய் சீதா அத்தைகிட்ட மோதிரம் குடுத்துட்டு வளையல் வாங்கிட்டு வந்தாரு.</span></div><span style="background-color: rgb(255, 255, 255); "><div style="text-align: left;line-height: 16px; "><br /></div></span></div><div><div style="text-align: left;"><span style="background-color: rgb(255, 255, 255); line-height: 16px; font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;">8. இராமன் மாமாவும் இராவணன் பூச்சாண்டியும் டிஷ்யூம் டிஷ்யூம்னு சண்டை போட்டுகிட்டாங்க.</span></div><span style="background-color: rgb(255, 255, 255); "><div style="text-align: left;line-height: 16px; "><br /></div></span></div><div><div style="text-align: left;"><span style="background-color: rgb(255, 255, 255); line-height: 16px; font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;">9. இராவணன் பூச்சாண்டி டமார்னு கீழ விழுந்துட்டாரு.</span></div><span style="background-color: rgb(255, 255, 255); "><div style="text-align: left;line-height: 16px; "><br /></div></span></div><div><div style="text-align: left;"><span style="background-color: rgb(255, 255, 255); line-height: 16px; font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;">10. கடைசியா இராமன் கிரீடம் எடுத்து தலைல வெச்சிகிட்டாரு"</span></div><div style="text-align: left;"><span><span style="line-height: 16px;"><br /></span></span></div><span style="background-color: rgb(255, 255, 255); "><div style="text-align: left;line-height: 16px; "><br /></div></span></div><div style="text-align: left;"><span style=" line-height: 16px; background-color: rgb(255, 255, 255); font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;">ஹையா.. இராமாயணம் முடிஞ்சி போச்சி. :)))) கோர்வையாக இல்லாவிட்டாலும் அவள் இதை மழலையில் சொல்வது கொள்ளை அழகாக இருக்கிறது. வில்லை உடைக்கும் போது இராமனாகவும், சீதையை இழுக்கும் போது இராவணனாகவும் முகத்தில் பிரயத்தனம் காட்டி அசர வைக்கிறாள். கடைசியில் அவள் தலையில் அவளே பாவனை கிரீடம் வைத்துக் கொண்டு கை தட்டிச் சிரிக்கையில் என்னை கெளசல்யையாக உணர வைக்கிறாள். :)</span> </div><div style="text-align: left;"><span><span style="line-height: 16px;"><br /></span></span></div><br /><br /><iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/ERMy9CPjSQg" frameborder="0" allowfullscreen=""></iframe>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-32904504.post-46909656084752521602012-01-14T04:05:00.007+05:302012-01-20T22:48:13.092+05:30'அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது'<a href="http://1.bp.blogspot.com/-LMfUF47sKK8/TxDGTFyGiuI/AAAAAAAAC20/9DERSQkBbCI/s1600/ar04270322.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-LMfUF47sKK8/TxDGTFyGiuI/AAAAAAAAC20/9DERSQkBbCI/s320/ar04270322.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697271559895812834" /></a><br /><div><span class="Apple-style-span" style="font-size:100%;"><br /></span></div><div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;font-size:100%;" >என் செல்ல மகள் அமுதினிக்கு ஒன்னரை வயதாகிறது. அவள் என் வயிற்றில் 3 மாதக் குழந்தையாக இருந்த போதிலிருந்து இன்று வரையிலும் அவளுக்கென்று பிரத்யேகமாய் ஒரு கடிதத்தை எழுதிவிட முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் முதலில் ஓரிரு வரிகள் எழுதுவதும், அதையே திரும்பப் படித்து, திருப்தியில்லாமல் வார்த்தைகளை மாற்றுவதும், அடித்துத் திருத்தித் திருத்தி ஒருவழியாக அவ்வரிகளை அரை மனதோடு ஏற்றுக் கொள்ளும் போது "இதை அடுத்த பத்தியில் சேர்த்துக் கொள்ளலாம். மடலின் துவக்கம் இன்னும் அழகாக, இன்னும் வாஞ்சையாக, இன்னும் குழைவாக... அவள் மீதான என் உள்ளன்பு முழுவதையும் வெளிக்காட்டுவதாக அமைந்தால் நன்றாக இருக்குமே" என்றோர் ஏக்கம் தோன்றுவதும், பெருமூச்சோடு அம்முயற்சியை அப்படியே கிடப்பில் போடுவதும் இது வரை பல தடவைகள் நடந்து விட்டது. ஒவ்வொரு வரியிலும் ஒரு சொல் நிரப்ப வேண்டிய இடத்திற்கென அதே பொருள் கொண்ட ஒன்பது சொற்கள் முட்டி மோதிப் போட்டியிட்டு ஒன்றும் வெற்றி பெறாமல் போவதே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இதே போன்றதொரு இடர்ப்பாட்டினை எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் கதைகள் குறித்து எழுத முயல்கையிலும் நான் சந்திக்க நேர்கிறது. </span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;font-size:100%;" ><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;font-size:100%;" >வாத்சல்யம் என்றோர் சமஸ்கிருதச் சொல் உண்டு. மனதிற்குள் உச்சரித்தாலும் காதுகளுக்குள் இனிமையாக ஒலிக்கக் கூடிய பிரியமான சொல் அது. வாத்சல்யம் என்றால் அன்பு என்று நேரடியாகப் பொருள் கூற முடியாதபடி, அன்பு, அக்கறை, வாஞ்சை, மிகப்பிரியம், குற்றம் காணாத் தன்மை எனப் பல்வேறு அர்த்தங்களில் தொனிக்கும் அடர்த்தியான அதே சமயம் மிக மிருதுவான சொல்லாக விளங்குவது. என் அம்முவை எத்தனை வாத்சல்யத்தோடு அணுகுகிறேனோ அதே அளவு வாத்சல்யத்துடனே அ.மு வின் எழுத்துக்களையும் எதிர்கொள்கிறேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கக் கூடும்.</span></div><div style="text-align: justify;"><b style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;"><span class="Apple-style-span" style="font-size:100%;"><br /></span></b></div><div style="text-align: justify;"><b style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;"><span class="Apple-style-span" style="font-size:100%;">''இலங்கை கொக்குவில் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் கடமையாற்றி தற்சமயம் ஓய்வுபெற்று தன் மனைவி கமலரஞ்சினியுடன் வசிப்பது கனடாவில். இவரின் மகன் சஞ்சயனும், மகள் வைதேகியும் வசிப்பது அமெரிக்காவில்.''</span></b></div><div><span class="Apple-style-span" style="font-family:arial, sans-serif;color:#222222;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse;font-size:100%;" ><br /></span></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family:arial, sans-serif;color:#222222;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse;font-size:100%;" >என்று இவருக்கு அறிமுகம் தந்திருக்கிறது தமிழ் விக்கிபீடியா. இதை விடவும் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்', 'அங்கே இப்ப என்ன நேரம்' முதலான தொகுப்புகளிலும் இன்ன பிற கதைகள் மற்றும் கட்டுரைகளிலும் இவர் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினர் பற்றியும் கொடுத்திருக்கும் தகவல்களே மனதிற்கு மிக நெருக்கமானவையாய் இருக்கின்றன. ' பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு நள்ளிரவில் திரும்பி வரும் மகனிடம் பரிசு குறித்து ஒன்றுமே கேட்காமல் விழித்திருந்து உணவு பரிமாறும் அம்மா, கதவிற்கு வெளியே உருண்டு வரும் தேசிக்காய்களை வைத்து குழந்தைகள் பிறந்த நேரத்தைக் குறித்துக் கொண்டு, ஊருக்கு வரும் ஒவ்வொரு ஜோசியரிடமும் பிள்ளைகளின் ஜாதகக் கட்டைக் கொடுத்து பலன் கேட்கும் தந்தை, தம்பியைப் படம் எடுக்க வீட்டிற்கு புகைப்படக்காரர் வந்த போது அழுது அரற்றி தன்னையும் படம் பிடிக்கும்படி பிடிவாதம் செய்த அண்ணர், சங்கீதம் கற்றுக் கொள்ளும் அக்காள், தன் தலையைக் காட்டிலும் பெரிதான மாம்பழத்தை நெஞ்சோடணைத்து வீடெங்கும் தூக்க முடியாமல் தூக்கித் திரிந்த குட்டித்தங்கை, கனமான புத்தகங்களை அடியிலும் மெலிதானவற்றை மேலாகவுமாக அடுக்கி வைத்து ஒரே கதையின் அடுத்தடுத்த பாகங்களை கீழ்மேலாக தேடச் செய்யும் மனைவி, குதிரையிடம் கடி வாங்கிய மகள், சூட்டிகையான பேத்தி அப்சரா' என்று அவரது உறவினர்கள் அனைவருமே ஏற்கனவே நன்கு அறிமுகமான தூரத்து சொந்தங்களாகவே தோன்றுகின்றனர். </span></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;font-size:100%;" ><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;font-size:100%;" >"நாங்க 5 பேரும் தினம் 8 மணிக்கெல்லாம் தூங்கிடுவோம். தாத்தி மட்டும் தாத்தாவுக்காக முழிச்சிருப்பாங்க. நைட் 10, 11 மணிக்கு வருவார். வெளியூருக்கு போய்ட்டு வந்தார்னா அன்னேரத்துலயும் உசிரோட வாத்தோ, கோழியோ வாங்கிட்டு வந்து அப்பவே தோலுரிச்சி மஞ்சப் பூசிக் குடுத்து சமைக்கச் சொல்லுவார். தாத்தி நடுராத்திரில அம்மில வருக் வருக்னு மசாலா அரைச்சி குழம்பு வைப்பாங்க. புள்ளைங்க சூடா சாப்பிடட்டும்னு நைட் 1 மணிக்கு எங்களை எழுப்பி சாப்பிடச் சொல்லுவார் தாத்தா. தூங்கி விழுந்துகிட்டே சாப்பிடுவோம். காலைல கேட்டா உன் கடைசிச் சித்தி நான் நைட் சாப்பிடவே இல்லன்னு அழுவா" என்று நாங்கள் பார்த்தேயிராத தாத்தாவைப் பற்றியும் எங்கள் குழந்தைப் பருவத்துக் குறும்புகள் பற்றியும் அம்மா சொல்லும் கதைகளில் இருக்கும் சுவாரஸியத்தையும் நம்பகத் தன்மையையும் அச்சுப் பிசகாமல் கொண்டிருப்பவை அ.முவின் அனுபவக் கதைகள்.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family:arial, sans-serif;color:#222222;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse;font-size:100%;" ><br /></span></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size:100%;"><span class="Apple-style-span" style="font-family:arial, sans-serif;color:#222222;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse;">இவரது கதைகளின் சிறப்பம்சமாக அதில் விரவியிருக்கும் நகைச்சுவையை பலரும் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். </span></span><a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60302096&format=print&edition_id=20030209" target="_blank" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; color: rgb(17, 85, 204); ">"புன்னகைக்கு<wbr>ம் கதை சொல்லி"</a><span class="Apple-style-span" style="font-family:arial, sans-serif;color:#222222;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse;"> என்பார் ஜெயமோகன். உடல்நலம் குன்றிய தன் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து அருகில் துணைக்கிருந்த இரவில், சூழலுக்கு கொஞ்சமும் பொருந்தாமல் வாய் விட்டுச் சிரித்தபடியே </span></span><a href="http://www.writerpara.com/paper/?tag=%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D" target="_blank" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; color: rgb(17, 85, 204); ">'அங்கே இப்ப என்ன நேரம்'</a><span class="Apple-style-span" style="font-family:arial, sans-serif;color:#222222;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse;"> தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்ததாக சொல்கிறார் பா.ராகவன். 'ஐவேசு' கதையை தன் பதிவில் குறிப்பிட்டு எழுதியதன் வாயிலாக எனக்கு முதன் முதலாக அ.மு வை அறிமுகப்படுத்திய ஆசிப் அண்ணாச்சியும் அதன் நகைச்சுவையே தன்னை வெகுவாகக் கவர்ந்த அம்சம் என்று கூறியிருக்கிறார். ஆனால் என்னளவில் நகைச்சுவையைக் காட்டிலும் அ.மு வின் கதை சொல்லும் நேர்த்தியும் சொக்க வைக்கும் விவரணைகளுமே அவரது அதி சிறந்த அம்சங்களாகத் தோன்றுகின்றன.</span></span></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family:arial, sans-serif;color:#222222;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse;font-size:100%;" ><br /></span></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size:100%;"><span class="Apple-style-span" style="font-family:arial, sans-serif;color:#222222;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse;">ஜெயமோகனின் தாயார் பாதம் சிறுகதையில் </span></span><b style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;">"சும்மா தேனீமேலே ஏறி ஒக்காந்து ரீ….ம்னு நந்தவனமெல்லாம் சுத்தி, நந்தியாவட்டை மல்லிகை ரோஜான்னு பூப்பூவா உக்காந்து மண்ட மண்ட தேன்குடிச்சுட்டு வந்து எறங்கின மாதிரி ஒரு அனுபவம்."</b><span class="Apple-style-span" style="font-family:arial, sans-serif;color:#222222;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse;"> என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். அ.முத்துலிங்கத்தின் எழுத்தை வாசிக்கும் போதெல்லாம் இப்படியானதொரு அனுபவம் வாய்க்கத் தவறியதில்லை. அவரின் இணையதளத்தில் இருக்கும் </span></span><a href="http://amuttu.net/viewArticle/getArticle/210" target="_blank" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; color: rgb(17, 85, 204); ">'மாம்பழம்'</a><span class="Apple-style-span" style="font-family:arial, sans-serif;color:#222222;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse;"> என்ற கட்டுரை நான் மிக மிக ரசித்துக் கிறங்கிப் படித்த கட்டுரைகளுள் ஒன்று. தோட்டத்திலிருக்கும் மாமரத்திலிருந்து வீட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கான பழத்தைத் தேர்வு செய்து அதில் தங்கள் பெயர் எழுதிய சீட்டுக்களை கட்டி வைக்கின்றனர். அவற்றின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்து அவை முற்றிக் கனிந்ததும் அவரவர் கனியை பறித்து உண்டு மகிழ்கின்றனர். அவர்களுள் மிகச் சிறியவளான 3 வயது தங்கையின் மாம்பழம் குறித்து பின்வருமாறு விவரிக்கிறார் ஆசிரியர்.</span></span></span></div><div style="text-align: justify;"><b face="arial, sans-serif" style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); "><span class="Apple-style-span" style="font-size:100%;"><br /></span></b></div><div style="text-align: justify;"><b style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;"><span class="Apple-style-span" style="font-size:100%;">"ஆக எஞ்சியது தங்கச்சியின் மாங்காய்தான். அது ஒவ்வொரு நாளும் பெருத்துக்கொண்டே வந்தது. அவளுடைய தலையளவுக்கு பெருத்த பிறகு நிறம் வைக்கத் தொடங்கியது. ஒருநாள் காலை பழுத்து கனிந்து சாப்பிடுவதற்கான பருவத்தை எட்டியது. அண்ணர் அதை ஆய்ந்து அவளிடம் கொடுத்தார். இரண்டு கைகளாலும் ஏந்திப் பிடிக்க கைகளில் அவளுக்கு போதிய பலம் கிடையாது. ஆனாலும் அவள் அதை கீழே இறக்கவில்லை. குழந்தையை அணைத்துப் பிடிப்பதுபோல நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக்கொண்டு வீடு முழுக்க அலைந்தாள். ஒரு புதுப் பொம்மை கிடைத்ததுபோல மகிழ்ச்சி. மதியம்வரை அதை நெஞ்சைவிட்டு கீழே இறக்கவில்லை. அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது."</span></b></div><div><span class="Apple-style-span" style="font-size:100%;"><br /></span><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;font-size:100%;" >இந்தப் பத்தியைப் படிக்கும் போதே மாம்பழத்தைத் தூக்க முடியாமல் தூக்கித் திரியும் குட்டிப் பெண்ணின் உருவம் மனக்கண்ணில் தோன்றியதோடு அவளின் மகிழ்ச்சி என் முகத்திலும் கசிந்து விரவிக் கொண்டிருந்தது. இறுதியாய் 'அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்குக் கிடையாது' என்ற வரியை வாசித்தபோது உண்டான மனக்கிளர்ச்சியை எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை. ஏறத்தாழ அ.முவின் எழுத்துக்களை நானும் இப்படித்தான் தூக்கிக் கொண்டு திரிகிறேனோ என்று தோன்றுகிறது!</span></div><span class="Apple-style-span" style="font-size:100%;"><br /><span class="Apple-style-span" style="font-family:arial, sans-serif;color:#222222;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse;">விவரணைகளைப் போன்றே அவர் கையாளும் உவமைகளும் மிக மிக அழகானவை. 'ஐயோ' எப்படித்தான் இப்படியெல்லாம் சொல்லத் தோன்றுகிறதோவென மாய்ந்து மாய்ந்து வியக்கச் செய்பவை.</span></span><br /><br /><b style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family: arial, sans-serif; ">"தாயின் கையை பறித்துக்கொண்டு ஓடும் குழந்தைபோல ஒரு முடிக்கற்றை நெற்றியிலே விழுந்தது"<br /><br />"இப்பொழுதுதான் பிறந்த ஆட்டுக்குட்டி எழுந்து நிற்பதுபோல அவர் கால்கள் நடுங்கின"<br /><br />"என்னுடைய முகம் சாத்தி வைத்த கதவு போல இருந்தது"<br /><br />"ஒரு குளவியை அறைக்குள் விட்டு கதவைச் சாத்தியது போல அறையின் இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமாக கனகி சர்க் சர்க் என்று பறந்து கொண்டிருந்தாள்."<br /><br /></b><span class="Apple-style-span" style=" ;"><b style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family: arial, sans-serif; ">"குழந்தை அவசரமாக தாயைப் பின் தொடர்ந்தது. திடீரென நின்று, தானியத்தைக் கொத்துவதற்கு குருவி தயங்குவது போல யோசித்தது"</b></span></span></div><div><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 18px; font-family:Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;font-size:100%;" ><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 18px; font-family:Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;font-size:100%;" >" கனடாவின் 143 வருட சரித்திரத்தில் முதன்முதலாக ஓர் ஈழத்தமிழர் உடலழகன் போட்டியில் பங்குபற்றியதுமல்லாமல் இரண்டாவது இடத்தையும் வென்றிருந்தார். அவர் பெயர் பகீரதன் விவேகானந். <b>ஒரு மேப்பிள் இலை உதிர்ந்ததுபோல, ஒரு குறுக்கெழுத்துப் புதிர் பூர்த்தியானதுபோல, ஒரு வீதி விளக்கு சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியதுபோல இந்தச் சம்பவம் மிகச் சாதாரணமாக மறக்கப்பட்டுவிடும் "</b></span></div><div style="text-align: justify;border-collapse: collapse; color: rgb(80, 0, 80); font-family:arial, sans-serif;font-size:13px;"><span style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;font-size:100%;" ><br /></span></div><div style="border-collapse: collapse; font-family:arial, sans-serif;font-size:13px;"><div style="text-align: justify;color: rgb(80, 0, 80); "><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" >என்பவை சில எடுத்துக்காட்டுகள். எவருடைய நூலைப் பற்றியாவது சிலாகித்துப் பேசுகையில் அதில் வரும் மிகச் சிறந்த வசனத்தை சுட்டிக் காட்டி "இந்த ஒரு வசனத்திற்கே புத்தகத்திற்கு கொடுத்த மொத்த விலைப்பணமும் சரியாய்ப் போய்விட்டது" என்று குறிப்பிடுவது அ.முத்துலிங்கம் அவர்களின் வழக்கம். அவரது புத்தகத்தை வாசிக்கையில் குறைந்தது 50 முறைகளாவது இதே வரியை நினைவு கூர வேண்டியிருக்கிறது. உவமைகளைப் போன்றே ஒவ்வொரு கதையிலும் புதிதாக அறிந்து கொள்வதற்கென நிறைய சுவாரஸியமான செய்திகள் பொதிந்திருக்கும். அட! என புருவமுயர்த்தி ஆச்சரியப்பட வைக்கும்.</span></div><span class="Apple-style-span" style="font-size:100%;"><span style="border-collapse: collapse; font-family:arial, sans-serif;"></span><span style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;"><div><br /></div></span><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); "><b>"ஆராய்ச்சி’ என்று ஒரு மாமரம். அதன் காய்கள் பனங்காய் அளவுக்கு பெரிசாக வளர்ந்து தன் பாரத்தை தானே தாங்க முடியாமல் வெடித்துவிடும். இன்னொரு வகை ’மத்தளம்தூக்கி’. நார்ச்சத்துள்ள இனிய பழம். இன்னொன்று ’வெங்காயம் காய்ச்சி’. இதை பழுக்க வைப்பதில்லை, இதில் வெங்காய வாசனை வரும் ஆகவே கறிக்கு பயன் படுத்துவார்கள்."</b></span></span></div><div style="border-collapse: collapse; font-family:arial, sans-serif;font-size:13px;"><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" ><br /></span></div><div style="border-collapse: collapse; font-family:arial, sans-serif;font-size:13px;"><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size:100%;color:#222222;"><br /></span></div><span style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;font-size:100%;" ><div><b>"தென் அமெரிக்காவில் 150 பேர் மட்டுமே கொண்ட ஓர் இனக்குழு உண்டு. அவர்களுடைய மொழியில் ’அரைகுறையாக அம்பு எய்தவன்’ என்பதற்கு ஒரு வார்த்தை உண்டு. அரைகுறையாக அம்பு எய்தால் மிருகம் வலியில் துடித்து உழன்றுதான் சாகும். அந்த மொழியில் ஆக மோசமாக ஒருவரை திட்டவேண்டும் என்றால் அந்த வார்த்தையை சொல்லி வைவார்கள். "<br /><br />"ஆப்பிரிக்காவில் மணமுடிக்கும் முன்னரே பிள்ளை பெற்ற பெண்ணுக்கு மதிப்பு அதிகம். அவள் கர்ப்பம் தரிப்பது பிரச்னை இல்லாததால் அவளை மணக்க ஆடவர் போட்டியிடுவர். இந்தியப் படங்களில் ஒரு பெண் கற்பைக் காப்பாற்றப் போராடும் இடங்கள் அவர்களுக்குப் புரிவதேயில்லை."<br /><br />"ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் பிணத்தை எரிப்பதைப் பார்த்ததும் ஆப்பிரிக்கர்கள் கிலி பிடித்து ஓடிவிடுவார்கள். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான பழக்கம் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார்கள்".</b></div></span></div><div style="border-collapse: collapse; font-family:arial, sans-serif;font-size:13px;"><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" ><br /></span></div><div style="border-collapse: collapse; font-family:arial, sans-serif;font-size:13px;"><div style="text-align: justify; "><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" >இப்படி தனி நூலாய்த் தொகுக்குமளவிற்கு கதையெங்கும் பரவியிருக்கும் நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமல்லாது சாதாரணமாய் நகரும் கதையை ஒற்றை வரியால் சட்டென வேறு தளத்திற்கு உயர்த்திச் செல்லும் லாவகமும், மாலையா இரவா எனப் பிரித்தறிய முடியாதபடி மயங்கி வரும் பொழுதைப் போல உண்மையா புனைவா என்றுணர மாட்டாத மயக்கத்தோடு அனுபவங்களை விவரித்து செல்லும் பாங்கும், வெவ்வேறு தேசங்கள், பல்வேறு வாழ்க்கை முறைகள் என வாசிப்போருக்கு அந்நியமாயிருக்கும் அனைத்தையும் எளிய தமிழின் வழியாக மிக அணுக்கமானதானக் காட்டும் திறமையும், செறிவான சொற்களைத் தேடித் தேடிப் பயன்படுத்தும் வசீகரமும் அவரின் தனிச்சிறப்புக்களாக மிளிர்கின்றன.</span></div><div style="text-align: justify; "><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" ><br /></span></div><div style="text-align: justify; "><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" >அ.மு வின் கதைகளில் எதிரி, மட்டுப்படுத்தப்பட்ட வினைச் சொற்கள், மயான பராமரிப்பாளர், வேட்டை நாய், என் குதிரை நல்லது, முதலியவற்றோடு எனக்கு மிக மிகப் பிடித்தமான கதைகள் இரண்டு உண்டு. <a href="http://amuttu.net/viewArticle/getArticle/18" target="_blank" style="color: rgb(17, 85, 204); ">"அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை" </a><a href="http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=344" target="_blank" style="color: rgb(17, 85, 204); ">"உடனே திரும்ப வேண்டும்" </a> ஆகிய 2 கதைகளையும் என்னால் மறக்க முடிந்ததே இல்லை. </span></div><span style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;font-size:100%;" ></span><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" ><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" >இவை என் மனதில் ஆழப் பதிந்து அழியாமல் நின்று விட்டமைக்கு, இந்த இரண்டு கதைகளுமே உடல் நலமின்றித் துன்புறும் இளங்குழந்தையைப் பற்றியும் குழந்தையின் அவஸ்தையைக் காணச் சகியாத பெற்றோரைப் பற்றியுமான கதைகளாய் அமைந்தது காரணமாயிருக்கலாம். என் மகள் பிறக்கும் முன்பாகவே இவ்விரண்டு கதைகளையும் பதைபதைப்போடு மிகவூன்றிப் படித்திருந்தேன். அவள் பிறந்து வளர்ந்து முதன் முதலாகப் பின்னோக்கித் தவழத் தொடங்கிய நாட்களிலும், சமீபமாய் உடல்நலமின்றி இரவெல்லாம் கடுமையான சளித் தொந்தரவோடும் காய்ச்சலோடும் அவள் அவதிப்பட்ட நாட்களிலும் இக்கதைகளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்த படியே இருந்தேன். </span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" ><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" >'அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை' என்ற கதையில் வரும், தவழும் பருவத்துக் குழந்தையான லவங்கி திடீரென கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுவாள். ஒரு சுவாசப் பை முற்றிலும் மடிந்து உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கும் குழந்தைக்கு ஊசி மருந்து செலுத்துவதும், சலைன் ஏற்றுவதும், உடலில் மெல்லிய குழாயைச் செலுத்தி சிறுநீர் எடுப்பதுமாக மருத்துவ சோதனை என்ற பெயரில் அலைக்கழிப்பார்கள். ஒவ்வொன்றிற்குமாக அழுது அழுது களைத்த குழந்தை, எக்ஸ்ரே எடுப்பதற்காக அந்நிய மனிதர்கள் இருவர் அவளை அழுத்திப் பிடித்ததும் அது வரை இல்லாத அளவுக்கு கதற ஆரம்பிப்பாள். இதற்கு அனுமதித்த தன் அப்பாவை நம்ப முடியாத கண்களால் பார்ப்பாள். முதல் மொட்டை அடிப்பதற்காக அமுதினியை எல்லாருமாக சேர்ந்து அழுத்திப் பிடித்து தலையில் தண்ணீர் தெளித்த போது இதே போன்ற பார்வையுடன் தான் கதறித் தீர்த்தாள். அம்மா.. அம்மா என்றே ஓயாமல் அழுதாள். சுற்றியிருந்த அத்தனை பேரையும் விடுத்து அவள் கருவிழிகள் என்னை மட்டுமே ஊடுருவித் துளைத்தன. அவ்விழிகளில் கண்ணீரோடு சேர்ந்து நீயுமா இதற்கு உடந்தை? என்ற கேள்வியும் கலந்து கன்னத்தில் இறங்கியபடியே இருந்தது. </span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" ><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" >மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகளை மனைவியின் வசம் ஒப்படைத்து, இரண்டே நாட்களில் திரும்பி விடுவதாக வாக்களித்து விட்டு பணி நிமித்தமாய் தூர தேசம் செல்லும் தந்தை தொடர்ந்து 8 நாட்களாக ஊருக்குத் திரும்ப இயலாமல் அவதிப்படுவதைப் பற்றிய சிறுகதை 'உடனே திரும்ப வேண்டும்'. போதாக்குறைக்கு கைக்குழந்தையான அவர் மகளின் தோள் மூட்டில் பூச்சியொன்று முட்டையிட்டு கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்திற்குள் வளர ஆரம்பித்து சருமம் வீங்கத் தொடங்கியிருக்கும். வலி தாளாமல் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டேயிருக்கும். விமானம் பழுதாகி விசா இல்லாமல் அல்லாடி மீண்டும் விமானம் ஏற முடியாமல் தவித்து முழுதாக 8 நாட்கள் கழித்து அவர் திரும்பி வரும் போது அப்புழு வளர்ந்து குழந்தையின் தசையைப் பிளந்து கொண்டு வெளியேறிப் போயிருக்கும். குழந்தை சுரம் குறைந்து களைப்போடு ஒரு குட்டித் தலையணையில் தன் குட்டித் தலையை வைத்துப் படுத்திருக்கும். </span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" ><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" >இரு கதைகளிலுமே குழந்தை உடலால் அனுபவிக்கும் வேதனைக்கு சற்றும் குறையாத வேதனையைப் பெற்றோர் மனதால் அனுபவிக்கின்றனர். எப்போது நினைத்துக் கொண்டாலும் மையுறிஞ்சும் தாளைப் போல நெஞ்சில் துக்கம் பரவிப் பாய்வதைத் தடுக்க முடிந்ததில்லை. வாசிக்கும் போது கண்ணோடும் கையிலிருக்கும் நூலோடும் மட்டும் நின்று விடாமல் வாசிப்பவரின் நெஞ்சோடு கலந்து வாழ்க்கை முழுவதும் துணை வரும் படியாக இப்படி ஒரு சில கதைகளே வாய்க்கின்றன. என் கல்லூரிக்கால முதல் வகுப்பில் 'இலக்கியத்தின் பயன் என்ன?' என்று எங்கள் ஆசிரியர் கேட்ட கேள்விக்கான பதிலையும் இது போன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே நான் கண்டு கொள்கிறேன்.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" ><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size:100%;" >நான் தமிழ் இலக்கியம் பயின்றவள். எந்தவொரு பொருள் குறித்தும் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்து நேர்மையான முறையில் அவற்றின் நிறை, குறைகளை முன்வைத்து கட்டுரை படைக்கப்பட வேண்டும் என்றே எனக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் எனக்குப் பிடித்தமானவை குறித்து நானெழுதும் கட்டுரைகள் அனைத்திலும் சிலாகிப்புகள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. 'எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல்' என்பார் வள்ளுவர். ரோஜாக்களைப் பற்றி பேச முனைகையில் முட்களை முன்னிறுத்த வேண்டிய அவசியம் தான் என்ன? </span></div><span style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family:arial, sans-serif;"><div><br /></div></span><span style="color: rgb(80, 0, 80); "><span style="color:#888888;"></span></span><span style="color:#500050;"></span></div></div>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-32904504.post-69222173409044017842012-01-03T00:59:00.001+05:302012-01-03T01:08:26.489+05:30குறுகத் தரித்த மனம்<a href="http://3.bp.blogspot.com/-e7FjMiZa4HU/TwIG9AvOuvI/AAAAAAAAC2k/fm4kCNq9WaM/s1600/8248274-illustration-of-fish-tank-on-white-background.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><br /><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-e7FjMiZa4HU/TwIG9AvOuvI/AAAAAAAAC2k/fm4kCNq9WaM/s320/8248274-illustration-of-fish-tank-on-white-background.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5693120524189612786" /></a><br /><div><br /></div><div><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family: arial, sans-serif; font-size: 13px; "><div style="text-align: center;"><br /></div><div style="text-align: left;"><br /></div></span><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family: arial, sans-serif; font-size: 13px; ">சிகரங்களின் சீதளத்தையும்</span><span class="Apple-style-span" style="border-collapse: collapse; color: rgb(34, 34, 34); font-family: arial, sans-serif; font-size: 13px; "><div style="text-align: left;">பள்ளத்தாக்குகளின் விரிசல்களில்</div><div style="text-align: left;">நதியோடு கசியும் ரகசியங்களையும்</div><div style="text-align: left;">ஒருபோதும் அறிந்ததில்லை</div><div style="text-align: left;">தோட்டத்துப் பூக்கள்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">தினமும் விரித்துச் சுருட்டும்</div><div style="text-align: left;">படுக்கைகளுக்குள்ளாக</div><div style="text-align: left;">இருதயம் போல் </div><div style="text-align: left;">கசங்கி விரிகின்றன</div><div style="text-align: left;">நாட்கள்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஜன்னல்களின் விளிம்பில்</div><div style="text-align: left;">கிளைபரப்பிக் கனிவளர்த்து</div><div style="text-align: left;">செழித்து நிற்கின்றன</div><div style="text-align: left;">போன்சாய் மரங்கள்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஆயினும்..</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">தொட்டி மீன்களின் கனவில்</div><div style="text-align: left;">ஓயாமல் அலைவீசிக் கொண்டிருக்கிறது</div><div style="text-align: left;">பேராழம் மிக்கப் </div><div style="text-align: left;">பெருங்கடல் ஒன்று.</div><div class="yj6qo ajU" style="text-align: center;cursor: pointer; outline-style: none; outline-width: initial; outline-color: initial; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; width: 22px; margin-top: 2px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "></div></span></div>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-32904504.post-66434410639270137972011-05-28T03:33:00.003+05:302012-01-03T02:42:32.782+05:30வாழுநம் என்னும் செருக்கு<a href="http://2.bp.blogspot.com/-Hw_Y5xXT590/TeAgQNffjII/AAAAAAAACdY/F95S_6BnHQM/s1600/photo%2B3.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-Hw_Y5xXT590/TeAgQNffjII/AAAAAAAACdY/F95S_6BnHQM/s320/photo%2B3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5611520598575385730" /></a><br /><i><span class="Apple-style-span" style="color:#993399;"><br />அப்படித்தான் இருந்தாள் அவள்.<br />கரை தொலைத்த தோணிகளுக்காய்<br />தொலைவில்<br />மின்னிச்சுழலும் ஓர் ஒளித்தீண்டல் போல..<br /><br />நன்னீர் சுரந்திருக்கும்<br />சின்னஞ்சிறு சுனையென<br />கரவலைகள் வீசி<br />தளும்பிக் கொண்டிருந்தாள்.<br /><br />பின்னோர் நாள் கண்டேன்<br />கவிமனம் தேடியலையும்<br />முதற்சொல்லொன்று<br />எம் முற்றத்தில்<br />தவழ்ந்து கொண்டிருப்பதை.<br /><br />இப்போது<br />அவள் விரல்நுனி பிடித்து<br />தத்தி நடக்கிறது காலம்.<br /><br />காற்றசைத்த மலரென<br />வீடெங்கும்<br />சிதறிக் கிடக்கிறது மொழி.<br /><br />ஆம்..<br />அவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள்<br />நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.<br /></span></i><br /><br /><br />சென்ற வருடம் இதே நாளில் அரை மயக்கத்தில் கண்விழித்துப் பார்க்கையில், சின்னஞ்சிறு சிப்பி இமைகள் மூடியிருக்க, கைகளிரண்டையும் கமலப்பூவின் அரும்பு போல நெஞ்சின் மேல் குவித்து, தானிருந்த கண்ணாடிப் பேழை முழுவதிலும் தன்னுடலின் விரிசோதியினை நிரப்பியபடி, தந்தையின் சாயலோடு உறங்கிக் கொண்டிருந்த செல்ல மகள்.... <div> </div><div><br /></div>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-32904504.post-54766757096099952742011-05-28T03:14:00.003+05:302011-05-28T03:29:16.355+05:30ஈன்ற பொழுதினும்...<span class="Apple-style-span" style=" border-collapse: collapse; font-family:arial, sans-serif;font-size:13px;">ஒரு கண் சிமிட்டலைப் போல கடந்து விட்டது வருடம். நினைக்க நினைக்க மலைப்பாயிருக்கிறது. .. இன்று அமுதினியின் முதல் பிறந்தநாள். இதுவரை ஒரு சில காணொளிகள், ஒலிப்பதிவுகள், கணக்கற்ற புகைப்படங்கள் தவிர்த்து எழுத்தில் அவளை நான் பதிவு செய்யவேயில்லை. 'இன்மையிலிருந்து இருப்புக்கு வருவது போல' என்று ஓர் உவமை சொல்வார் ஜெயமோகன். அம்முவின் செயல்கள் ஒவ்வொன்றும் சொற்களில் தொடங்கி சொல்லின்மையில் சென்று முடிவதாகவே படுமெனக்கு. ஒவ்வொரு முறையும் மனதிற்குள்ளாகவே அதை விரித்து விரித்து.. கையிருப்பிலுள்ள வார்த்தைகளையெல்லாம் கலைத்து அடுக்கி மீண்டும் கலைத்து... முடிவில், இயலாமையினூடாக மெல்லிய பெருமிதம் கசிய 'என்ன பொண்ணு இவ' என்று சந்தோஷமாய் அலுத்துக் கொண்டு முயற்சியை கை விட்டு விடுவேன். இம்முறை அப்படி விட்டுவிட மனமில்லை.<br /><br />குழந்தை கற்பூரம். ஓரிரு முறைகளில் எதையும் கற்றுக் கொண்டு விடுகிறாள். சாப்பாடு ஊட்டும் போது சில சமயம் 'அம்மாக்கு கண்ணு?' என்று வாய் திறப்பேன். அவளுக்கு நான் ஊட்டுவதைப் போலவே சின்னஞ்சிறு கையை அழகாய்க் குவித்து இல்லாத உணவை என் வாயில் திணிப்பாள். இது அவ்வப்போது நடக்கும்.<br /><br />கூடவே யூ டியூபில் குழந்தைப்பாடல்களைப் பார்த்தபடி சாப்பிடுவது அவள் வழக்கம். சித்துவையும் என்னையும் தவிர்த்து இந்த வீட்டில் ஈ, எறும்பு, கொசு போன்ற இதர சிற்றுயிர்களைக் கூட காணாது வளரும் அவளுக்கு சிங்கம், புலி, குரங்கு, மாடு, யானை, முயல், பூனை, நாய், ஆடு, காக்கை, கிளி, மயில்,மான் முதலான அத்தனை ஜீவராசிகளும் இந்தப் பாடல்கள் மூலமாகவே பரிச்சயம். க்கா க்கா வெனக் கரைவது, பவ் பவ் வெனக் குரைப்பது, ம்ம்மாஆஆவென்று கத்துவது, சிங்கம் போல வாய் பிளந்து கர்ஜிப்பது, யானையைப் போல கையுயர்த்தி தலையில் ஆசிர்வதிப்பது போன்றவற்றையும் இதிலிருந்தே கற்றுக் கொண்டிருக்கிறாள். மேற்சொன்ன வரிசையில் பூனை அவளுக்கு மிகப்பிரியமான உயிர்.<br /><br />கடந்த 2 வார காலமாய் அவளுடைய பாடல் வரிசையில் கீழ்க்கண்ட காணொளியையும் சேர்த்திருந்தேன். பூனைக்குட்டி கத்திக் கொண்டே துள்ளுவதைப் பார்ப்பதில் பேரானந்தம் அவளுக்கு. எப்போதோ ஒரு முறை 'பாவம் கண்ணு.. பூனைக்குட்டிக்கு பசிக்குதாம்' என்றும் சொல்லி வைத்திருந்தேன்.<br /><br />நேற்று சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் இந்தப் பூனையைப் பார்த்தவள், திடுமென அதற்கு சாப்பாடு ஊட்டுபவளைப் போல கை குவித்துக் கொண்டு 'பு பு' (புவா - சாப்பாடு) என்றபடி கணினித் திரையை நோக்கி கை நீட்டினாள். என்ன சொல்ல! அவளின் புரிதலில், அதனை அவள் வெளிப்படுத்திய விதத்தில், அன்பென்று அவளே அறிந்திராத அவளது தூய அன்பினில், இனியெப்போதும் என்னால் மறக்கவியலாத அந்தக் கண நேரக் காட்சியில்... இன்னமும் பிரம்மித்துக் கொண்டேயிருக்கிறேன். கன்னலின் சுவையையும் தேனின் சுவையையும் சொல்லால் வேறுபடுத்திக் காட்ட முயல்வது போல அயர்ச்சி பரவுகிறது மனதில். :)<br /><br />" தன்னைப் பெற்றேற்கு வாயமுதம் தந்தென்னை தளிர்ப்பிக்கின்றான்" என்று கண்ணனைப் பாடுகிறார் பெரியாழ்வார். தளிர்ப்பித்தல் என்பதன் பொருளை இப்போது தான் உணர்ந்து கொண்டேன். </span><div><span class="Apple-style-span" style=" border-collapse: collapse; font-family:arial, sans-serif;font-size:13px;"><br /></span></div><div><span class="Apple-style-span" style=" border-collapse: collapse; font-family:arial, sans-serif;font-size:13px;"><br /><br /><br /><iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/yC4eEuURH8c" frameborder="0" allowfullscreen=""></iframe><br /></span></div>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-32904504.post-52931226233474065652009-09-27T14:14:00.001+05:302009-09-27T14:16:19.449+05:30வாங்கிட்டீங்களா?<div style="text-align: justify;">கிழக்கு பதிப்பகத்தின் இணைய தளத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாய் புத்தகங்களுக்கான <a href="http://nhm.in/shop/kizhakku-book-club/">விலைச் சலுகை </a>வழங்கப்பட்டு வருகிறது. பத்ரி சேஷாத்ரியும் <a href="http://thoughtsintamil.blogspot.com/2009/08/blog-post_30.html">இது குறித்துப்</a> பதிவிட்டிருந்தார். இருபது புத்தகங்களை வெறும் ஆயிரம் ரூபாய்க்குத் தருகிறார்கள். எத்தனை பேர் பயன்படுத்திக் கொண்டீர்கள் எனத் தெரியவில்லை. நான் தொலைபேசியிலும், உரையாடல் ஜன்னலிலுமாய் என் நண்பர்கள் சிலருக்கு பரிந்துரைத்தேன். நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் பொசியட்டுமே என்ற அக்கறையில் இந்தப் பதிவு! முழு விபரங்கள் இந்தச் சுட்டியில்.. http://nhm.in/shop/kizhakku-book-club/<br /></div><br /><br />1. ஒரு மோதிரம் இரு கொலைகள்<br />2. இது காந்தி<br />3. உயிர்ப்புத்தகம்<br />4. ஶ்ரீ நாராயண குரு<br />5. கஜல்<br />6. சுதந்திர பூமி<br />7. அரசூர் வம்சம்<br />8. அனுபிஸ் மர்மம்<br />9. அடடே - 1<br />10. அடடே - 4<br />11. முகமது யூனுஸ்<br />12. மாலதி<br />13. கோபுலு: கோடுகளால் ஒரு வாழ்க்கை<br />14. கட்சி ஆட்சி மீட் சி<br />15. 60 வயதுக்குப் பிறகு<br />16. புதுசும் கொஞ்சம் பழசுமாக<br />17. வேதபுரத்து வியாபாரிகள்<br />18. வல்லினம் மெல்லினம் இடையினம்<br />19. கைலாஷ் செளதுரியின் ரத்தினக் கல்<br />20. கால் முளைத்த மனம்<br /><br />இது நாங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியல். மொத்தம் 1600 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் 1000 ரூபாய்க்கு கிடைத்திருக்கின்றன!காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-32904504.post-34238337082866112572009-09-16T17:20:00.002+05:302009-09-16T19:55:19.320+05:30பகடையாட்டம்<div style="text-align: justify;">21 புள்ளிகள்.. 5 வரை நடுப்புள்ளி என்றோ, வேறு ஏதேனுமோர் எண்ணிக்கையிலோ வாசலில் விரைந்து புள்ளியிடும் அம்மாவின் விரல்களை அருகமர்ந்து வியப்பாய்ப் பார்த்துக் கொண்டிருக்கையில், புள்ளிகள் இணைந்த பின் வரவிருப்பது தேரா, தாமரைகளா, தீபங்களைச் சுற்றி இழையும் சர்ப்பங்களா.. அல்லது வேறு ஏதேனுமா என்பது என் பால்ய மனதிற்கு எப்போதும் புதிராகவே இருக்கும். புள்ளிகள் சேரச் சேர, புலனாகும் மாக்கோல வடிவம் யூகங்களுக்குட்பட்டதாக இருப்பின் இனம் புரியா மகிழ்வொன்று மனதில் நுரைத்துப் பொங்கும். யுவனின் 'பகடையாட்டம்', வாசிப்பினிறுதியில் இத்தகைய குதூகலத்தையே விட்டுச் சென்றுள்ளது.<br /></div><br /><div style="text-align: justify;">யுவன் பற்றிய எனது அறிதல் சித்தார்த்தின்<a href="http://angumingum.wordpress.com/2006/08/09/already/"> இந்த</a>ப் பதிவிலிருந்து தான் தொடங்கியதென நினைக்கிறேன். என் வரையில், சமகால எழுத்தாளர்களில் என்னைத் தொடர்ச்சியாய் பிரம்மிப்பிலாழ்த்திக் கொண்டேயிருப்பவர்கள் மூவர். ஜெயமோகன், அம்பை மற்றும் யுவன். முன்னிருவரைப் போன்றே எளிதில் நிராகரித்து விட முடியாத / கூடாத மொழி யுவனுடையது. யுவன் படைப்புகளில் முதன்முதலில் வாசித்த 'ஏற்கனவே' சிறுகதைத் தொகுப்பு அதன் எளிமையாலும், நேர்த்தியாலும், சிறிய விஷயங்களை அழகாய்க் கோர்த்துச் சொல்லும் சுவாரசியத்தாலும் வெகுவாய்க் கவனம் ஈர்த்தது. பின், ஈரோட்டிலிருந்து கோவை வரையிலான 2 மணி நேரப் பயணத்தில் படித்து முடித்த 'கானல் நதி', பேருந்தென்றும் பாராமல் கண்ணீர் சிந்த வைத்ததோடு அடுத்த பல நாட்களுக்குப் பலமாய் அலைக்கழித்தது. அதற்குப் பின்னாய் சற்றே நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது வாசிக்கக் கிடைத்த பகடையாட்டம், என் சிந்தனா சக்தியை இன்னும் தன் பிடியிலேயே வைத்திருக்கிறது. வாசிக்கையிலும், முடித்த பின்னும் பயிற்சியாளனுக்கு கட்டுப்பட்டு சாகசங்கள் புரியும் பணிவான வனமிருகம் போன்றும், கணவனின் அன்புக் கரங்களுக்குள் இழையும் மனைவியைப் போன்றும், யுவனிடம் மொழி இணங்கியும் நெருங்கியும் எப்போதும் கூப்பிடு தொலைவிலேயே காத்து நிற்பதாய்த் தோன்றுகிறது.<br /></div><br /><div style="text-align: center; color: rgb(0, 0, 153); font-style: italic;">"சதுரங்கக் காய்களுக்குச் சுய சிந்தனை கூடாது என்பது முதல் பாடம்"<br /></div><br /><div style="text-align: justify;"> எனத் தொடங்கும் இந்நாவல், தனது அத்தியாயங்களைச் சதுரங்கப் பலகையின் கருப்பு வெள்ளைக் கட்டங்களாகவும், கதை மாந்தர்களை சதுரங்கக் காய்களாகவும் கற்பித்துக் கொண்டு மெல்ல மெல்ல கற்பனையின் பரப்பில் எல்லையற்று விரியத் தொடங்குகிறது. இந்தியா - திபெத் - நேபாளம் என்னும் முக்கோணத்திற்கிடையில் இருக்கும் ஸோமிட்ஸியா என்ற கற்பனை தேசத்தின் அரசியல் நிலைப்பாடுகளைப் பேசும் ஒரு புத்தகம், ஸோமிட்ஸியாவின் ஆதி தோற்றம் பற்றி விவரிக்கும் பூர்வ கிரந்தம் என்னும் நூல், மேஜர் க்ருஷ் என்றழைக்கப்படும் கீழக்குண்டு ஜெயராமன் கிருஷ்ணமூர்த்தியின் சுயசரிதத்தினின்று சில பக்கங்கள், ஜூலியஸ் லுமும்பா - ஹான்ஸ் வெய்ஸ்முல்லர் என்னும் கருப்பு வெள்ளை நண்பர்களின் வாழ்க்கை வரலாறு.... இவற்றைத் தனித்தனிப் பக்கங்களாகக் கிழித்து அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை மாற்றிக் கலந்து வைத்தால் கிடைக்கும் ஒற்றைப் புத்தகமே பகடையாட்டம்!<br /></div><br /><div style="text-align: justify;">ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாதது போன்று நகரும் அத்தியாயங்கள் அனைத்தும் முடிவில் இதற்காகத் தான் இது என்பது போல காரண காரியங்களோடு வரிசையாய்க் கைகோர்த்துக் கொள்வதும், தொடங்கியதிலிருந்தே பூத்தொடுப்பது போல மனம் அவற்றை கோர்க்க முயன்று கொண்டேயிருப்பதுமாய்.... இப்புத்தகம் என்னை மீண்டும் புள்ளிக் கோலங்களை வியந்து கொண்டிருக்கும் சிறுமியாக்கி விட்டிருக்கிறது.<br /></div><br /><div style="text-align: justify;">ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது, முழுக்க முழுக்க அவனுடையதாக மட்டுமே இருத்தல் சாத்தியமா? வெற்றுத் தாளில் மசியினால் வைக்கப்பட்டிருக்கும் ஒற்றைப் புள்ளிக்குக் கூட திசைகளும், இடம், காலம் என்னும் அலகுகளும், பெளதிக விதிகளும், தாள், எழுதுகோல், மசி, அவற்றைக் கையாளும் கரம் ஆகியவற்றுடனான தொடர்புகளும், அவை குறித்த நீண்ட வரலாறுகளும், அப்புள்ளி எதோவொன்றின் தோற்றுவாயாகவோ, முற்றிடமாகவோ மாறும் சாத்தியங்களும், என்ன வடிவமாகவேனும் பரிணமிக்கும் அளவற்ற சுதந்திரமும் வாய்த்திருக்கையில்.. கற்பனையால் எழுதப்படும் ஒரு மனிதனின் வாழ்க்கை அல்லது ஒரு தேசத்தின் வரலாறு என்பது, எத்தனை எண்ணற்ற பரிமாணங்களையும், அலகற்ற சாத்தியங்களையும் , ஆதியந்தம் காணவியலாத தொன்மைகளின் தொடர்புகளையும் பெற்றிருக்கக் கூடும்? அச்சாத்தியங்களை தன்னால் இயன்ற வரை இந்நூலுக்குள் மொழியால் கட்டி இழுத்து வந்திருக்கிறார் யுவன் சந்திரசேகர்.<br /></div><br /><div style="text-align: justify;">இந்நாவலினூடே உடன் பயணிக்கும் பூர்வ கிரந்தம் என்னும் கற்பனை நூலின் மொழிநடை வெகு அலாதியானது. <span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">"ஸோமிட்ஸியாவின் அரசியல் நிலைமையையும், சமூக வாழ்க்கையின் கதியையும் முழுக்க முழுக்க நிர்ணயிப்பது, பூர்வ கிரந்தம் என்றழைக்கப்படுகின்ற நூல். அரசியல் சாசனம் என்று கொள்ள முடியாத, மதநூல் என்று தள்ளவும் முடியாத, குழந்தைகளுக்கான மாயாஜாலப் புத்தகம் என்று சுவாரசியமாக ரசிக்கவும் முடியாத விநோதநூல்."</span> என்று நாவலிலேயே இந்நூல் பற்றிய விவரணை இடம்பெறுகிறது. இவ்விவரிப்பிற்குக் கொஞ்சமும் மாறுபடாமல், முழு நாகரிக வளர்ச்சியோ கல்வியின் நிறைவையோ பெற்றிராத ஒரு தேசத்தின் மக்கள் கண்மூடித் தனமாகப் பின்பற்றும் விதிமுறைகளும், நம்பிக்கைகளும், வரலாறுகளும், மாய தளங்களும் விரவியதாக, பழமை போர்த்திய வசீகர மொழியில் எழுதப்பட்டிருக்கிறது பூர்வ கிரந்தம்.<br /><br /><div style="text-align: left;"><span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">"நீரை வணங்குவாயாக.</span> </div><div style="text-align: left;"><span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">நீரே உயிரின் சாரம். நீரின் அலைகளில் வாழ்வின் தாளம்.</span> </div><div style="text-align: left;"><span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">கனியில் ருசியாய், மலரில் மணமாய், ஞாபகத்தில் நெகிழ்வாய், காமத்தின் நதியாய்..</span> </div><span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">நீரை அறிவாயாக... நீரின் தீராக் குழந்தைமையை வணங்குவாயாக.</span> <span style="font-style: italic; color: rgb(0, 0, 153);"><br /><br />ஆகாயத்தை வணங்குவாயாக.</span> <span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">நிறங்கள் சலனங் கொள்ளும் பிரபஞ்சக் கூரை அது.</span> <span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">பறவைகளும் மேகங்களும் வசிக்கும் மெளனவெளி.</span> <span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">ஆழத்தில் கோள்களும் இன்னும் ஆழத்தில் விண்மீன்களும் யாரும் ஆணையிடாமலே கடமை தவறாமல் சுழன்று நீந்திக் களிக்கும் மகா சமுத்திரம்."<br /><br /></span> </div> <span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">"நகர்தல் நதியின் தியானம். வளர்தல் செடியின் தியானம். சும்மாயிருத்தல் பாறையின் தியானம். நீரையும் நதியையும் பிரித்தறிதல் இயலாது. தியான மெளனத்தில் சலனமுறும் சுவாசமே உயிர்ப்புலம் என்றறிக"</span><br /><br /><div style="text-align: justify;">என்பன சில எடுத்துக்காட்டுகள். இந்நாவல் உருவான விதம் மற்றும் களம் குறித்துக் கூறுகையில், வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு நாடுகளை விட்டு வெவ்வேறு காலகட்டங்களில் புலம்பெயர்ந்த திபெத்திய துறவிச் சிறுவன் ஒருவனைப் பற்றிய செய்தியும், ஜெர்மானிய ராணுவ அதிகாரி ஒருவரின் சுயசரிதையும், நாவலின் விதைகள் என்கிறார் யுவன்.<br /></div><br /><div style="text-align: justify;"><span style="color: rgb(153, 0, 0);">"புனைகதையின் உயிர் அதன் சாரத்திலில்லை, உருவத்தில் தான் இருக்கிறது என்று எனக்கு ஒரு நம்பிக்கை. சொல்லித் தீர்ந்து விட்டன எல்லாக் கதைகளும். மறுகூறலுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே தன் உயிரை வைத்திருக்கிறது."</span><br /></div><br /><div style="text-align: justify;">என்ற அவர் கூற்று நாவலின் சதுரங்க வடிவத்திற்கான விளக்கமாக அமைகிறது. மேலும் உலகின் எண்ணற்ற நாடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்காமல் கற்பனை தேசம் ஒன்றை உருவாக்கியதற்கும் பின்வருமாறு காரணம் சொல்கிறார்..<br /></div><br /><div style="text-align: justify;"><span style="color: rgb(153, 0, 0);">"நான் பிறக்க நேர்ந்த நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டைக் களமாகக் கொண்டு எழுதினாலும் அந்த நாட்டின் புற, அக குணாம்சங்களைப் பொறுத்தவரை நான் அந்நியனாகத் தான் இருப்பேன். இந்த நாவலின் களமாகக் கட்டமைக்கப்பட்ட ஸோமிட்ஸியா என்ற நாட்டுடன் எனக்கு உருவாகிய சுவாதீனம் அளவிட முடியாதது. அந்த நாட்டின் நிலப்பரப்பிலும், குடிமக்களின் அகப்பரப்பிலும், அதன் அரசியல் நிர்வாக மட்டங்களிலும் மிகச் சுதந்திரமாகப் போய் வர முடிந்தது என்னால்."</span><br /></div><br />சரி தான். பிள்ளையைப் பற்றி தாயைக் காட்டிலும் அதிகம் அறிந்தவர் யார் இருக்க முடியும்! புத்தக வாசிப்பின் போது மனங்கவர்ந்த வரிகளை அடிக்கோடிடும் (நல்ல / கெட்ட) பழக்கம் என்னிடமுண்டு. இப்புத்தகத்தில் அதனைக் கையாளவில்லை.. நூலின் பெரும்பான்மைப் பகுதிகள் அடிக்கோடுகளால் நிரம்பியிருக்கக் கூடும். அவற்றுள் மிகச் சில மட்டும் இங்கே..<br /><br /><span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">"கண்ணுக்குத் தெரியாத அழிரப்பர் ஒன்று எல்லாவற்றையும் அழித்துக் கொண்டே போக, தன் முயற்சியில் தளராத மாயப் பென்சில் பின் தொடர்ந்து எழுதிப் போகிறது என்று தோன்றியது செல்லச்சாமி வாத்தியாருக்கு. ஆனாலும் ரப்பரின் சக்தி தான் பெரியது. மீண்டும் அதே மாதிரி எதையும் எழுத முடியவில்லை பென்சிலால்."</span><br /><br /><span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">"ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொன்றும் உள்ள அதே அளவு இடைவெளி, ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையிலும் இருக்கிறது.."</span><br /><br /><span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">"எந்தக் கேள்விக்கும் பதில் தேட வேண்டிய அவசியமின்றி, தேவையானபோது உண்பதற்கான உணவு மூட்டையாய் மாறிவிடுகிறது மனதில் சேகரமாகியிருக்கும் தகவல் தொகுப்பு"</span><br /><br /><span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">"சக மனிதர்களின் உணர்வுகளைச் சாப்பிடாமல் மனிதர்களால் உயிர் வாழவே முடியாது.."</span><br /><br /><span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">"பார்வைக்குத் தெரிகிற மனிதனும் பழக்கத்துக்குத் தெரிகிற மனிதனும் ஒன்றாயிருப்பது அபூர்வம் தானே..?" </span> <br /><br />என்னளவில் நான் வாசித்தவற்றுள் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்றாய் பகடையாட்டத்தைக் குறிப்பிடுவேன். மற்றும் என் அலைவரிசையைச் சேர்ந்த எவருக்கும் இந்நூலை தைரியமாய்ப் பரிந்துரைப்பேன்.<br /><br /><br /><span style="font-style: italic; color: rgb(0, 102, 0);">நூல் : <a href="http://www.newbooklands.com/new/product1.php?catid=15&&panum=2559">பகடையாட்டம்</a></span> <span style="font-style: italic; color: rgb(0, 102, 0);"><br />ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்</span> <span style="font-style: italic; color: rgb(0, 102, 0);"><br />வெளியீடு : தமிழினி</span> <span style="font-style: italic; color: rgb(0, 102, 0);"><br />விலை: ரூ. 130</span>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-32904504.post-19114231577797117962009-09-13T12:14:00.001+05:302009-09-13T12:23:47.877+05:30உயிர்த்தல்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_114peM9BqK0/SqyVMDavVLI/AAAAAAAABlw/oiP7amKKCAM/s1600-h/loneliness.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 388px; height: 346px;" src="http://2.bp.blogspot.com/_114peM9BqK0/SqyVMDavVLI/AAAAAAAABlw/oiP7amKKCAM/s320/loneliness.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5380839689109329074" border="0" /></a><br /><div style="text-align: left;"><br /><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">நீயற்ற பொழுதுகளின் </span><br /></div><div style="text-align: left; font-style: italic; color: rgb(51, 0, 51);">கனம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்<br /></div><br /><div style="text-align: left; font-style: italic; color: rgb(51, 0, 51);">உறக்கம் தொலைத்த இரவுகளை..<br /></div><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">உன்னை நினைத்துக் கொண்ட தருணங்களை..</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">உன்னோடிருந்த நாட்களை....</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">உன்னைப் போலிருந்த மனிதர்களை...</span><br /> <br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);"> சொற்களின் இடுக்குகளில் </span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">கசியத் தொடங்குகிறது</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);"> விழிகளின் ஈரம்..</span><br /> <br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">கண்கள் தவிர்த்து</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">காற்றிடம் பேசுமென்னை</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">முன்னெப்போதுமில்லாத</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">பரிவின் முகம் கொண்டு</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">பார்த்துக் கொண்டிருக்கிறாய் நீ...</span><br /><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">விடைபெறும் வேளையில்..</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">மழையின் குரலில் </span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">அழைக்கிறாய் என்னை..</span><br /><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">நான்</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">எத்தனை சொல்லியும் தீராக் காதலை</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);"> ஒற்றைச் சொல்லில் நிரப்பி விளிக்கிறாய்..</span><br /><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">எங்கோ </span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">கிளைகளுதிர்த்த பூக்களில் ஒன்று</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">மீண்டும் பூக்கிறது</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 0, 51);">மனதின் ஆழத்தில்.</span>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-32904504.post-46071863389403518242009-09-10T15:40:00.006+05:302009-09-10T16:24:42.510+05:30யுவன் கவிதையுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். 87 பக்கங்களைக் கடந்தாயிற்று. சென்று சேருமிடம் குறித்த முன்முடிவுகள் / யூகங்கள் ஏதுமின்றி, தொடர்ந்து பாதைகளை மாற்றிக் கொண்டேயிருக்கும் கதையின் பாதச்சுவடுகளை அடியொற்றிச் செல்வதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த ஜனவரிக்குப் பிறகு நாளை, நாளை என்று நான் ஒத்திப் போட்டுக் கொண்டே வந்த, 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை இன்றென நிர்ணயித்திருக்கிறது போல. கதையை, இன்று இதற்கு மேல் தொடர முடியாதெனத் தோன்றுகிறது. கவிதையை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.<br /><br /><br /><span style="font-style: italic; color: rgb(0, 0, 153);">"ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது<br />வெகு சுலபம்<br /><br />முதலில் உள்ளங்கை நிரம்பிய<br />தானிய மணிகளால் அதைக்<br />கவர்ந்திழுக்க வேண்டும்.<br /><br />ஆகாயத்தை விடவும்<br />கூண்டு பாதுகாப்பானது என்று<br />நம்பச் செய்ய வேண்டும்.<br /><br />சுவாதீனம் படிந்த பிறகு,<br />எதிர்பாராத தருணமொன்றில்<br />அதன் சிறகுகளைத் தரித்துக்<br />குப்பையில் வீச வேண்டும்,<br />தூவிகளில் ஒட்டிய<br />ஆகாயக் கனவுகள் மட்கும் வண்ணம்.<br /><br />பிறகு<br />அதன் கால்களை ஒடித்துவிட வேண்டும்<br />உயிர்வாழும் வேட்கையால்<br />நடந்தேனும் இரைதேட விடாதபடி.<br /><br />அடுத்ததாக,<br />அதன் அலகை முறித்து விடுவது நல்லது<br />தானாய் வந்து<br />சிக்கும் இரையைப் பிடிப்பதையும்<br />தடுத்து விடலாம்.<br /><br /><span style="font-weight: bold;">இப்போது </span> <span style="font-weight: bold;">சிட்டுக்குருவி<br />ஒரு கூழாங்கல் ஆகிவிட்டது</span><br /> <span style="font-weight: bold;">சிறு வித்தியாசத்துடன்.<br /><br /></span>கல்போலின்றி, பறந்த நாட்களை<br />நினைவு கூரும் குருவி.<br /><br />பூர்விக நியாபகம் போல<br />உயிர் துடிக்கும்<br />அதன் கண்களில்.<br /><br />இனி நீங்கள் செய்ய வேண்டியது<br />ஒன்று தான். குருவிமிச்சத்தைத்<br />தரையில் இட்டுக் காலால் தேய்த்துவிட வேண்டும்.<br /><br />சிட்டுக்குருவியைக் கொல்வது,<br />ஒரு நட்பையோ<br />ஒரு ஆன்மாவையோ<br />முறிப்பது போல,<br />மிக மிகச் சுலபம்"<br /><br /></span>புத்தகத்தை மூடிவிட்டு, சிட்டுக்குருவிகள் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் சிட்டுக் குருவியாய் இருந்த தருணங்களையும்.காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com39tag:blogger.com,1999:blog-32904504.post-8547918831986604592009-01-29T15:17:00.001+05:302009-01-29T15:39:30.266+05:30பின்பனிக்காலத்திலோர் விடியல்..<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_114peM9BqK0/SYFt2T6SK1I/AAAAAAAAAng/7UdcRD4EisM/s1600-h/kiss.bmp"><img style="cursor: pointer; width: 313px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_114peM9BqK0/SYFt2T6SK1I/AAAAAAAAAng/7UdcRD4EisM/s400/kiss.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296635416589511506" border="0" /></a><br /><br />பயணங்கள் மட்டுமே வாழ்வாயிருந்த தினங்களை, என்னிடம் அவையேற்படுத்தியிருந்த ஆழ்ந்த சலிப்பினை இப்போது வாய்த்திருக்கும் இந்த அபூர்வ பயணத்தில் நீண்ட பெருமூச்சுகளினூடே மீண்டும் நினைத்துக் கொள்கிறேன். வெளியில் இன்னமும் தீர்ந்து போய்விடாத இரவையும் கனத்த இருளையும் ஊடுருவி பகலை நோக்கி விரைகிறது பேருந்து. தவிட்டு நிற, ஒளி குன்றிய கண்ணாடி சன்னல்களின் பின்னாலிருந்து ஓர் மொட்டவிழ்வது போல மெல்ல விரிந்து கொண்டிருக்கும் இன்றைய நாள், மெலிதாய் கண்களுக்குத் தட்டுப்படுகிறது. இது வரை நான் கண்டுவந்திருக்கும் விடியல்களைப் போன்றே அதே ரம்மியங்களோடு, அதே நிறங்களோடு, அதே நிதானங்களோடு, அதே புன்னகையோடு... அனைத்திலும் அதுவே போன்ற, ஆனால் இதுவரை கண்டேயிராத இந்த விடியல் புதியதோர் பரவசத்திலாழ்த்துகிறது!<br /><br />வியப்பாயிருக்கிறது.. என் நாட்களும் கூட இப்படியாகத்தான் மிக நீண்டதோர் இரவை, அதன் மீது வழிந்து கொண்டிருக்கும் அடர்கருமையை, அதன் மெளனத்திற்குள் ஒளிந்திருக்கும் அதிபயங்கரங்களைக் கடந்து, கடந்து, இப்போது தான்.. இதோ இந்த புலர்காலையைப் போன்றே மென்மையாய் விடிந்து கொண்டிருப்பதாய்த் தோன்றுகிறதெனக்கு.<br /><br />ஒருவர் பின்னொருவராய் முன்னிருப்பவரின் உடுப்பைப் பற்றிக் கொண்டு ஓடி வரும் சிறுபிள்ளைகளைப் போல உன் நினைவுகள் கூச்சலிட்டபடி ஓடி வருகின்றன... ஒரு வட்டத்தின் துவக்கப் புள்ளி போல உன்னிலிருந்து தொடங்கும் என் அனைத்தும் உன்னிலேயே வந்து முடிவதை வெகு ஆச்சரியங்களோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை என்னால் இயன்றதும், இயல்வதும்.. எனக்கென்று பணிக்கப்பட்டிருப்பதும் கூட வெறுமனே பார்த்திருத்தலாகத் தான் இருக்கக் கூடுமோ? தெரியவில்லை. என்றாலும் பங்கேற்றிருத்தலும் நாமாய், பார்த்திருத்தலும் நாமாய் இருப்பதில் அனேக சுவாரஸ்யங்கள் இருக்கத்தான் செய்கின்றன இல்லையா? நம் சந்திப்பு முதலாய் இந்நாள் வரையிலும் நம் நாட்களை கையெடுக்காமல் வரையப்பட்ட கோட்டோவியமாய்த் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கும் அற்புத விரல்களை, இக்கணத்தில் நன்றியின் பொங்குதல்களோடு நினைத்துக் கொள்கிறேன்.<br /><br />முத்துக்களின் நுண்ணிய துளைகளின் வழி மெல்லிய இழையொன்று புகுந்து புறப்படுவதையொத்து நினைவுகளை கண்களுக்குப் புலப்படாத கண்ணியால் கோர்க்க விழைகிறதென் இதயம். என் வாழ்வின் துயரங்கள், பிறழ்வுகள், இழப்புகள் ஆகியவற்றின் துவக்கத்தைப் போன்றே பூபாளத்தின் முதல் ஸ்வரத்தை, பரிவினால் சுரந்து காற்றில் கலந்து வந்த அன்பின் கதகதத்த வெம்மையை இதே போன்றதோர் விடியல் தான் என்வசம் கொணர்ந்து சேர்த்தது. அப்போது அல்லிகள் மலர்ந்து, வெயில் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்த குளக்கரையின் விளிம்பிலமர்ந்தபடி, தளும்பும் நீரலைகளில் பார்வையைப் பதித்த வண்ணம், நிறைய தயக்கங்களோடு மெல்ல விரிந்த விரல்களை, அன்பும், நம்பிக்கையும், பாதுகாப்பும், உறுதியும் மிக்க விரல்கள் மிக உரிமையாய் கோர்த்துக் கொண்டன. வெயில் வேகமாய் நகர்ந்து அவ்விரல்களின் மீது வெளிச்சமிட்டது. அவ்விடத்தில் வெயிலோடு தானும் ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளும், உறக்கத்தில் ஒரு முறை கண்விழித்துப் பார்த்த பூனைக் குட்டியும் அப்புனித நிகழ்விற்கு சாட்சியங்களாகின!<br /><br />உனக்குத் தெரியுமா? அந்த நாளை, அந்த விடியலை, இறுக மூடியிருக்கும் சிசுவின் உள்ளங்கைகளைப் போன்று கண் கூசச் செய்யும் அதன் தூய்மையை, எத்தனை பெரிய அந்தகாரத்தின் நடுவிலும் பிரகாசமாய் ஒளிரும் அதன் வசீகர அழகை, எவரும் எதுவும் நெருங்கவியலாத ஆழத்தில் இதயத்தின் ரகசிய அறையில் நான் பொதிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். என்றேனும் நானறியாப் பொழுதில் அது திறந்து கொள்கையில் அதன் அற்புதப் பிரவாகத்தில் நான் மூழ்கிவிட நேர்கிறது. நான், என் என்பது ஏதுமற்று நெருப்பில் கரையும் கற்பூரமாகி விடுகிறது மனது. என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும்.. அந்த நாளுக்குப் பின்னாக வந்த வேறெந்த நாளும் அதனுடைய வனப்பில் பாதியைக் கூடப் பெற்றுவிட முடியவில்லை.<br /><br />இப்போது நீ எங்கிருப்பாய்? எங்கோ தொலைவில்... வெகு தொலைவில்.. பசியால் அழுது ஓய்ந்த குழந்தையின் சாயல்களோடு, எனக்கான மிச்ச ஏக்கங்களோடு, முகத்தில் எப்போதும் ததும்பும் கருணையோடு, அயர்ச்சியில் உறங்கிக் கொண்டிருப்பாய். என் மனம், இப்போது வெளியே பொழிந்து கொண்டிருக்கும், புற்களிலும், பூக்களிலும், வயல்களிலும், மரங்களிலும், துயில் கலைந்து பறக்கத் துவங்கியிருக்கும் பறவைகளின் சிறகுகளிலும் படிந்து கொண்டிருக்கும், மெல்லிய பனியாய் மாறிவிடத் துடிக்கிறது. உறங்கும் உன் சிப்பியிமைகளில் மிருதுவாய்ப் படிந்து, அவை மெல்லத் திறக்கையில் உன் பார்வை தொடும் முதல் உணர்வாய், முதல் குளிராய் உள்நுழைந்து குழந்தைமைகளை கொஞ்சமும் இழந்து விடாத உன் தூய இதயம் முழுவதிலும், ஒவ்வொரு அணுவிலும் நிரம்பி விடத் தவிக்கிறது. உனக்கும் எனக்குமான தூரங்களை நிறைத்திருக்கும் வெளி முழுவதும் தானேயாகப் படர்ந்து உன்னை அடைந்துவிட விழைகிறது....<br /><br />இயலாமையின் தோற்கடிப்பில் விழிசோர்கிறதெனக்கு. சன்னல்களின் கண்ணாடித் திரை விலக்கி கொட்டும் பனியை கைகளில் ஏந்துகிறேன். மழையைப் போல் விரல்களினூடே வழிந்து விடாமல் ஏந்திய கரங்களில் தேங்குகிறது பனி. அன்றோர் நாள் அடிபட்ட பறவையாய் உன் மடியில் நான் வீழ்கையில் பறக்கவியலாதவென் சிறகுகளை ஆதுரத்துடன் வருடிய உன் கரங்களின் குளுமையை நினைவூட்டிக் கொண்டே உள்ளங்கைக் குழிவில் படிந்து கொண்டிருக்கிறது.. வெட்டப்படாத என் சிறகுகளை பெருமையாய்ப் பார்த்த வண்ணம் நீயிருக்கும் திசை நோக்கிப் பறக்கத் தீர்மானிக்கிறேன் நான்.காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com97tag:blogger.com,1999:blog-32904504.post-24936609946722395312009-01-09T01:05:00.004+05:302009-01-09T07:06:32.012+05:30பாற்கடல்!சித்துவிற்கு புத்தகங்கள் என்றால் அலாதிப் ப்ரியம். உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளின் பட்டியலில் நிச்சயம் அவையும் இடம் பெற்றிருப்பதாய் சாதிப்பார்! இந்த முறை சென்னையிலும் ஈரோட்டிலுமாய் புத்தகக் கடைகளில் ஏறி இறங்குகையில் லா.ச.ரா வின் 'பாற்கடலை' அதிதீவிரமாய் தேடிக் கொண்டிருந்தார். ஒரு வழியாய் ஈரோடு பாரதி புத்தகாலயத்தில் லா.ச.ரா -வின் படைப்புலகம் கிடைத்தது.. மேலதிகமாய் கவிஞர் அபியின் விமர்சனங்களோடு.<br /><br />சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் மற்றும் குறுநாவல்கள் பற்றிய அறிமுகங்களோடு கூடிய அத்தொகுப்பு நூலை இருள் கவியத் தொடங்கிய மாலையொன்றில் காவிரி ஆற்றங்கரையில் அமர்ந்து படிக்கத் துவங்கினோம். காவிரி முன் போலில்லை. என் சின்னஞ்சிறு விழிகளில் விரிந்து விரிந்து.. என் இளம் பிராயங்களின் கரைகளில் நிரம்பித், ததும்பிக் கொண்டிருந்தது போல பின்னெப்போதும் அது இருக்கவில்லை. ஆறும் கல்பொரு சிறு நுரையாகிக் கொண்டிருக்கிறதோ என்னவோ? என்றாலும் ஆற்றங்கரைகளுக்கேயுரிய தனி வசீகரமும் இல்லாமலில்லை.<br /><br /><span style="font-style: italic; color: rgb(102, 0, 204);">"சிறு அசைவுகளில் பெரிய விளைவுகள் உண்டாக்க வேண்டும். சொல்லாமல் உணர்த்தும் நளினம் கைவர வேண்டும். தமது நடவடிக்கைகள் மெளனத் தளத்தில் இருக்க வேண்டும்"</span> என்று தீவிரமாக ஆசைப்படுபவர் லா.ச.ரா என்கிறார்<br />அபி.<br /><br />அபியின் கணிப்பு சரி தான் என்றாமோதிக்கிறது 'பாற்கடல்'. பாற்கடலைப் போல, படிக்கப் படிக்க உடம்பு சிலிர்த்துக் கொண்டதும், மனம் பெரு மைதானம் போல விரிந்து கொண்டே சென்றதும், படித்து முடிக்கையில் பேரானந்தமும்<br />பெருந்துக்கமுமாய் தொண்டை அடைத்துக் கொண்டதுமான மெய்ப்பாடுகள் வேறெப்போது நிகழ்ந்தனவென்று நினைவிலில்லை. எங்கள் முன்னால் வற்றி இளைத்து, உடம்பெங்கும் எலும்புகள் துருத்தினாற் போல் நகர்ந்து கொண்டிருந்த நதி கூட சட்டென்று பாற்கடலாகி விட்டது போலொரு பிரமை தட்டிற்று. சொல்லி வைத்தாற் போல் நிறைவாய் இரு புன்னகைகள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.<br /><br />'நல்ல கதை... நல்ல்ல கதை' - சித்து தன்னையறியாமல் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார். கடிதமா கதையா என்று பிரித்துப் பார்க்கவியலாதபடி வெகு இலாவகமாய் நகரும் கதையின் கட்டமைப்பை வெகு நேரம் வியந்து கொண்டிருந்தார். வலைப்பதிவில் நிச்சயம் எழுதவேண்டும் என்றார்.<br /><br />இதோ இப்போது பாற்கடல் பற்றி எழுதுவது என்று முடிவான பின்னும் கூட லா.ச.ரா விரும்பும், அவர் படைப்புகள் அனைத்திலும் அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கும் 'சொல்லாமல் உணர்த்தும் நளினம்' கைவருமா<br />என்ற சந்தேகத்தில் தான் நான் இப்படி சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறேன்.<br /><br />இக்கட்டுரை நிச்சயம் ஒரு விமர்சனக் கட்டுரையில்லை.. இன்னின்ன நிறைகள், இத்தனை குறைகள் என்று பட்டியலிடும் எண்ணமில்லை. மாறாய் ஒரு அளப்பரிய உன்னத கணத்தை, எப்போதும் மாறாமலிருக்கும் உண்மையொன்றை, மனம் தளும்பும் மகிழ்ச்சியொன்றை தற்செயலாய் ஸ்பரிசித்து விட்ட அனுபவத்தை மட்டுமே இதில் சுட்டிப் போக விரும்புகிறேன். ஒரு விழைவு.. அல்லது ஆற்றுப்படுத்தும் முயற்சி.. அல்லது முதன்முதலாய் கடல் பார்க்கும் குழந்தையின் ஆச்சரியம்!<br /><br /><span style="font-style: italic; color: rgb(102, 0, 204);">"குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லட்சுமி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. .... ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது; உடனேயே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயே தான்.."</span><br /><br />என்று நிறைவுறுகிறது கதை. நம் பழஞ்சமூகம் முன்னொரு காலத்தில் கட்டமைத்திருந்த கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பம் தான் பாற்கடலின்<br />கதைக்களமாகியிருக்கிறது. கூட்டுக்குடும்பங்கள் பற்றிய தற்காலத்தைய அவநம்பிக்கையை, முன்மதிப்பீடுகளை எல்லாம் பொட்டிலறைந்தாற் போல ஒரே ஒரு கதையின் மூலம் களைந்து விட முடியுமா என்ற ஐயப்பாட்டை சாத்தியமாக்கியிருக்கிறது லா.ச.ரா வின் எழுத்து. அன்பு, பாசம், காதல், நெகிழ்ச்சி, உறவு, பிரிவு.... இன்னும் பின்னவீனத்துவ வாதிகளின் கேலிக்குள்ளாகும் இதேபோன்ற இன்னபிற பொய்களில் நிறைந்திருக்கும் உண்மையின் சதவீதத்தை அன்னம் போல பிரித்துக் காட்டியிருக்கிறது.<br /><br />கதை படித்த நாளிலிருந்து பாற்கடல் என்ற படிமம் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எவர் உருவாக்கியிருப்பார்கள் இதை? கற்பனைக்கெட்டா வண்ணம் ஆழமும் விரிவுமாய் பரவியிருக்கும் உவர்கடலை, முழுவதும் பாலால் நிரப்பிப் பார்க்க எந்த மனம் விரும்பியிருக்கும்? விஷமும் அமிர்தமும் அதிலிருந்தே வந்ததென்ற கற்பனை எவர் மனத்தில் உதித்திருக்கும்?<br /><br />தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த கதை, மனதில் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்குமிடையிலான தடுப்புச் சுவற்றை வலுவுற மேலெழுப்பிக் கட்டியதெனில் லா.ச.ராவின் 'பாற்கடல்' இருமைகளுக்கிடையிலான தடித்த கோட்டினை முற்றிலும் இல்லாமலாக்கியிருக்கிறது. உண்மை தான். சூரியன் ஒரேயிடத்தில் இருக்கையில் இரவேது? பகலேது? உறவுகளும் அவை தரும் துன்பங்களும் அதைத் தொடர்ந்த தேற்றுதல்களும் பின் வரும் இன்பங்களும் என்றான வாழ்க்கைச் சுழற்சி கூட இத்தனை நாட்கள் இரவு பகலைப் போல வேறு வேறாய் காட்சியளித்தவை தானில்லையா? நன்றும் தீயதுமான அல்லது நன்மையும் தீமையுமற்ற பாற்கடலைப் போன்றது தான் குடும்பங்களெனில் ஒவ்வொரு மனிதரையும் கூட பாற்கடலாய்த் தான் பார்க்கத் தோன்றுகிறது!காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com41tag:blogger.com,1999:blog-32904504.post-43939014593194827702008-09-30T00:00:00.007+05:302008-09-30T00:34:19.115+05:30காதலில் விழுந்தேன் - விமர்சனம்<p align="center"></p><p align="center"><a href="http://1.bp.blogspot.com/_114peM9BqK0/SOEiwMgp4vI/AAAAAAAAAV4/Y6a509h6uWE/s1600-h/96_7.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5251516851877962482" style="WIDTH: 432px; CURSOR: hand; HEIGHT: 299px" height="219" alt="" src="http://1.bp.blogspot.com/_114peM9BqK0/SOEiwMgp4vI/AAAAAAAAAV4/Y6a509h6uWE/s400/96_7.jpg" width="338" border="0" /></a></p><br /><span style="color:#000099;">நடிப்பு:</span> <span style="color:#990000;"><em><strong>நகுலன், சுனேனா, சம்பத்</strong></em></span><br /><span style="color:#000099;">இசை:</span> <strong><em><span style="color:#990000;">விஜய் ஆண்டனி</span></em></strong><br /><span style="color:#000099;">இயக்கம்:</span><strong><em><span style="color:#996633;"> </span><span style="color:#990000;">பி.வி.பிரசாத்</span></em></strong><br /><span style="color:#000099;">தயாரிப்பு:</span> <span style="color:#990000;"><strong><em>சன் பிக்சர்ஸ்</em></strong><br /></span><br />நீங்கள் 13 வயதிற்குட்பட்டவர் அல்லது 19 வயதிற்கு மேற்பட்டவர் எனில், சாலையில் வாகனம் மோதி இறந்து கிடக்கும் நாய், பூனை மற்றும் மனிதர்களையும், கசாப்புக் கடையில் கழுத்தறுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியையும் ஒருபோதும் காணச் சகியாதவர் எனில், பிப்ரவரி 14ம் தேதியை 'மற்றுமோர் நாளாக' மட்டுமே பாவிக்கும் யதார்த்தவாதி எனில், 'காதலில் விழுந்தேன்' உங்களுக்குரிய படமல்ல.<br /><br />அதிலும் சித்தப்பாக்கள், சித்திகள், குழந்தைகள், மாமா, அத்தை, பாட்டி, தம்பி, தங்கை என குடும்ப சகிதமாய் சென்று பார்ப்பவர்களுக்கு நிச்சயம் உகந்த படமல்ல. நேற்று முன்தினம் மாலை சொந்தங்கள் சந்தித்துக் கொண்ட அபூர்வ நாளை கொண்டாடுவதென முடிவெடுத்து இந்த திரைக்காவியத்தைப் பார்க்கப் போய் பாரபட்சமின்றி எல்லோரும் ஒருசேர துயரத்தில் விழுந்தோம். பட்ட காலிலே படும் என்பார்கள். எனக்கு பட்ட தியேட்டரிலேயே படுகிறது.<br /><br />கடந்த 11 வருடங்களுக்கும் மேலாய் திரையரங்கு பக்கம் வந்திராத எங்கள் தாத்தி (பாட்டி) படத்தின் நடுவே என்னை அழைத்து 'என்னைக் கூட்டிட்டு வர வேற நல்ல படமே கிடைக்கலயா உங்களுக்கு?' என்றார்கள் பரிதாபமாய். என் 3 வயது குட்டித் தங்கை திரையில் ரத்தத்தைப் பார்த்ததும் வீறிட்டு அழத் தொடங்கியவள்... நிறுத்தி நிறுத்தி படம் முழுக்க அழுது கொண்டேயிருந்தாள். இரவுக் காட்சி என்பதால் பாதுகாப்பின் அவசியமுணர்ந்து, எழுந்துபோக வழியின்றி சித்தப்பாக்கள் சங்கடமாய் நெளிந்து கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?<br /><br />சரி கதைக்கு வருவோம்.. யாரோ 4, 5 பலவான்கள் துரத்தி வர அவர்களிடமிருந்து காதலியை காப்பாற்றி புகைவண்டியிலேறி காதலர்கள் உடன்போக்கு செல்லும் காட்சியில் தொடங்குகிறது படம். கதைகளில், திரைப்படங்களில் வரும் காதலுக்கு எப்போதும் நாமெல்லோருமே முழு ஆதரவாளர்கள் தான் என்பதால் 'அப்பாடா தப்பியாச்சு' என்ற ஆசுவாசமும் 'அவனுங்க ஃபாலோ பண்ணாமஇருக்கனுமே' என்ற பதற்றமும் ஒருமித்து எழுகிறது. காதலியை படுக்க வைத்துவிட்டு டிக்கெட் பரிசோதகர் லிவிங்ஸ்டனிடம் தங்கள் கதையை சொல்லவாரம்பிக்கிறார் நாயகன். (வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் அல்ல)<br /><br />ஏழை நாயகன் நகுலன், செல்வந்த நாயகி சுனேனா. ஓர் நாள் சுனேனாவின் துப்பட்டா மிக அழகாய் காற்றில் பறந்து சென்று நகுலனின் முகத்தை மூட, தமிழ் சினிமா நியதிப்படி காதல் வந்திருக்க வேண்டிய காட்சியில் எதிர்பாராத விதமாய் விபத்து வந்துவிடுகிறது. (இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா!) தன்னால் தான் விபத்து நேர்ந்தது என்ற குற்ற உணர்வின் நீட்சியில் நகுலனை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து பணிவிடைகளும் செய்கிறார் சுனேனா. விபத்து நட்பாகி, நட்பு காதலாகிறது. திடீரென விளையாட்டுப் போட்டிக்காக வெளியூர் சென்று திரும்பும் நகுலனிடம் சுனேனா இறந்து விட்டதாக சொல்கிறார்கள் நண்பர்கள். அதை நம்ப மறுக்கும் நகுலன் <strong>மார்ச்சுவரிலிருந்து</strong> காதலியின் பிரேதத்தைத் தூக்கிக் கொண்டு போகிறார். முதல் காட்சியில் ரயிலில் அவர் படுக்க வைத்ததும் அதைத்தான் என்பது தெரிய வரும்போது 'ஏப்ரல் ஃபூல்' ஆனது போல் முகத்தில் அசடு தட்டுகிறது நமக்கு. சுனேனாவைக் கொன்றது நகுலன் தான் என்று காவல்துறை தீவிரமாக தேடிக்கொண்டிருக்க, கொன்றது யாராயிருக்குமென நம்மையும் தீவிரமாய் யோசிக்க வைத்து 'அட..இது கூடவா தெரில? சொத்துக்காக அவங்க சித்தப்பா தான் கொன்னுட்டார்' என்று பாரம்பரியமிக்க புராதன முடிவையே சொல்லி அசத்தியிருக்கிறார்கள்!<br /><br />காதலர்கள் பைக்கில் சுற்றுதல், ஹோட்டலில் சந்தித்தல், மேசையினடியில் காலுரசிக் கொள்ளுதல், பூக்கள் சிதறிக்கிடக்கும் சாலையில் கைகோர்த்து நடத்தல், தனியறையில் அரைகுறை ஆடையில் நடனமாடுதல், இதழோடு இதழ் பொருத்தி முத்தமிட்டுக் கொள்ளுதல் உள்ளிட்ட வழமையான தமிழ்த்திரையம்சங்கள் எதற்கும் குறைவின்றி, காட்சிக்குக் காட்சி ஏதோவோர் படத்தை நினைவூட்டியபடி நகர்கிறது முற்பாதி.<br /><br />முற்பாதி தான் இப்படி நிறைய படங்களை ஞாபகப்படுத்துகிறதே தவிர பிற்பாதி படம் அப்படியில்லை. அது சந்தேகத்திற்கிடமில்லாமல் முழுமையாய் கமல்ஹாசனின் 'குணா'வை மட்டுமே நினைவில் நிறுத்துகிறது! படம் ஆரம்பித்ததிலிருந்தே இறந்து போன காதலியின் உடலைத்தான் நகுலன் தூக்கிக் கொண்டு அலைகிறார், 'எங்களை வாழ விடுங்கள்' என்று எல்லோரையும் கெஞ்சிக் கொண்டு திரிகிறார் என்பதை இடைவேளை முடிந்ததுமே இயக்குனர் சொல்லி விடுவதால், படம் முடிந்துவிட்ட திருப்தியோடு பார்வையாளர்கள் அப்போதே கிளம்பி விட ஏதுவாயிருக்கிறது! இதன் மூலம் படம் பார்ப்பவர்களுக்கு நேரம் வெகுவாய் மிச்சமாகிறது!!<br /><br />நாயகி சுனேனா அழகாக இருக்கிறார். பிரேதம் போலவே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்! ஆனால் எப்போது சாவார், எப்போது பிழைத்தெழுந்து நடனமாடுவார் என்பது இயக்குனருக்கே புரியாத புதிராயிருந்திருக்க வேண்டும். தோழிக்கு காதல் கடிதம் கொடுத்த நண்பனுக்கு "இது படிக்கற வயசு.. நீ எவ்ளோ கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்றன்னு எனக்கு தெரியும். படிப்பை கவனிடா" என்று அட்வைசிக் கொண்டிருந்த நாயகி, வீட்டை விட்டு துரத்தப்பட்டு தன்னிடமே அடைக்கலமாகியிருக்கும் நகுலன் தன்னைக் காதலிப்பது தெரிந்ததும், தன் கல்லூரியிலிருந்து விலகி அவர் வகுப்பிலேயே சேர்ந்து பயில்கிறார். காதலித்தாலும் கல்லூரி மாறியாவது கல்வியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் போலிருக்கிறது. காதல் புகினும் கற்கை நன்றே!<br /><br />படம் முழுக்க கையில் கிடைப்பவர்களை எல்லாம் கொன்று தீர்க்கிறார் நகுலன். இறுதிக்காட்சி கொடூரம்.<br /><br />சரி... ஒட்டுமொத்தமாய் குறை மட்டும் சொல்வானேன்?<br /><br />1. நகுலனின் நடிப்பை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பாய்ஸில் பார்த்த நகுலனில் கால்வாசி நகுலன் தான் இருக்கிறார் இப்போது! நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் மின்னல் வேகம். கோபமும் குழந்தைத்தனமும் மாறி மாறி பிரதிபலிக்கிறது முகத்தில்.<br /><br />2. படத்தின் மற்றுமோர் நாயகன் 'நாக்க முக்க' பாடல். அரங்கம் அதிருகிறது. படத்தில் 2 முறை இடம் பெற்றிருந்தபோதும் ஒவ்வொரு முறையும் ஒன்ஸ்மோர் கேட்டபடி குத்தாட்டம் போடுகிறார்கள் இளைஞர்கள்.<br /><br />3. விஜய் ஆண்டனியின் இசையும் தாமரையின் வரிகளும் பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கும் விதமும் ஒன்றையொன்று விஞ்சத் துடிக்கின்றன.<br /><br />4. மலைப்பிரதேசத்தில் தொலைவில் நடக்கும் சண்டைக்காட்சி அருமை.<br /><br />5. படத்தில் குறிப்பிடத்தக்க மற்றுமோர் நபர் காவல்துறை அதிகாரியாய் வரும் சம்பத். சரோஜாவிலேயே கலக்கியிருந்தார் மனிதர். இதிலும் குறை வைக்கவில்லை.<br /><br />தன்னால் இயன்றவரை திரைக்கதையை வைத்து சமாளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் பி.வி.பிரசாத். அத்தனை முயற்சிகளும் கதையிலிருக்கும் மாபெரும் ஓட்டையில் விழுந்து விடுவது தான் பரிதாபம்.<br /><br /><span style="color:#006600;">பி.கு:</span> <strong><span style="color:#cc0000;">சரோஜா படம் ரொம்ப நல்லாருக்கு!<br /></span></strong>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com59tag:blogger.com,1999:blog-32904504.post-22982270591721286372008-09-29T12:36:00.006+05:302008-09-29T13:02:45.027+05:30குறையொன்றுமில்லை..<span style="color:#6600cc;">பூக்களாலான பள்ளத்தாக்கினுள்</span><br /><span style="color:#6600cc;">விழுந்து விட்டாற் போலிருக்கிறது.</span><br /><span style="color:#6600cc;"></span><br /><span style="color:#6600cc;">கூறும் முன்பாய்க்</span><br /><span style="color:#6600cc;">குறைகள் களையப்படுகின்றன.</span><br /><span style="color:#6600cc;"></span><br /><span style="color:#6600cc;">உவகையில் கசியும் விழிநீர்</span><br /><span style="color:#6600cc;">தரைவிழும் முன்னர்த்</span><br /><span style="color:#6600cc;">தடுத்தாட் கொள்ளப்படுகிறது.</span><br /><span style="color:#6600cc;"></span><br /><em><span style="color:#6600cc;">'போய பிழையும்</span></em><br /><em><span style="color:#6600cc;">புகுதருவான் நின்றனவும்</span></em><br /><span style="color:#6600cc;">உன் முன்னால் </span><br /><em><span style="color:#6600cc;">தீயினில் தூசாகித்'</span></em><br /><span style="color:#6600cc;">திசை கெட்டழிகின்றன.</span><br /><span style="color:#6600cc;"></span><br /><span style="color:#6600cc;">இருபெரும் கரைகளுக்குள்</span><br /><span style="color:#6600cc;">பெருகியோடும் நதியாய்</span><br /><br /><span style="color:#6600cc;">உன்னிரு கரங்களுக்குள்</span><br /><span style="color:#6600cc;">வாழ்ந்துவிட தோன்றுகிறது...</span><br /><span style="color:#6600cc;">ஒரு சில யுகங்களேனும்.</span>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com57tag:blogger.com,1999:blog-32904504.post-51724707268186827932008-09-17T13:45:00.006+05:302008-09-17T14:17:47.965+05:30அக்மதோவாவும் அக்கரைப் பூக்களும்முதல் வாசிப்பிலேயே எவரிடமாவது பரிந்துரைக்கத் தூண்டிய தொகுப்பு நூல் இது. என்ன காரணத்தாலோ விட்டுப் போனது. இன்றைய விடியலை மேலும் அடர்வு மிக்கதாய் மாற்றியதில் இத்தொகுப்பின் மீதான மீள்வாசிப்பிற்கும் பங்குண்டு என்பதால் இன்றே எழுதிவிடுவதென்ற தீர்மானத்தோடு துவங்கியிருக்கிறேன்.<br /><br />இது ஒரு கவிதைத் தொகுப்பு. அக்மதோவா முதலாக 18 பிறமொழி கவிஞர்கள் எழுதிய, தேர்ந்தெடுக்கப்பட்ட 53 கவிதைகளின் மொழிபெயர்ப்பு. பெரும்பாலும் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதைகள், வரிவரியாய் மணலோடிய படுகையைச் சுட்டிக்காட்டி 'இதற்கு முன் இங்கு ஓர் நதியிருந்தது' எனச் சொல்வன போன்று அமைந்திருப்பதாகவே படுமெனக்கு. சற்றும் இளகலில்லாத ஒரு வறட்சி அதில் படிந்திருப்பது, கவிதைகளை கணக்குப் புத்தகங்கள் போலாக்கி விடுகிறது இல்லையா? ஆனால் வ.கீதாவும் எஸ்.வி.ராஜதுரையும் மொழிபெயர்த்திருக்கும் இக்கவிதைகள் மேற்படி குற்றச்சாட்டிலிருந்து பெருமளவு தப்பியிருக்கின்றன.<br /><br />இந்நூலில் அன்னா அக்மதோவாவின் 13 கவிதைகளை பெயர்த்துத் தந்திருக்கிறார்கள். மேலதிகமாய் அவரைப் பற்றிய விரிவான முன்னுரை ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது.<br /><br /><em><span style="color:#006600;">"சோவியத் யூனியனின் தகர்வுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் மாஸ்கோவின் முன்னணி இலக்கிய ஏடான 'அக்டோபர்' "இரங்கற்பா" என்னும் தொடர்கவிதையை வெளியிட்டதன் மூலம் சென்ற நூற்றாண்டின் மாபெரும் கவிஞர் ஒருவருக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டு வந்திருந்த அநீதியை துடைத்தெறிந்தது. அப்படைப்பு உருவாக்கப்பட்டு 47 ஆண்டுகளுக்கும் அவற்றைப் படைத்தவர் மறைந்து 21 ஆண்டுகளுக்கும் பிறகு அது வெளியிடப்பட்டமை சோவியத் சமூக வாழ்வில் அறநெறிகள் புதுப்பிக்கப்படுவதன் அறிகுறியாகத் தெரிந்தது"</span></em><br /><br />என்று தொடங்கும் முன்னுரை, அடுத்த 15 பக்கங்களில் அவரின் வாழ்க்கையை, ஆளுமையை, காதலை, பிரிவை, வலியை, தேசத்தின் மீதான வலுவான பிடிப்பை, எந்த நிர்ப்பந்தத்திற்கும் வளைந்து கொடுக்காத அவரது கவிதைகளை... தொடர்ச்சியாய் பேசிப்போகிறது.<br /><br />அன்னா அக்மதோவா ஒரு ரஷ்யர். ரஷ்ய இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க கவிஞர். அதைவிடவும் அவர் ஓர் பெண் கவிஞர். விசும்பென விரிந்து கிடக்கும் தமிழின் நீள்நெடும் இலக்கிய வரலாற்றிலும் கூட பெண் கவிஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டுமே காணக் கிடைப்பதால், அடக்குமுறைகளை எதிர்த்து உரத்து எழும், முதல் பெண் குரல் உலகின் எந்த மூலையிலிருந்து ஒலித்தாலும் அக்குரல் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கிறது!<br /><br />அக்மதோவா 1899 க்கும் 1966 க்கும் இடைப்பட்ட காலத்தில் ரஷ்யாவில் வாழ்ந்தவர். புகழ்பெற்ற கவிஞரான நிகோலாய் குமிலியோவை பள்ளிப்பருவத்திலேயே காதலித்து மணந்தவர். தவறான குற்றச்சாட்டின் பெயரால் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் துயரத்திற்குத் துணையாய் தன் கவிதைகளை மட்டுமே அருகிருத்திக் கொண்டவர். பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகளும் பொதுமக்களும் கொடிய அடக்குமுறைகளுக்கும் மரணதண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட காலத்தில் அம்மக்களின் வேதனைகளுக்கு நிரந்தர சாட்சியமாய் 'இரங்கற்பா' என்னும் தொடர்கவிதையை எழுதினார். அவர் இறந்து 21 ஆண்டுகளுக்கு பிறகாய் அக்கவிதையை வெளியிட்டு பரிகாரம் தேடிக்கொண்டது 'அக்டோபர்' இலக்கிய இதழ். அடுத்து வந்த 1989 ம் ஆண்டை 'அக்மதோவா ஆண்டாக' அறிவித்து அவரின் புகழை உறுதிப்படுத்தியது யுனெஸ்கோ நிறுவனம். தனது சுயத்தின் வெளிப்பாடுகளை, ஆணின் அனுபவங்களையே சார்ந்து நிற்கும் மொழியின் மீதே சுமத்தி தனது தனிப்பட்ட அர்த்தங்களுக்கு அக்மதோவா புதுக்குரல் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் வ.கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும்.<br /><br />இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் அன்னாவின் 13 கவிதைகளில் என்னை மிகவும் அலைக்கழித்த கவிதை இது..<br /><br /><em><span style="color:#3333ff;">"ஆழ்கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல</span></em><br /><em><span style="color:#3333ff;">என்னிடத்தில் ஒரே ஒரு நினைவு மட்டும்.</span></em><br /><em><span style="color:#3333ff;">அதை நான் போக்க முடியாது, போக்க விரும்புவதுமில்லை</span></em><br /><em><span style="color:#3333ff;">அது ஒரு உவகை, அது வேதனையும் கூட.</span></em><br /><em><span style="color:#3333ff;">எனக்குத் தோன்றுகிறது என் கண்களை உற்றுப் பார்ப்பவருக்கு</span></em><br /><em><span style="color:#3333ff;">அது தெளிவாகத் தெரியுமென்று.</span></em><br /><em><span style="color:#3333ff;">சோகம் ததும்பும் கதையொன்றைக் கேட்பவரை விட</span></em><br /><em><span style="color:#3333ff;">அவர் நெஞ்சம் மேலும் கனக்கும், துயருறும்.</span></em><br /><em><span style="color:#3333ff;">எனக்குத் தெரியும் கடவுளர் மனிதரைக் </span></em><br /><em><span style="color:#3333ff;">கல்லாக மாற்றியுள்ளனர்,</span></em><br /><em><span style="color:#3333ff;">மனங்களை அப்படியே விட்டுவைத்து.</span></em><br /><em><span style="color:#3333ff;">அந்த அற்புதமான சோகங்கள் </span></em><br /><em><span style="color:#3333ff;">இன்னும் எஞ்சியிருக்க வேண்டுமென்று</span></em><br /><em><span style="color:#3333ff;">என் நினைவாக மாற்றப்பட்டு விட்டாய் நீ."</span></em><br /><br />நிஜம் தான்.. கல்லை மனமாய்க் கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி எவரும் அக்கறை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மனம் மரிக்காமலிருக்கையிலேயே வெளியில் கல்லாய்ச் சமைந்த மனிதர்கள் பெரும் பரிதாபத்திற்குரியவர்கள். எல்லோருடைய மனங்களின் அடியாழத்திலும் சில அற்புதமான சோகங்கள், மறக்க விரும்பாத நினைவுகள் குளிர்ந்த கற்களாய் தேங்கிக் கிடப்பதை யாரேனும் மறுக்கக் கூடுமா என்ன?<br /><br />மற்றுமோர் கவிதையில்..<br /><br /><span style="color:#3333ff;">"அன்பு இல்லாமலிருப்பது </span><br /><span style="color:#3333ff;">என் நிம்மதியைக் கூட்டத்தான் செய்கிறது" </span><br /><br />என்கிறார் அக்மதோவா. அன்பு ஒரு வகையில் மெல்லிய கண்ணாடிச் சிற்பம் போன்றது தான் இல்லையா? சிற்பத்தின் மீதான பிடி இறுகும்போதும் விலகும்போதும் மனங்கள் நொறுங்குவது தவிர்க்க முடியாததாகிறது. அன்பு இல்லாமலிருப்பதும் கூட சில நேரங்களில் ஆசுவாசமாய்த் தான் இருக்கும் போல!<br /><br />நற்றிணையில் ஓர் பாடல் உண்டு. தலைவி தோழியரோடு விளையாடுகையில் என்றோ மண்ணில் புதைத்து வைத்த புங்க விதை முந்தைய மழையில் முளை விட்டிருக்கும். 'இம்மரம் உன்னை விடவும் சிறந்தது உனக்கு சகோதரி போன்றது' என்று தாய் சொல்ல.. பாலும் நெய்யும் ஊற்றி அந்த மரத்தை வளர்க்கிறாள் தலைவி. அம்மரத்தினடியில் தலைவன் அவளைச் சந்திக்க வருகையில் 'என் சகோதரியின் முன்பாக உங்களுடன் காதல்மொழி பேச நாணமாயிருக்கிறது' என்பாள். இயற்கையோடு இயைந்த வாழ்வை, எக்காலத்தும் மாறாமலிருக்கும் பெண்களின் மெல்லிய உணர்வுகளை நுட்பமாய் முன்வைக்கும் கவிதை அது. அக்மதோவாவிடம் இதே நுண்ணுணர்வை காண நேர்ந்தபோது மொழி, நாடு, இனம் என மனிதன் வகுத்துக்கொண்ட அற்ப எல்லைகள் அனைத்தும் சட்டென்று இல்லாமலாகின. இதயத்துடிப்பு போல எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகளும் ஒன்று தானோவெனும் ஐயம் மீண்டுமொருமுறை தோன்றி மறைந்தது.<br /><br />அக்மதோவாவால் நேசிக்கப்பட்டிருந்த ஒரு வெண்ணிற வில்லோ மரம் வெட்டப்பட்டு விடுகிறது. அப்போது எழுதுகிறார்...<br /><br />"<span style="color:#3333ff;"><em>நான் நேசித்தவை புற்களும் புதர்களும்.</em></span><br /><span style="color:#3333ff;"><em>எல்லாவற்றையும் விட ஒரு </em></span><br /><span style="color:#3333ff;"><em>வெண்ணிற வில்லோ மரத்தையே.</em></span><br /><span style="color:#3333ff;"><em>அதுவும் விசுவாசத்துடன் </em></span><br /><span style="color:#3333ff;"><em>வாழ்நாள் முழுவதும் என்னோடே இருந்தது</em></span><br /><span style="color:#3333ff;"><em>..............................................................</em></span><br /><span style="color:#3333ff;"><em>என்ன ஆச்சரியம்! </em></span><br /><span style="color:#3333ff;"><em>அதன் ஆயுளையும் விஞ்சிவிட்டேன் நான்.</em></span><br /><span style="color:#3333ff;"><em>குத்துக்கட்டை மாத்திரம் அங்கே நிற்கிறது:</em></span><br /><span style="color:#3333ff;"><em>..............................................................</em></span><br /><span style="color:#3333ff;"><em>நானோ மெளனத்தில்.. </em></span><br /><span style="color:#3333ff;"><em>ஒரு சகோதரனை இழந்தவளைப் போல"<br /></em></span><br />வேறு சில கவிதைகளில்,<br /><br /><em><span style="color:#3333ff;">"தெருவின் பனிப்போர்வையின் மீது</span></em><br /><em><span style="color:#3333ff;">முந்தய நாள் நான் விட்டுச் சென்ற </span></em><br /><em><span style="color:#3333ff;">என் பாதச்சுவடுகளைத் தேடி ஏமாறுவேன்"<br /></span></em><br />எனத் தன் குழந்தைமையை பதிந்து செல்லும் அக்மதோவா,<br /><br /><span style="color:#3333ff;"><em>"குழந்தைகள் இறைக்கும் சாலையோர பூக்கள்</em></span><br /><span style="color:#3333ff;"><em>யாரும் பொருட்படுத்தாக் காட்டு மலர்கள்..."</em></span><br /><br />என அழகான அவதானிப்புகளையும் சுட்டிச் செல்கிறார்.<br /><br />துயரத்தாலும் அவலச்சுவையாலும் சமூக அநீதிகளுக்கெதிரான கூக்குரல்களாலும் நிரப்பப்பட்டிருக்கும் அவரின் 'இரங்கற்பா' இப்படி தொடங்குகிறது...<br /><br /><span style="color:#3333ff;"><em>"இத்தகைய துயரம் மலைகளுக்குக் கூனல் விழச் செய்துவிடும்</em></span><br /><span style="color:#3333ff;"><em>ஆறுகளின் போக்கைத் திருப்பி விடும்..."</em></span><br /><span style="color:#3333ff;"><em>................................................................................</em></span><br /><span style="color:#3333ff;"><em>இறந்தவர் மட்டுமே அன்று புன்னகைத்தனர்</em></span><br /><span style="color:#3333ff;"><em>அமைதியடைந்ததில் ஆனந்தம்."</em></span><br /><br />அக்மதோவா தவிர ஷேக்ஸ்பியர், ஜான் கீட்ஸ், பெய் டாவோ, ப்ளாகா டிமிட்ரோவா, கரோல் சத்தியமூர்த்தி உள்பட 17 கவிஞர்களின் சிறந்த கவிதைகள் அக்கரைப் பூக்களாய்த் தொகுக்கப்பட்டிருக்கின்றன இதில்.<br /><br /><span style="color:#990000;">"கூழாங்கல் </span><br /><span style="color:#990000;">ஒரு வடுவற்ற படைப்பு</span><br /><span style="color:#990000;">அதற்கு நிகர் அது தான்</span><br /><span style="color:#990000;">அதற்குத் தன் வரம்புகள் தெரியும்</span><br /><span style="color:#990000;">அதில் நிரம்பியுள்ளது </span><br /><span style="color:#990000;">ஒரு கூழாங்கல் அர்த்தம்"</span><br /><br />எனத்தொடங்கும் ஜிபிக்னியூ ஹெர்பர்ட்டின் கூழாங்கல் கவிதை மிக அருமை.<br /><br />ப்ளாகா டிமிட்ரோவாவின் 'சாலையில் தனியாய் ஒரு பெண்'<br /><br /><span style="color:#990000;">"இன்னும் ஆண்களுடையதாகவே இருக்கும்</span><br /><span style="color:#990000;">இந்த உலகத்தில் </span><br /><span style="color:#990000;">எங்கும் ஆபத்தும் தொல்லையும் தான்" </span><br /><br />எனவாரம்பித்து எப்போதும் மாறாமலிருக்கும் பெண்ணின் பாதுகாப்பற்ற நிலையைவெளிச்சமிட்டுக் காட்டுகிறது.<br /><br />இவை தவிர <span style="color:#3333ff;">ஆசை, அந்த காதலை மீண்டும் என்னிடமிருந்து கேட்காதே, கை ரேகை பார்த்தல், காலதேவனின் அரிவாள், எனது மனைவியைப் பற்றிய எளிய பாடல், காதலும் சாதலும், உடைந்த நிலா</span> ஆகிய கவிதைகள் இந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தகுந்தவையாய் இருக்கின்றன.<br /><br /><br /><span style="color:#990000;">நூல்பெயர் :</span> அக்மதோவா - அக்கரைப்பூக்கள்<br /><span style="color:#990000;">தமிழாக்கம் :</span> வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை<br /><span style="color:#990000;">விலை :</span> ரூ.65<br /><span style="color:#990000;">பதிப்பு :</span> அடையாளம் பதிப்பகம். (04332 - 273444)<br /><a href="mailto:admin@adaiyalam.com">admin@adaiyalam.com</a>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com32tag:blogger.com,1999:blog-32904504.post-3942995647646410542008-09-10T10:35:00.001+05:302008-09-10T11:57:13.439+05:30மறுபடி ஒரு மொக்கைப் படம் பார்த்து தொலைச்சிட்டேன்...<div align="left"><img id="BLOGGER_PHOTO_ID_5243146392448607058" style="CURSOR: hand" height="279" alt="" src="http://4.bp.blogspot.com/_114peM9BqK0/SMNl3VNFI1I/AAAAAAAAAVk/2jMtU240ojs/s400/photo.jpeg" width="377" border="0" /> </div><br /><br /><div align="left"></div><div align="left"><span style="color:#993399;">நடிப்பு :</span> விநய், பாவனா, லேகா வாஷிங்டன், கிஷோர்குமார், அதிசயா, விவேக், சந்தானம்</div><div align="left"><span style="color:#993399;">திரைக்கதை & இயக்கம் :</span> ஆர்.கண்ணன்</div><div align="left"><span style="color:#993399;">இசை:</span> வித்யாசாகர்</div><div align="left"><span style="color:#993399;">தயாரிப்பு :</span> சத்யஜோதி ஃபிலிம்ஸ்</div><br /><div align="left"></div><div align="left">சனிக்கிழமை பொன்மாலைப் பொழுது! +2 படிக்கும் அருமை தங்கையிடமிருந்து போன். "அக்கா ட்யூஷனுக்கு மட்டம் போட்டுட்டேன்.. ஜெயம்கொண்டான் போலாமா?" விதி வலியது. ஆடு எப்பவும் கசாப்புக் கடைக்காரனைத் தான நம்பும்? அடிச்சி பிடிச்சி கிளம்பிப் போயாச்சு. உள்ள நுழையும்போது படம் போட்டு 10 நிமிஷமாகியிருந்துச்சு. அடடா! கொஞ்சம் முன்ன வந்திருக்கலாமேன்னு வருத்தப்பட்டுட்டே பாக்க ஆரம்பிச்சோம். இண்டர்வெல்ல "அடடா! ரொம்ப பின்ன வந்திருக்கலாமே" ன்னு மறுபடி ஒருமுறை வருத்தப்பட்டோம்!!</div><br /><div align="left"></div><div align="left">படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் 'படம் எப்படியிருந்துச்சு? என்ன கதை?'ன்னு கேட்டாங்க அம்மா. ஒரு ஆர்வக் கோளாறுல ரொம்பவும் சுருக்கமா கதை சொல்ல ஆரம்பிச்சேன். அதிரடியா ஆரம்பிச்சா நல்லா இருக்குமேன்னு இப்படி தொடங்கினேன்..</div><br /><div align="left"></div><div align="left">"வில்லன் ஹீரோவ பெரிய சுத்தியால அடிக்க வர்றான் மா.. ஹீரோ அதை தடுக்கறார். அப்ப என்னாகுதுன்னா... அந்த இரும்பு தவறிப் போய் வில்லனோட வைஃப் மண்டைல விழுந்து அவ செத்து போய்டறா... அதுல இருந்து வில்லனுக்கு வருது பாருங்க ஒரு வெறி..."</div><br /><div align="left"></div><div align="left">"அப்ப தான் வெறி வருதா? அப்ப ஏன் முன்னயே சுத்தில அடிக்க வந்தானாம்?"</div><div align="left"></div><br /><div align="left">"அது வேற ஒரு பிரச்சினைக்கு.. ஹீரோவோட தங்கச்சிக்கு வில்லன் சப்போர்ட்டா வர்றான். அதனால ஹீரோ அவனை அடிச்சிடறார்"</div><br /><div align="left"></div><div align="left">"ஹீரோ தங்கச்சிக்கு வில்லன் ஏன் சப்போர்ட் பண்றான்??!!"</div><br /><div align="left"></div><div align="left">"இது ஒரு நல்ல்ல கேள்வி! ஹீரோவோட வீட்டை அவனுக்கு தெரியாம அவன் தங்கச்சி விக்கறா. அதை தடுக்கும்போது தான் இப்டியாய்டுது"</div><br /><div align="left"></div><div align="left">"தங்கச்சி ஏன் அண்ணனுக்கு தெரியாம சொத்தை விக்கனும்?"</div><div align="left"></div><br /><div align="left">"அதுவந்து... அது இன்னொரு பிரச்சினை.. ஹீரோவோட அப்பாவுக்கு ரெண்டாந்தாரத்துப் பொண்ணு அது. சொத்துக்காக அடிச்சுக்கறாங்க.."</div><br /><div align="left"></div><div align="left">இப்டியே ஒவ்வொரு பிரச்சினையா விரிவா எடுத்து சொல்லி கதை ஆரம்பம் வரை போய் மறுபடி ரிவர்ஸ் கியர் எடுத்து க்ளைமாக்ஸ் வரை போய் சுருக்க்க்கமா நான் சொல்லி முடிச்சப்ப... அம்மா, "படத்துக்கு நடுவுல புகை பிடிக்காதீர், அஜந்தா பாக்குத்தூள் னு கார்டெல்லாம் வருமே? அதை சொல்லாம விட்டுட்டியே?" ன்னு கேக்கறாங்க. (அவ்வ்வ்வ்) . நானென்னங்க செய்வேன்? வாழைப்பழத்தை விளக்கெண்ணை விட்டு பிசைஞ்ச மாதிரி இருக்கு கதை. இத விட தெளிவா வேறெப்படி சொல்றதாம்?</div><br /><div align="left"></div><div align="left">சரி வேற மாதிரி சொல்றேன்.. உங்களுக்காச்சும் புரியுதான்னு பாருங்க. </div><br /><div align="left"></div><div align="left">7 வருஷமா லண்டன்ல இருந்த விநய், அப்பா செத்ததும் திரும்பி வர்றார் இந்தியாக்கு. இவ்ளோ நாள் சம்பாதிச்ச காசுல இங்கயே பிசினஸ் தொடங்கலாம்னு நினைக்கறார். வந்து பாத்தா பேங்க்ல பணமேயில்ல. சம்பாதிச்சு அனுப்பின 60 லட்சமும் எங்க போச்சின்னு தெரில. அப்பாக்கு இன்னொரு மனைவி இருக்காங்கன்னும் 20 வயசுல பொண்ணொருத்தி (லேகா வாஷிங்டன்) இருக்கான்னும், தான் அனுப்பின பணத்துல அப்பா மதுரைல ஒரு வீடு வாங்கி வெச்சிருக்கார்னும் விசாரிச்சு தெரிஞ்சுக்கறார்.</div><br /><div align="left">அப்பா சொத்து தனக்குத் தான்னு ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க. லேகாக்கு அமெரிக்காக்கு போய் படிக்க பணம் வேணுமாம். ரெண்டு பேரும் அந்த வீட்டை விக்க முயற்சி பண்றாங்க.</div><br /><div align="left"></div><div align="left">ஆச்சா? கத ஒரு மாதிரி வெளங்குதா? இது வரைக்கும் எனக்கு என்னவோ தினத்தந்தில நிலத்தகராறு, சொத்துத் தகராறு நியூஸ் படிக்கறாப்ல இருந்துச்சி.</div><br /><div align="left"></div><div align="left">அப்பால விநய் என்ன செய்றார்னா.. நேரா மதுரைக்கு போய் அந்த வீட்லயே தங்கி அங்க குடியிருக்கற பாவனா ஃபேமிலியை வீட்டைக் காலி பண்ண சொல்றார். பாவனா முடியாதுன்றாங்க. பாவனாவை கன்வின்ஸ் பண்றதுக்காக "நாம சின்ன வயசுல ஒன்னாப் பழகியிருக்கோமே" ன்னு இஷ்டத்துக்கு ரீல் விடறார். தமிழ் சினிமா நியதிப்படியும் டைரக்டர் சொல்லிக்குடுத்த மாதிரியும் பாவனாக்கு விநய் மேல காதல் வந்திடுது. </div><br /><div align="left"></div><div align="left">ஒரு வழியா அவங்க வீடு காலி பண்ணினதும் வீட்டை அளந்து பாத்தா பக்கத்து வீட்டுக்காரன் 1900 சதுரடி ஆக்ரமிச்சு கட்டிருக்கான். ( என்ன அநியாயம் பாருங்க!) அவன் மேல கோர்ட்ல கேஸ் போட்டு, வாதாடி, ஜெயிச்சு, நோட்டீஸ் ஒட்டி, ஆக்ரமிப்பெல்லாம் இடிச்சு, வீட்டை விக்க ஏற்பாடெல்லாம் பண்ணிடறார். (ஆஆவ்வ்வ்வ்) </div><br /><div align="left"></div><div align="left"></div><div align="left">அப்ப பாத்து தங்கச்சி கிளம்பி வந்து மதுரைய கலக்கிகிட்டிருக்கற குணா-ன்ற தாதா துணையோட வீட்டை விக்கப் பாக்கறா. வில்லனும் என்னவோ கல்யாணத்துக்கு போற மாதிரி பொண்டாட்டியோட குடும்ப சகிதமா ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு வந்திடறார். கரெக்டா விநய் ஸ்பாட்டுக்கு வந்து தங்கச்சியப் பாத்து "கையெழுத்து போடாத" ன்றார். வில்லன் "நீ போடு" ன்றார். இவர் "போடாத"ங்கிறார். அவரு "போடு"ங்கிறார். வந்த ஆத்திரத்துல எனக்குத்தான் யார் தலைலயாச்சும் கல்லைத் தூக்கிப் போடலாமான்னு இருந்துச்சு. </div><br /><div align="left"></div><div align="left">இந்த சண்டைல வில்லனோட வைஃப் செத்துப் போய்டறாங்களா அங்க தான் கதைல ஒரு ட்விஸ்ட் வைக்கறாங்க. (அங்ங்ங்ங்க கொண்டு போயா வெச்சீங்க? - நன்றி விவேக்!) வில்லன் துரத்த ஆரம்பிக்கறார். வீடே வேணாம்டா சாமீன்னு இவங்க ஊருக்கு ஓடிர்றாங்க. ஊடால பாவனாவும் சென்னைக்கு வந்து "நாங்க சின்ன வயசுல இருந்து காதலிக்கிறோம்.. எனக்கு அவுக(விநய்) மடில தான் காது குத்தினாங்க"னு அவங்க பங்குக்கு நமக்கு காது குத்தறாங்க . (அய்ய்ய்ய்ய்யோ!) பணம் கிடைக்காம ஹீரோ சுத்தமா வெறுத்துப் போய் மறுபடி லண்டன் கிளம்பறார். அவ்ளோ நாள் சும்மா இருந்த வில்லன், சரியா இவரு கிளம்பற அன்னிக்கு ராகுகாலம் எமகண்டம் பாத்து லேகாவ கடத்திடறார். ஏர்போர்ட் வரைக்கும் போன விநய் நம்ம அபிஅப்பா மாதிரியே ஃப்ளைட்டை கோட்டை விட்டுட்டு தங்கச்சிய காப்பாத்தப் போறார்.</div><br /><div align="left"></div><div align="left">விநய் லேகாவை காப்பாற்றினாரா... ? லேகாவின் லட்சியம் நிறைவேறியதா? தாதா குணாவை போலீஸ் கைது செய்ததா? அண்ணனும் தங்கையும் ஒன்று சேர்ந்தார்களா? பாவனா - விநய் காதல் என்னவாயிற்று? விடைகளை வெள்ளித்திரையில் காண்க ன்னு நான் சொன்னா நீங்க என்னை அடிக்க வர மாட்டீங்க தானே? </div><br /><div align="left"></div><div align="left">இயக்குனர் ஆர்.கண்ணன் மணிரத்தினத்தின் உதவியாளராம். நம்பறாப்ல இல்ல படம். (சைடு பிசினஸா பழனில பஞ்சாமிர்தம் வித்துட்டிருந்தார் போல) இசை வித்யாசாகர் ஒரே ஒரு பாட்டு நல்லாருந்த மாதிரி இருந்துச்சு.. அதும் இப்ப மறந்து போச்சு. படத்துல நகைச்சுவைக்கு விவேக்கும் சந்தானமும். சந்தானம் ஸ்கோர் பண்றார். இவங்க ரெண்டு பேரை விடவும் அருமையா காமெடில கலக்கியிருக்கறது சிவாஜி புகழ் 'லக லக லக' இன்ஸ்பெக்டர் லிவிங்ஸ்டன்! க்ளைமாக்ஸ்ல, கடைசீஈஈஈஈ ஆளா வந்து டுமீல்னு வில்லன சுட்டுட்டு "நான் பாத்துக்கறேன் நீங்க போங்க" ன்னு கம்பீரமா விநய்கிட்ட சொல்ற நகைச்சுவை காட்சியை நான் ரொம்பவே ரசிச்சு சிரிச்சேன்!! </div><div align="left"></div><div align="left"> </div><div align="left">விநய்க்கு தமிழ்நாட்டுல 'விலைவாசி ஏறிட்டே போகுது, டீசல் கிடைக்க மாட்டிங்குது, எப்பவாச்சும் தான் கரெண்ட் வருது..' ன்னு கவலை போலிருக்கு.. எப்பவும் சோகமாவே இருக்கார். க்ளைமாக்ஸ்ல அவர் வில்லனுக்கு அட்வைஸ் பண்ற சீன் இருக்கே... ஸ்ஸஸ்ஸ்ஸ்... (கேப்டன்! உங்களைப் போய் எல்லாரும் கிண்டல் பண்றாங்களே? அடுத்த எலக்ஷன்ல என் ஓட்டு தேமுதிகவுக்கு தான்!) </div><br /><div align="left"></div><div align="left">ஆனா இத்தனை கொடுமையையும் மறக்கற அளவுக்கு பாவனா அழகா இருக்காங்க. விநய் தன்னை பொண்ணு பாக்க வந்திருக்கறதா நினைச்சுகிட்டு தயங்கி தயங்கி பேசற காட்சி அழகு! வில்லன் மனைவியா வர்ற அதிசயா... கொஞ்சமே கொஞ்சம் காட்சிகள்ல வந்தாலும் நடிப்பு அசத்தல்! இலவச இணைப்பு மாதிரி பாவனா தங்கச்சியா வர்ற சின்ன பொண்ணு செம க்யூட். பாட்டெல்லாம் கேக்கற மாதிரி இல்லன்னாலும் பாக்கற மாதிரி இருக்கு... </div><div align="left"></div><div align="left">மொத்தத்தில் ஜெயம்கொண்டான் ரொம்பவும் சகிப்புத் தன்மையுள்ள மக்கள்ஸ் (அதாவது என்னய மாதிரி!) ஒரே ஒரு முறை கண்ண மூடிக்கொண்டு பார்க்கத் தகுந்த படம் என்று இந்த விமர்சனக் குழு பரிந்துரைக்கிறது. </div><br /><div align="left"></div><div align="left"><span style="color:#3333ff;">ஜெயம்கொண்டான் - மறைக்கப்பட்ட உண்மைகள் :</span> </div><div align="left"></div><div align="left"></div><div align="left">படம் முடிஞ்சு வெளில வந்ததும் நானும் தங்கச்சியும் ஒருத்தரையொருத்தர் பரிதாபமா பார்த்துகிட்டோம்... அப்றம் தோள்ல கை போட்டுகிட்டு "நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை.. டொய்ங்க்க்..." அப்டின்னு பாடிகிட்டே வீட்டுக்கு போய்ட்டோம்.</div><div align="left"></div><div align="left"></div>காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.com72